7/2/20

புல்வெளி (கவிதை போட்டி)

iyarkai kavithai in tamil
பனித்துளி மெதுவாய்க் கண்ணுறங்க
மெத்தை ஆனது
மாந்தர்கள் அமர்ந்து கதைபேச
கூடம் ஆனது
பசு தன்பசி ஆற்ற
உணவு ஆனது
விலங்கு தன்நோய் தீர்க்க
மருந்தும் ஆனது
பசுமைப் புல்வெளி அதைக் காக்க
மறந்தும் போனது
காலம் அதன் கையில்
சுவடும் போனது
பூமிதான் பச்சை நிறம்
இல்லாமல் போகுமோ?
வெறும் தேசியக்கொடி வண்ணம்
என்று மாறிடுமோ?
- விசு

0 Please share your thoughts and suggestions!: