28/2/20

இராணுவம்

ranuva veeran kavithai

தன் உயிரை
மண்ணுயிர்க்கு - என்று
தான பத்திரம்
எழுதி கொடுத்த
தர்மர்கள் இராணுவ வீரர்கள்!

கொடுத்த வாக்கிற்காக
கொடுமை பல கடந்து
உணர்ச்சிகளை ஒடுக்கிய
ஊமைச் சடலங்கள் !

அரை ஜான் வயிற்றுக்கு
அங்கே இங்கே
அல்லாடும் கூட்டத்திற்கு மத்தியில்
அனைத்தையும் கொடுத்து விட்ட
அமைதி புயல் கள் !

அன்பிற்காக வாழாமல்
அடிமையாகவும் இல்லாமல்
அழைப்பை எதிர் நோக்கி
வாழும் அசாத்திய மனிதர்கள்!

இன்பமாய் வாழ வழியில்லை
இயற்கையை ரசிக்க நேரமில்லை
இளமை கோலம் மாயமாய்
இனிதே கடந்து சென்றது !

பெற்றவளுக்கோ - ஓர்
ஆறுதல் கூற முடியவில்லை
வந்தவளுக்கோ  பகிர்ந்து
கொடுக்க உயிருமில்லை
பேர் சொல்லும் பிள்ளைக்கோ
பாதை காட்ட பயணமில்லை
சுற்றமும் சூழ்ச்சிக்கும்
இடையில் சுழலுகிறேன் !

வீண் முயற்சி - என்று
சொல்பவர்களுக்கு மத்தியில்
விடா முயற்சியுடன்
வினை செய்ய துணிந்த
வித்தைக்கார வீரன் !

உன்னை ஊர் போற்றி

நாடு போற்றி

உலகம் போற்றி

பறைசாற்றி நிற்கிறது

வானத்தின் எல்லையாய்

நீங்கள் தான் எங்கள்

எல்லைச்சாமி என்று ..

- லதா

Kavithai Competition

 ராணுவ வீரன் கவிதை

12 Please share your thoughts and suggestions!:

Unknown சொன்னது…

Super படிக்கும் போதே புள்ளரிக்குது.

Unknown சொன்னது…

What is the life of an army soldier? This will obviously shiw the menainh of this ques... A hurts of the author of this verse..🌹🌹

Velu சொன்னது…

Very nice

Rajesh சொன்னது…

Wow nice lines

மணி சொன்னது…

நன்று

Unknown சொன்னது…

Real and heartful words.keep it up.

Unknown சொன்னது…

😍😍👌👌👌

Unknown சொன்னது…

Real and heartful words.keep it up.

Unknown சொன்னது…

Fabulous mam👏👏

Unknown சொன்னது…

Very nice mam

Unknown சொன்னது…

Very very nice

Unknown சொன்னது…

Super