17/6/25
காதல் மழைச்சாரல்
12/2/25
நீரின் ஆழம்

11/2/25
மனத்தில் உதித்திடும் வதனம்

இரவில் தனித்திடும் தருணம்மனத்தில் உதித்திடும் வதனம்அரைநொடி கண்ட முகம் - இருவர்ஆயுளை காட்டிய சுகம்
6/2/25
வரதட்சணை

ஆசையுடன் அன்புகொடுத்து வளர்த்தபிள்ளையை,
காசுக்கொடுத்து காவுகொடுக்கின்றோம்.....
தன்பிள்ளை மணம் முடித்துப்போகும்
இடத்தில் தயக்கம் இன்றி உபயோகிக்கக்
கொடுக்கப்பட்டப் பொருள் மரபு.......
இன்றோ திருமணம் என்றாலே...
திருடலாம் என சிலரின் கொள்கையாக மாறிவிட்டது........
ஆண்- பெண் இருவரிடமும்,
இருவீட்டாரிடமும் இருக்கிறது எதிர்ப்பார்ப்பு......
உன் வாழ்க்கையில் சேரப்போவது உன் பாதியோ,
மீதியோ அல்ல.. உன் இணை என்பதை நினைவில் கொண்டு....
அளவற்றப் பொருளை அல்லாமல்....
அளவற்ற அன்பை எதிர்பாருங்கள்.....
5/2/25
காதலுக்கு மொழியில்லை

மலைமீது வீசும் தென்றலே மலையாக வந்த காதலேஉன் பார்வை பார் போற்றும் கடலே என் பார்வை நீ போற்றும் அலையேகாதலுக்கு மொழியில்லை கண்கள் சொல்லும் வழியிதுஎத்தனை எத்தனை காலம் வாழும் மேலும் மேலும் இந்தக் காதல்சொல்லும் கதைகளைக் கேளு எண்ணில் அடங்காத இலைகளேகண்ணில் அடங்காத காவியங்களே காற்றில் அடங்காத கற்பனையேஉன்னிலும் என்னிலும் எண்ணிலும் அடங்காத உணர்வுகளே..காதல் இல்லாத துறைகள் உண்டோ காய்கள் இல்லாத கனிகள் உண்டோபிறர் மனம் காயப்படாமல் வாழ்ந்ததுண்டோ அன்புமழை பொழியட்டும்அதில் காசில்லாமல் குளிக்கட்டும் மனித மானுடம் பூக்கட்டும்காதல் எனும் கரைபோட்டு அன்பு எனும் மழையை நிரப்பிவிடுங்கள்அதில் அனைவரும் குளித்துவிடுங்கள் இதைவிடத் தீர்த்தமில்லைஇனி வருத்தமில்லை காதல் கரைவதில்லை அன்பு மழை சுடுவதில்லைஅன்புப் பூக்களைத் தேடி அலைய வேண்டாம் ஆயிரம் பூங்காக்களேஉங்களைத் தேடிவரும் அன்பை உள்ளத்திலும் உதட்டிலும் வைத்துக்கொண்டால்நண்பர்கள் கூட்டத்தைப்பார்த்து அன்புமழை பொழியத்தொடங்கியது..துளித்துளியாய் தூறலிட்டது மேகக்கூட்டம் அலையலையாய் அள்ளிக்கொண்டது அன்புக்கூட்டம்வண்ணங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று இது பூக்களின் பொன்மொழிஎத்தனை வண்னங்களில் பூக்கள் மழையால் மனப்பாடம் செய்யமுடியவில்லைஇறுதியில் வானவில்லை வரைந்து சென்றது எப்போதாவது தோன்றும் வானவில் அதிசயம்!எப்போதும் தோன்றும் தோழமை அன்பு அவசியம !!கோபம் கனிகள் சூழ்ந்த விதையாக இருக்கட்டும்கனியை சுவைத்துவிட்டு விதையை வீசி ஏறி குப்பையில்,அது ஒருநாள் அன்பு மழையில் துளிர்விடும்.
4/2/25
என்னுயிரே

3/2/25
உலகத் தமிழ்
31/1/25
காதலிக்க நேரமில்லை
28/1/25
இறைவன் செயல்
25/1/25
நான் விரும்பும் இந்தியா

நிறத்தில் வேறுபாடு
இறப்பு என்ற நான்கு எழுத்தில்
வாழ்கை "பிறப்பு"என்ற நான்கு எழுத்தில் தொடங்கி
"படிப்பு"என்ற நான்கு எழுத்தில் கடந்து திருமணத்தினால் வரும்
"பந்தம்"என்ற நான்கு எழுத்தில் நுழைந்து குழந்தை எனும்
"துடிப்பு" என்ற நான்கு எழுத்தில் துளிர் விட்டு
"இறப்பு"என்ற நான்கு எழுத்தில் முடிவடைகிறைது
உன் பார்வையில்
அவனை கண்ட நொடி
மகாகவி பாரதியார்

23/1/25
நம் உலகம்
தெருவோரம் சென்றேன்! கலங்கினேன் ஒன்றை கண்டு!
மனம் வெந்தது சென்றேன் அவரிடம் உணவு கொடுத்தேன் அவருக்கு...
எனக்கு அவர் கொடுத்ததோ ஆசிர்வாதம்!!! அவர் யாரென்று அறிவீரோ?
நம் பாட்டியை போன்ற ஒரு மூதாட்டி நான் பார்த்த மூதாட்டி கூறினால்
நான் பெற்ற செல்வம் என்னைக் குப்பையாக்கிவிட்டதே என்று...
அவரை கண்டதும் என் நினைவுக்கு வந்தது என் பாட்டி கதைகள் சொல்லுவாள்!
கன்னத்தில் முத்தமிடுவாள்! சோறூட்டுவாள் வாழ்க்கைக்கு வழியும் காட்டுவாள்!
வரலாற்றை அறிவும் அவள் வழியில்...விஞ்ஞானம் அவள் காலடியில்...
மருத்துவச்சி என பெயரும் உண்டு அவளுக்கு! அதை அறியாத நாம் மண்டு!
அவள் இல்லையெனில் வரலாறு எங்கே! பணத்தை சேர்த்து என்ன செய்தோம்
வரலாற்றை தொலைத்தோமே! வாழ்க தமிழ்நாடு!
சொல்ல மனம் இல்லை
22/1/25
உன் நினைவில்
பேராசிரியர்
கனவோடு வாழ
21/1/25
அன்பு
நட்பே சிறந்தது
என் முதல் பயணம்

20/1/25
வாசம் வீசும் மலரே

மலரே
மலரே உன் மனதின் ஆழம் தெரியவில்லை
உன் மனதை புரிந்துக்கொள்ளவும் முடியவில்லை
நினைவெல்லாம் நீயாகிப்போனாய்
உன் நினைவு இல்லாத கனமென்றால்- அது
உலகில் நான் இல்லாத கனமாகத்தான் இருக்கும்
உன்னை நினைத்து

9/1/25
இரு உயிர்
இரு உயிர் இணைந்து மனைவியானால்....
பிறகு ஈன்றெடுத்த மழலையானால்.....
அதனை முத்தமிட்டு மூன்றெழுத்து.....
அம்மாவானால் காலம் செய்த கோலத்தினால்
வயதானாள் பல உருவங்கள் பெற்று.....
உறவைப் போற்றுபவள் பெண்......
தீண்டாமை
8/1/25
உன் கரம் பிடித்து

தந்திரம்

யார் புத்திசாலி
மனிதன் தன் வளர்ச்சிக்காக காடு அழித்து
நாட்டை உருவாக்கினான் மீண்டும் நாட்டைவிட்டு
மன நிம்மதிக்காக காட்டுக்கு செல்கிறான்
யார் புத்திசாலி ஆதிவாசி பற்றி நீ யோசி