அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5/2/25

காதலுக்கு மொழியில்லை

மலைமீது வீசும் தென்றலே மலையாக வந்த காதலே

உன் பார்வை பார் போற்றும் கடலே என் பார்வை நீ போற்றும் அலையே

காதலுக்கு மொழியில்லை கண்கள் சொல்லும் வழியிது

எத்தனை எத்தனை காலம் வாழும் மேலும் மேலும் இந்தக் காதல்

சொல்லும் கதைகளைக் கேளு எண்ணில் அடங்காத இலைகளே

கண்ணில் அடங்காத காவியங்களே காற்றில் அடங்காத கற்பனையே

உன்னிலும் என்னிலும் எண்ணிலும் அடங்காத உணர்வுகளே..

காதல் இல்லாத துறைகள் உண்டோ காய்கள் இல்லாத கனிகள் உண்டோ

பிறர் மனம் காயப்படாமல் வாழ்ந்ததுண்டோ அன்புமழை பொழியட்டும்

அதில் காசில்லாமல் குளிக்கட்டும் மனித மானுடம் பூக்கட்டும்

காதல் எனும் கரைபோட்டு அன்பு எனும் மழையை நிரப்பிவிடுங்கள்

அதில் அனைவரும் குளித்துவிடுங்கள் இதைவிடத் தீர்த்தமில்லை

இனி வருத்தமில்லை காதல் கரைவதில்லை அன்பு மழை சுடுவதில்லை

அன்புப் பூக்களைத் தேடி அலைய வேண்டாம் ஆயிரம் பூங்காக்களே
 
உங்களைத் தேடிவரும் அன்பை உள்ளத்திலும் உதட்டிலும் வைத்துக்கொண்டால்

நண்பர்கள் கூட்டத்தைப்பார்த்து அன்புமழை பொழியத்தொடங்கியது..

துளித்துளியாய் தூறலிட்டது மேகக்கூட்டம் அலையலையாய் அள்ளிக்கொண்டது அன்புக்கூட்டம்

வண்ணங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று இது பூக்களின் பொன்மொழி

எத்தனை வண்னங்களில் பூக்கள் மழையால் மனப்பாடம் செய்யமுடியவில்லை

இறுதியில் வானவில்லை வரைந்து சென்றது எப்போதாவது தோன்றும் வானவில் அதிசயம்!

எப்போதும் தோன்றும் தோழமை அன்பு அவசியம !!
 
கோபம் கனிகள் சூழ்ந்த விதையாக இருக்கட்டும் 

கனியை சுவைத்துவிட்டு விதையை வீசி ஏறி குப்பையில்,

அது ஒருநாள் அன்பு மழையில் துளிர்விடும்.

4/2/25

என்னுயிரே

இன்றே வந்திடு என்னுயிரே!

விழியில் மோதி வாழ்வில் நுழைந்த

விடியலே ஔிவிளக்கே!

எழிலாய்ப் பேசி என்னைக் கவர்ந்த

ஏஞ்சலே என்னுயிரே!

வழியாய் நின்று பயணம் சிறக்க

வந்தஎன் வான்நிலவே!

செழிப்பைத் தரவே சிறப்பாய் சிரித்த

செந்தமிழ் சிறப்பினமே!

கனவில் வந்தே கவியாய் மாறியக்

காதலே கற்கண்டே!

தினமும் என்னை அன்பால் கொல்லும்

தேவியே தேனகமே

மனமும் உணவும் நீயாய் மாறி

மனத்தினை ஆள்பவளே!

தனமே தவிலே உலகே உயிலே

தவிப்பினைத் தந்தவளே!

என்றும் உன்னை நினைத்து நானே

ஏங்கியே வாடுகிறேன்!

சின்ன மலரே செந்நிற தேகமே

சீக்கிரம் வாயேன்டி!

பொன்னே புகழே புகழின் உருவே

பரவசம் தந்திடவே

இன்றே வந்தே என்னுள் இணைந்தே

என்னை வெல்லேன்டி! 

21/1/25

அன்பு

 உன்னை முதலில் பார்த்த போது என்‌ வாழ்க்கை நீ என நினைக்கவில்லை

உன் அன்பை புரிந்த‌போது என்‌ வாழ்வே நீ என உறுதிகொண்டேன்

பாரதியாருக்கு செந்தமிழ் தேனாக பாய்ந்தது போன்று எனக்கு நீ பேசும் வார்த்தைகள் அப்படி தான்

உன்னுடன் பேசாத நாள் என் ‌வாழ்வில் அந்த நாள் ‌மாயமான நாளாக மாற்றிவிடும்

நீ என்னருகில் வந்து பேசும்‌‌ போது என்னையறியாமல் என்‌ இதழில் சிறு பூ மலரும்

இவை எல்லாம் காதல் அல்ல என்‌ தோழி மீது நான் கொண்ட அன்பின் வெளிப்பாடே!

20/11/24

உன் நினைவில்

 என் அன்பு ஆசையில் ஒரு கடிதம்

என் உள்ளத்தை நிறப்பும் மகிழ்ச்சிக்கு

என் உயிரை பரிசளிப்பேன் உண்ணாமல்

நீ இருக்க என் உயிர் தந்து உணவலிப்பேன் 

உன்னை உயிர் என்றோ அல்லது உடல் என்றோ

சொல்ல மாட்டேன் எனேன்றால் இவை என்றோ 

ஓர் நாள் அழிந்து விடும் நீ அழிவில்லா 

உலமாக வாழ என் உலகை நான் தருவேன்

அதில் நீ உயிர் வாழ என் உயிரும் நான் தருவேன்

நான் சிரிக்க உன் கவலை மறந்து நீ சிரிப்பாய் 

அந்த சிரிப்பில் மட்டுமே என்னிடம் பொய் உரைப்பாய்

உன்னோடு இருக்கும் போது உன் முகத்தில்

நான் தொலைத்தேன் நீ இல்லா நேரங்களில் 

உன் நினைவில் தான் தொலைத்தேன் 

21/7/24

தாயின் பாசம்

தவமிருந்தாலும் கிடைக்க முடியாத பாசம் தாயின் பாசம்!

மனதில் கஷ்டம் இருந்தாலும் அன்பை வெளிக்காட்டும் பாசம் தாயின் பாசம்!

எந்த மனிதனும் பார்க்காத பாசம் தாயின் பாசம்!


நட்பே

எங்கோ பிறந்து ஓர் இடத்தில் சந்தித்து பழகி

இரத்த பந்தம்  இல்லாமல் உனக்காக நான் இருக்கிறேன்

என்று  சொல்லும்  ஒரு உறவு நட்பே.......

அடிக்கடி சண்டையிட்டு  பிரிந்தாலும்

ஒரு நிமிடம் கூட பேசாமல்

இருக்க முடியாது- உனக்கும் எனக்கும்.....

என் மனதில் நீங்கா....உன் மனதில் நான்......

என்றும் என்றென்றும்...... நட்பே.......

19/6/24

என் உயிர்

 உன்னை பார்க்க நினைத்தேன் பார்த்தேன்

உன்னிடம் பேச நினைத்தேன்

சில நிமிடம் பேசினேன்

உன் கை பிடிக்க நினைத்தேன் 

ஆனால் நீ என்னை விட்டு விலகிவிட்டாய்

நீ வேண்டுமானால் விலகிவிடலாம்

நான் விலகமாட்டேன்

என்றும் உன்னுடனே என் உயிர் 💖💖

2/5/24

கடவுள் வடிவில்

 கடவுள் வடிவில் கருணை கொடுத்தாய்,

கருப்பையில் சுமந்து பெற்றாய்,

உன் கரம் பிடித்து உலகம் சுற்ற,

வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில்,

நல்லன்பு மட்டும் என்னிடம் கொடுத்தாய்,

பல வலிகள் கொண்டு உழைத்து,

உன்கரமோ காய்த்து போக,

என் பிஞ்சு கரத்தை மெருகூட்டினாய்,

உன் மனம் உடைத்து, என் மனம் படைத்தாய்,

உன் காலடி அடைய நான் என்ன செய்வேன்,

உன் வாழ்வை அடைய,

என் கண கொடிகளும் ஏங்க,

பல வழி உண்டு என்றாலும்,

எவ்வழியும் தொற்றுபோகும்,

உன் அன்பின் முன்னே,

கருணை வடிவ கடவுளின் முன்னே...❣️


28/4/24

விலகும் முன் யோசி

 விலகும் முன் யோசி விலகியபின் யோசிக்காதே ஏனென்றால்
 
நீ தேவை என்று அவர் நினைத்திருந்தால்

நீ யோசிப்பதற்கு முன்னரே உன்னை தேடி வந்து இருப்பார்

9/3/24

உயிர் போன்ற நட்பு

 பொன்னான உலகத்தில்
பொன் போன்ற நட்பு! 

கலை நிறைந்த உலகில்
கவலைப் தீர்க்கும் நட்பு!
 
செழிப்பான உலகில்
செம்மையான நட்பு! 

வளம் நிறைந்த உலகில்
வஞ்சனை இல்லா நட்பு!
 
சோர்வான என் உள்ளத்தில்
சோலை போன்ற நட்பு!
 
இளகிய என் மனதில் 
இன்பம் தரக்கூடிய நட்பு!
 
உறுதியான என் உள்ளத்தில்
உயிர் போன்ற நட்பு!
 
ஆக்கம் நிறைந்த உலகில்
ஊக்குவிக்கும் நட்பு!
 
நாளும் என்னுள் நிறைந்த 
நட்பு! நட்பு! நட்பு! 

நீ என்னுடன் இருப்பதால்

  உயிர் கொடுக்க ஆசைதான்
 உயிரான நண்பர்களுக்காக...... 

அழுது பார்க்க ஆசைதான்-உன் மடியில்
விழுந்து தலைசாய்வதற்காக...... 

நிறைய கண்ணீர் சிந்தவேண்டும்
நீ துடைக்க வருவாய் என....... 

எப்பவும் சிரிக்க வேண்டும்
நீ என்னுடன் இருப்பதால்......... 

அவள் மணம்

 மல்லிகை தோட்டத்தில் மாலை நேரம் வரும்

 மணம் கூட என் மனதுக்கு இதமளிக்கவில்லை 

என்னவள் என் மார்பில் சாய்ந்திட்ட வேளையில்... 

ஏனெனில் அவள் மணமோ அதையும் வென்று விட்டதே!!!


உன்னை நினைத்தேன்

          பசி என்று வந்தேன் உன் வறுமையை மறைத்து விருந்தளித்தாய்! 
                 
காலில் முள் குத்திவிட்டது என்றேன் உன் கத்தி காயத்தை
   
மறந்து மருந்திட்டாய்! தனிமையில் தவிக்கையில் 
  
உன்னை நினைத்தேன் தங்கமே என்று கண் முன் வந்து நின்றாய்

எதற்காக இத்தியாகம் என்றேன் என்னை மணமுடித்து அனுப்பிவிட்டாயே!!

அம்மா எனும் உறவு

 விடுமுறை இல்லை  உனக்கு, 

உன் வியர்வை துளிகளில் இல்லை கணக்கு,

விருந்தோம்பலும் பிறருக்கு செய்திடும் உன் மனது,

ஆனால்வெற்றிடமாகிடும் உன் வயிறு,

மீந்த உணவையும், மகிழ்ந்து சாப்பிடும் உன் மனது,

நீ மகிழ்ச்சியின் பிறப்பு, கவலை இருந்தாலும்,

வெளிக்காட்டாத உன் உணர்வு,

உன் மனதில் இல்லை யாரிடமும் வெறுப்பு,

நீ அன்பெனும் பாசப்பிணைப்பு,

இப்பூமிக்கு உன்னால் சிறப்பு,

இதை யாரும் சொல்லமுடியாது மறுப்பு,

இவ்வுலகில் அம்மா எனும் உறவு,

ஆண்டவன் அருளின் படைப்பு.....


23/2/24

அன்பின் முடிவு

அன்பின் வெளிபபாடே காதல்

காதலின் வெளிபாடே அன்பு

அன்பின் வெளிபாடே‌ மோதல்

மோதலின் வெளிபாடே காயம்

காயத்தின் வெளிபாடே கண்ணீர்

கண்ணீரின் வெளிபபாடே ஞாயம்

ஞாயத்தின் வெளிபாடே குரல்

குரலின் வெளிபாடே ஏக்கம்

ஏக்கத்தின் வெளிபாடே கோபம்

கோபத்தின் வெளிபாடே உண்மை

உண்மையின் வெளிபாடே நீதி

நீதியின் வெளிபாடே வெற்றி

வெற்றியின் வெளிபாடே தலைகனம்

தலைகனத்தின் வெளிபாடே ஆதிக்கம்

ஆதிக்கத்தின் வெளிபாடே அழிவு

அழிவின் வெளிபாடே முடிவு. 

15/2/24

அம்மாவின் மடியில்

 உன் பஞ்சு மெத்தை கால்கள் 

தரையில் படுகையில் தரை

சிலிர்த்து போகிறது! அழகான 

கருவாக நீ என் வயிற்றில் 

உருவான போத என்னை 

ஆனந்த்தில் ஆழ்த்தி விட்டாய்! 

நான் கொடுத்த முச்சுக்காற்றை நீ

விடுகையில் என் மனம் பரவச மடைகிறது!

முளைத்தெழும் விதைப் போல நீ 

வளர்ந்து வா அம்மாவின் மடியில் தூங்க!........


6/1/24

அன்பெனும் மழையால்

 நான் சிறுவயதில் அழுத போது என் அப்பா என்னை தேற்ற, 

நன்பர்கள் அருகில் நிற்க்க, உறவுகள் என்னை சூழ்ந்து நிற்க, 

என் அம்மா மட்டும் என்னை அன்பெனும் மழையால் 

நனைத்தது இன்றுவறை காயமல் ஈரமாய் என் நெஞ்ஜில்.  

3/1/24

என்மீது காதலே இல்லையா

 என்மீது காதலே இல்லையா என மாறி மாறி 

மணிக்கணக்கில் சண்டையிட்டு அழைப்பை துண்டித்து

 சிறிது ஆசுவாசமாக அமர்ந்த பின்பு தான் புரிந்தது

 இவ்வளவு நாள் நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு 

காதலித்துக் கொண்டிருந்தோம் என்று...!

3/12/23

தேடல் தான் தீராத வியாதி

 தேடல் தான் தீராத வியாதி என்னில்😒,

தேவையில்லா சிந்தனை ஏராளம் பெண்ணில்......

 😢இருந்தும் என் காதல் குறையாது உன் கண்ணில்....
 
இதுவே நிம்மதி🌹🫂என்றும் அன்பில்....

காதலித்தவரை காதல்  செய்வது உலகின் வழக்கமாய்

  இருந்தாலும் கண்டு கொள்ளாத உன் கண்ணை

 காதல் செய்வது என்னிருந்தே தொடக்கமாகட்டும்.......

2/12/23

அன்பு இல்லாத உலகில்

 அன்பு இல்லாத உலகில் ஆனந்தம் இல்லை,

ஆனந்தம் இல்லாத உலகில் நீ இருந்தும் பயன் இல்லை. 

அன்பு என்னும் பண்பு உன்னிடம் இருந்தால்,
 
நீயே பலர் வாழ்வில் ஆனந்தம் ஆவாய்.