27/1/24

பாட்டி

 என் அன்னையின் அன்னை அவளோ... ‌

இல்லை அன்பின் அன்னை அவளோ... 

 கருவறையில் போற்றும் தெய்வம் அவளோ...

  அவளை அறிவாயோ?....  காலனை வென்ற காரிகை அவள்... 

 உதிரத்தை பாலாய் தந்த நங்கை அவள்... 

 வியர்வையை உணவாய் தந்த யுவதி அவள்...  

என் இதழ்கள் மலர கண்டு இன்புற்ற  இளையாள் அவள்...  

பண்பை பாசம் கொண்டு ஊட்டிய பாவை அவள் ... 

 வேசம் இல்லா பாசம் கொண்ட  வஞ்சி அவள்...  

உயிர் உள்ளவரை நேசம் கொண்ட  பூவை அவள்...

0 Please share your thoughts and suggestions!: