25/1/24

காதல் உணர்வு

தொட்டால் சிணுங்கி போல உனை கண்டால் கரைகிறேன்! 
 
வானின் மதியை போல உனை பார்த்தால் மகிழ்கிறேன்!

இரவா பகலா உனை என்னவென்று நான் சொல்வது 

முள்ளா மலரா உனை என்னவென்று நான் அழைப்பது! 

குறை குடமாய் தழும்புது அகமே உனை கண்ணருகில் கண்டாலே

 பனி மழையாய் பொழியுது மனமே உன் நினைவுகள்  எந்நாளுமே!

 மருதமாய் நீ எனை தொடவே காகிதமாய் உன் மடி சேர்வேன்! 

மூச்சாய் நீ எனை நெருங்கிடவே முத்தமிழாய் உன்னில் இனித்திடுவேன்!

இகமே நீ ஆனால்  மறுகணமே உவகையாவேன்!  

0 Please share your thoughts and suggestions!: