8/4/24

நீ நீடுடி வாழ்கவென்று வாழ்த்தட்டும்

 வான தேவதை வாசல் வந்து, வாழ்க நீ வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

உனை நேசிக்கும் மனிதர்கள் நீ மகிழ்ச்சியோடு வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

இயற்க்கைத்தாய் பொருத்திருந்து நீ நிம்மதியாய் வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

உனை மனிதனாக தீர்மானிக்கும் மனங்கள்யாவும் நீ நீடுடி வாழ்கவென்று வாழ்த்தட்டும்!

மஞ்சள் பூசியமுகமடி

 வானத்தின் முகம் நிலவடி என்தன் மனதின் முகம் உன்தன் முகமடி.
 
மஞ்சள் பூசியமுகமடி என் நெஞ்சை தொட்ட முகமடி.

அஞ்சாநெஞ்சன் நான்அடி உன்னால் காதலில் சாஞ்சேனடி.

6/4/24

இரண்டு இதயங்கள்

 இரண்டு இதயங்கள் இணைந்து இந்த உலகிற்கு

 ஓர் இதயத்தை பரிசளிக்கும் அதில் 

ஒன்று நீராகவும் மற்றோன்றாய் நாடாகவும் இருக்க
 
ஆசை கொண்டு என் காதலை உனக்களித்தேன்
 
அந்த காதலுக்கு வரமாக கிடைத்தது உன் இதயமடி 

5/4/24

பழகிப் போன பாதை

 பழகிப் போன பாதை...

முள்ளாக இருந்தால் என்ன?

ரோஜா இதழாக இருந்தால் என்ன?

வலி முள்ளுக்கோ...

ரோஜா இதழுக்கோ அல்ல...

கால் படித்திடும் பாதங்களுக்கே!

4/4/24

மனைவியை நேசிக்க தெரியாத கணவன்

 அழகிய மலர்களை ரசிக்க தெரியாத கண்கள், கண்களே இல்லை!

பூமிக்கு மழை பொழியாத மேகம், மேகமே இல்லை!

சிரிக்க தெரியாத மனிதன், மனிதனே இல்லை!

மனைவியை நேசிக்க தெரியாத கணவன், கணவனே இல்லை!

அவளுக்கு நிகர் அவளே

தவறென்று தெரியும் போது தட்டிக் கேட்க முற்படுபவள்.

தனக்கென இடம் பிடிக்க தடைகள் பல கடப்பவள்.

துச்சமென கருதிய இடத்தில் துணிந்தே நிற்பவள்.

உடைந்து போகாமல் உயர்ந்து செல்ல முயல்பவள்.

அன்புக்கு மட்டும் அடங்கி போக முற்படுபவள்.

வேதனைக்கும் வேடிக்கை காட்டி  வென்று எழுபவள்.

கற்று தேர்ந்து கனவுகளை எட்டிப் பிடிக்க முயல்பவள்.

நம்பிக்கை கொண்டு நாளும் நடைப் போடுபவள்.

பல அவதாரம் எடுத்து பகைமையை துறந்தவள்.

அவளுக்கு நிகர் அவளே என்று அடையாளம் காட்டுபவள்.

1/4/24

என் இதயம் சொல்கிறது

 நீ என்னை விரும்புகிறாய் என்று

என் இதயம் சொல்கிறது!.

நீ எனக்காக எதையாவது உணர்கிறாய் என்று 

என் கண்கள் சொல்கிறது!.

நீ என்னை நினைக்கிறாய் என்று 

என் மனம் சொல்கிறது!.

ஆனால் இதுவரை நீ மட்டும் சொல்லாம்

அமைதியாய் இருக்கிறாய்!....

கண்கள் பேசும் மொழிக் காதல்

 ஓர் உயிர் ஈர் உடலாய் இருப்பது காதல்..!

முக்காலங்களையும் மறப்பது காதல்..!

நான்கு கண்கள் பேசும் மொழிக் காதல்..!

ஐம்புலன்களை இழப்பது காதல்..!

அறுசுவை வெறுப்பது காதல்..!

ஏழேழு ஜென்மமாய் தொடர்வது காதல்..!

எட்டாம் அதிசயம் படைப்பது காதல்..!

ஒன்பது கிரகங்களையும் இணைப்பது காதல்..!

பத்தோடுப்பத்தாய் விரல் கோர்ப்பது காதல்..!


என் இயற்கை தாயே

 பால்வடியும் உன் அழகு மிக பொலிவுஉடையது, மற்றும் தெளியுடையது,

அதின் அலங்காரா தலைவன் இயற்கைக்கு இனையான இறைவன், 

செல்லும் இடம் மெங்கும் இயற்கை கைகொள்ளா அழகை கொண்டுள்ளது, 

அது என்னையும் என் உள்ளத்தையும் காந்தம்போல் இழுகிறது. 

இயற்கையே உன் அழகை வர்ணிக்க உலக மொழிகள் எத்தனையோ உள்ளது, 

அதை என்னும்போது என் உடல் சிலிர்கின்றது, 

என்னென்றால் உன் அழகு வான்போல், 

வர்ணிக்க கடல் போல் வார்த்தைகள் இருபினும் அது போதாது, 

ஐம்பூதம் கொண்டார் என்னவோ உன் அழகின் தோற்றம் சிற்பி சிலைவடித்த

 கற்கள் உயிர் கொண்டதுபோல் அவ்வளவு கலைஅழகு கொண்டது,

ஆனால் உன் அழகு நிறைந்த செல்வத்தை அனைத்து உயிர்வாழ்களுக்கும்

 அம்மா தன் பிள்ளைக்கு தரும் அண்ணம் போல் 

அல்லி அல்லி கொத்துவிட்டாய் என் இயற்கை தாயே 


வாழ்க்கை வாழ்வதற்கே

 வாழ்வில் பிறப்பு  ஓர் மகிழ்ச்சியே 

வாழ்வில் இறப்பு ஓர் துக்கமே 

வாழ்வின் இடையில் ஓர் போராட்டமே 

வாழ்வில் படிப்பு ஓர் போராட்டம் 

வாழ்வில் தொழில் ஓர் போராட்டம் 

வாழ்வில் திருமணம் ஓர் போராட்டம் 

வாழ்வில் தனி முன்னேறத்தில் ஓர் போராட்டம் 

வாழ்வின் சவால்களில்  ஓர் போராட்டம் 

வாழ்வில்  குடும்ப முன்னேற்றத்தில் ஓர் போராட்டம் 

வாழ்வில் பெற்றெடுத்தக் குழந்தைகளை கரை சேர்ப்பதில் போராட்டம் 

வாழ்வில் பிணி நீக்கப் போராட்டம் 

வாழ்வில் மரணம் படுக்கையில் ஓர் போராட்டம் 

வாழ்வே ஓர் போராட்டம் 

வாழ்வில் போராடி போராடி வெற்றிப் பெறுவோம் 

வாழ்க்கை வாழ்வதற்கே 


30/3/24

கடந்து வந்த பாதை

 இமைப்பொழுதில் நகரும் இவ்வுலகில்;

இரவும் பகலும் இயலா ஆசைகளால்

வலியை மறந்து விதைத்தேன் பாதையை

பதித்தேன் சுவடுகளை பகிர்ந்தேன் 

நினைவுகளை பார்த்தேன் வந்த பாதையை

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் விழுந்து விட்டோமே என்று இருந்து விடதே
 
தூக்கி விட யாரும் தேவையில்லை உன் கை போதும் 

எழுந்து வா புது வேகத்தோடு கடந்து போகும் எல்லாம் 

காற்றோடு ஆனால் நீ ஊன்றிய உன் கை தடம் சொல்லும்

உன் வெற்றியின் வழிகளையும் வலிகளையும்

இந்த உலகுக்கு கருத்தாய் உன்னை பற்றி அனுமானம் செய்த 

வாய் ஆகா ஓகோ போடும் ஆனால் இதுவும் கடந்து போகும்!!! 

22/3/24

இவள் அழகில்

 பெண் ௭ன்பவள் அழகானவள்!!!! 

அவள் பிறக்கும் போதே அழகாகிறாள் 

அவள் பாதம் இம் மண்ணில் படும் பொழுது

 இம் மண்ணையும் அழகு படுதுகிறாள்... 

அவள் தவழ்ந்து செல்லும் பொழுது 

தங்கமும் தோற்று விடும், அவள் நடந்து செல்லும்

 பொழுது நகரமும் வலைவீசும் இவள் அழகில்.....   

 ஒரு செடியில் இருந்து வரும் ஒரு பூ அழகென்றால்...

 ஒரு பெண்ணில் இருந்து வரும் 

இன்னொரு பெண்ணும் அழகுதானே.... 


கண்ணக்குழி

 அழகின் நகலாய் பிரம்மன் படைக்க..

 நிலவும் வெட்கும் கண்கள் மூடி

கண்ணக்குழி வழியே தவிழும் புன்னகை அழகோ.. 

எத்தனை கோடி, கருவிழி அழகில் மனமும் மயங்க

கண் அசைவே போதும் கவிதை வரைய..


21/3/24

அழகிய மலையே வா

 இயற்கை தந்த அழகிய குழந்தை நீ 

மனம் கொள்ளை கொள்ளும் விந்தை நீ,

நீ வந்தால் வளம் பெருகும் 

வறுமையும் காணாமல் போகும் 

செழுமை தழைத்தோங்கும் 

என்றும் வையகம் உனக்கு தலைவணங்கும் 

வெள்ளிமழையே வா, அழகிய மலையே வா.


20/3/24

நம் பாசம்

 பூக்கள் உதிர்ந்துவிடும் பூக்கள் உதிர்ந்துவிடும் ஏன்? 

தலைமுடிகூட உதிர்ந்துவிடும் ஆனால் என்றும் 

என்னெற்றும் உதிராமல் இருப்பது நம் பாசம் மட்டுமே....... 

பாலியல்

காலையில்  செய்திதாளில்  வாசித்த முதல்  வார்த்தை பாலியல்!

மேலும் தொடர மனம் மறுத்தது ஏனோ விரல் மட்டும் - அந்த

வரியில் இருந்து விலகவில்லை கண்ணும் விரலும் ஆலோசித்து

மனதை அமைதிப்படுத்தின. உதடுகள் எழுத்துகளை முனு முணுக்க

அந்த குழந்தையின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் வயது 

பன்னிரண்டு என்றிருந்தது எனது குட்டி தங்கை கண்முன்

வந்து போனால் - அந்த பச்சிளம் தன்னை மாய்த்துக் கொண்டால் 

ஏன் மாதவம் புரிந்திட வேண்டும். இப்படி மாய்த்துக்கொள்வா?

மேலும் வாசிப்பை ஆரம்பித்தேன் இதற்கெல்லாம் காரணம் கணக்கு வாத்தியாரம்

வேலி பயிரை கூடமேய்யும் ஆனால் -இங்கு விதையை விழுங்கி உள்ளது

கண்ணகி கலங்கி மட்டும் போயிருந்தால். அவளுக்கு வரலாற்றில் இடமில்லை.

கலங்கபடுத்தியவர்களை கலங்க வைத்தாள். கண் கலங்க அல்ல உடல் நடுங்க.


17/3/24

காதலென்பது நீயானால்

  இரவென்பது நீயானால்
நிலவென்பது நானாவேன்..

மலரென்பது நீயானால்
மணமென்பது நானாவேன்..

நீரென்பது நீயானால்
மீனென்பது நானாவேன்..

காதலென்பது நீயானால்
கண்ணீரென்பது நானாவேன்..

அவள் காதலால்

 கண்ணீரும் கதை பேசும்

கண்ணனின் முகம் கண்டால்

கவிதைகள் மெய் சொல்லும்

கைகள் எனை தீண்டினால்

கற்பனையில் வாழ்கிறாள்

ராதை அவள் காதலால்..

விழித்து உழைத்த ஏழை

 வாழ மறந்தவன் வாழ துடிக்கிறான்
 
படிக்க மறந்தவன் படிக்க துடிக்கிறான்
 
உழைக்க மறந்தவன் உழைக்க துடிக்கிறான்
 
அனுபவிக்க மறந்தவன் அனுபவத்திற்காக துடிக்கிறான்
 
காலத்தை மறந்தவன் காலத்திற்காய் துடிக்கிறான்
 
ஆனால் விழித்து உழைத்த ஏழை
 
ஒவ்வொரு கணமும் துடிக்கிறான்

தாயே என்றும் உனக்காக நான்

மாதவிடாய் காலத்தில் கஷ்டப்பட்டாய்....

மாதவிடாய் நின்ற காலத்தில் மகிழ்ச்சியடைந்தாய்....

ஏனென்றால் நான் கருவுற்றிருப்பனோ என்ற எண்ணத்தில்.... 

நான் வளர வளர நீ என்னை நினைத்தாய்...

என்னுடைய சின்ன சின்ன அசைவுகளை உணர்ந்தாய்... 

அதை தந்தையிடம் கூறி அவரையும் மகிழ வைத்தாய்..... 

பத்து மாதங்கள் கழித்து என்னை ஈன்றெடுத்தாய்..... 

கருவறையில் இருந்து நான் வெளிவரும் பொழுது நீ அழுதாய்!!! 

நான் வந்த பிறகு என்னைப் பார்த்து மகிழ்ந்தாய்....!!! அன்னையே....

தாய்மையின் வலி என்னவென்று எனக்கு தெரியும்..

 அதனால் பிறக்கையில் அன்று அம்மாவுடன் நானும் அழுதேன்...!!! 

கல்லறையில் நீ உறங்கச் சொன்னால் கூட உறங்கு வேன்.. 

"அம்மா" நீ வந்து தாலாட்டு பாடினால் போதும்!!!! 

தாயே என்றும் உனக்காக நான்!!!! 





நட்பு என்னும் படகில்

 நட்பின் ஆழம் கடலிடம் கேள் நட்பின் பெருமையை காற்றில் கேள்

நட்பின் அகலத்தை வாழிடம் கேள் நட்பை அடைந்தவர் பெற்ற ஒளியை 

சூரியனிடம் கேள் இவற்றின் முடிவை அறிந்தவனுக்கு நட்பின் முடிவு தெரியும்!!!!

அன்பு என்னும் கடலில்; நட்பு என்னும் படகில்; கரையடையாது....... 

கடலில் நீந்துவோம்; மீன்களைப் போல!!!!! 

பறக்கும் பறவைகளாகும் இருக்கும் நாம் - கீழிருக்கும் பள்ளத்தை

எண்ணி பயப்பட வேண்டாம்; குடும்பம் என்னும் வலையில் மாட்டு வதற்கு முன்;

நமக்கு கொடுத்த நேரத்தை கொண்டாடி மகிழ்வோம்!! குதுகலமாய்!! 

16/3/24

பிறந்த பிண்டமே வேண்டும்

மருந்தும் வேண்டா அமுதும் வேண்டா

இருந்தும் இருக்கா நிலையும் வேண்டா

விருந்தும் வேண்டா வருந்தும் நிலையும் வேண்டா

நிறைந்த அகமே வேண்டும் பிறந்த பிண்டமே வேண்டும்

திறந்த பார் அதிலே நிறைந்த பிணி அதுவாம்

தோல் போர்த்திய எலும்போ, வலிமை கொண்டு திகழ,

நடை ஓடும் பாரீர் தடை எதுவும் இல்லா

இது போதும் பாரீர் உயிர் மிதக்கும் அழகாய் 

உயிர் புதைக்க மணல் கொண்டு, தோல் உரித்த 

வெண்மை கோடு, தோல் உறுக்க அனல் கொண்டு,

மிஞ்சா வெண்மையே பொடி கொண்டு.
 
யாவருக்கும் இதுவே பாரீர்

நன்மை செய்திட்டு போவீர் பாரீர்!!!!!

இது தான் காதலா

 உன்னுடைய உணர்வுகள் உருவங்களாக என் மனதை தட்டுகிறது;

நான் உன்னை பார்க்க வேண்டும் என்று காதலித்த வலிகளை
 
விட திருமணத்திற்கு பின் வந்த நம்மிடையே ஏற்பட்ட
 
பிரிவுகள் தான் அதிகம் என்று நீ உணரும் தருணம்
 
நம் வாழ்க்கையில் நமக்கு புதிய பிறவி கொடுக்கட்டும் என்று

உன் உறவு வேண்டும் என்று நான் உன் மனதில் தட்டும் நேரத்தில்; 

என்னுடைய பிரிவை நினைத்து என் மனதை நீ தட்டுகிறாள் என்று இது தான் காதலா!

வீசும் காற்றிற்க்கு தெரியும் அதற்கு எல்லை இல்லை என்று

எனக்கு தெரியும் உன்னுடைய எல்லை உன் வீடு என்று

தைரியமாக இரு நான் உன்னை என்னோடு அழைத்து செல்வேன் என்று

உன் தைரியம் தான் நம் காதலுக்கு வெற்றி என்று



15/3/24

என் கனவே

என் கனவே என் கண்ணுக்குள் இருக்கும் நிலவே....

நீ இருக்கும் இடம் தெரியாமல் தவிக்கிறேன்....

அதை நினைத்து என்னை நான் வெறுக்கிறேன்....

அங்கும் இங்கும் ஒளிந்து உன்னை பார்க்கிறேன்....

அதை எண்ணி அனுதினமும் நகைக்கிறேன்....

சாப்பிடும் முன் உன்னை நினைக்கிறேன்....

உன்னை நினைத்துப் பசி மறக்கிறேன்....

இப்படி என்னை மாற்றின உன்னை

எண்ணி மகிழ்கிறேன் ஆச்சரியப்படுகிறேன்!!!

முயற்சி

தூங்கா இரவுகள் தொலைத்தூரக் கனவுகள்!

தோற்க்கடித்த சில நேரங்கள் தொலைந்திடா விடாமுயற்சிகள்!

துவளாதே என் மனமே கலங்காதே என் இருதயமே!

முன்னேறிச் சென்றிடு முழுமனதுடன் முயற்சி செய்திடு!

நிச்சயமாய் வென்றிடுவாய் தலைநிமிர்ந்து நின்றிடுவாய்! 

14/3/24

அழகான காலை

 மேகங்கள் நகர்த்திட!

 சூரியன் உதித்திட!

 மலர்கள் மலர்ந்திட!

 காற்று வீசிட!

 பறவைகள் பறந்திட!

 கோழி கோக்கரித்திட!

 குயில் கூவிட!

அம்மா எழுப்பிட!

நான் எழுந்திட!

அழகான காலை விடிந்திடுமே !!!
                                                       

13/3/24

உன்னை தேடி என்னை தொலைத்து

 என்னை உன்னிடம் தொலைத்து உன்னை தேடி என்னை தொலைத்து 

மீண்டும் தேடி உன் கைகளை பிடித்து உயிர் தெளிந்தேனேடி... 

உன் காதலுக்கு மலர் தோட்டம் அமைத்து உன் கண்களுக்குள் 

வண்ணத்துப்பூச்சியை பறக்க வைத்து, உன்னை சிரிக்க வைத்து 

என் காதலை பெற்று கொள்வேனடி வானில் உன் முகத்தை 

முகிலினால் அமைத்து உன் கைகளை கோர்த்து நிலவை ரசித்து 

நட்சத்திரங்களை நம்மை பார்த்து பொறாமை கொள்ளும்படி 

செய்ய வைத்து உன் சந்தோஷத்தால் உயிர் மோச்சம் பெருவேனடி... 

நம் வாழ்க்கையை உன் கைகளுக்குள் அமைத்து என் உயிரை

உன் உயிருக்குள் கலந்து என் உலகை உன்னால் மறந்து 

வரும் காலம் யாவும் நான் உனக்கே சொந்தமடி

நான் உன்னை யாரும் இல்லாத அளவுக்கு காதலிக்கிறேன் 




புதிர் நிறைந்த புத்தாண்டே

 புதிர் நிறைந்த புத்தாண்டே உன்னை வா என்று அழைக்கின்றேன்.....

உன்னில் பயணிக்க ஆயத்தமாகிவிட்டேன்....

ஆண்டுதோறும் புதுமை நிறைந்தவனாக வருகின்ற உனக்குந்தான்

எத்தனை....எத்தனை முகங்கள்......வையகத்தில் உன்னை 

வென்றெடுத்தவனும் இருக்கின்றான் பலியானவனும் இருக்கின்றான்...

ஆயினும் நீ.....நீயாகவே இருக்கின்றாய்....மீண்டும் மனிதனுக்கான

ஒரு நம்பிக்கை அது உனது பிறப்பு.....உனக்காகத் தான் இங்கு 

நாளும் மாதமும்கூட நகருகின்றது....மனிதம் பேசுகின்ற ஆண்டாக வா...

மடைமையை கொளுத்துகின்ற ஆண்டாக வா..மனதோடு மனங்கள்

பேசுகின்ற ஆண்டாக வா..வேற்றுமையை வேறறுக்கின்ற ஆண்டாக வா...

உயிர்கள் யாவும் உய்கின்ற ஆண்டாக வா...பஞ்சபூதங்களும்

 சமநிலை கொள்ள நின்னை வா என வரவேற்கின்றேன்.......!

11/3/24

உந்தன் கரம் கோர்க்க

 உந்தன் கரம் கோர்க்க ஏங்கிய

நாட்கள் கூட சுகமாகத்தான் இருக்கின்றன... 

உந்தன் கரம் கோர்த்து யோசிக்கையில்... 

9/3/24

திருமகளே வருக

 எல்லார் வாழ்விலும் விடியல் தரும் திருமகளே வருக.

புத்தடை அணிந்து புது பானையில்

 பொங்கும் வெண்மலரே வருக.

உழவனுக்கு உனவிட்டு பிறரின்
 
பசியற்றிடும் தானிய மகளே வருக வருக...

உயிர் போன்ற நட்பு

 பொன்னான உலகத்தில்
பொன் போன்ற நட்பு! 

கலை நிறைந்த உலகில்
கவலைப் தீர்க்கும் நட்பு!
 
செழிப்பான உலகில்
செம்மையான நட்பு! 

வளம் நிறைந்த உலகில்
வஞ்சனை இல்லா நட்பு!
 
சோர்வான என் உள்ளத்தில்
சோலை போன்ற நட்பு!
 
இளகிய என் மனதில் 
இன்பம் தரக்கூடிய நட்பு!
 
உறுதியான என் உள்ளத்தில்
உயிர் போன்ற நட்பு!
 
ஆக்கம் நிறைந்த உலகில்
ஊக்குவிக்கும் நட்பு!
 
நாளும் என்னுள் நிறைந்த 
நட்பு! நட்பு! நட்பு! 

வகுப்பறை தூக்கம்

 தாலாட்டு பாடவில்லை தானாக வந்தது;

ஆசிரியரை அலட்சியப்படுத்தி 

ஆடாமல் ஆட வைக்கும்!!

அசைவு!!! வகுப்பறை தூக்கம்!


நீ என்னுடன் இருப்பதால்

  உயிர் கொடுக்க ஆசைதான்
 உயிரான நண்பர்களுக்காக...... 

அழுது பார்க்க ஆசைதான்-உன் மடியில்
விழுந்து தலைசாய்வதற்காக...... 

நிறைய கண்ணீர் சிந்தவேண்டும்
நீ துடைக்க வருவாய் என....... 

எப்பவும் சிரிக்க வேண்டும்
நீ என்னுடன் இருப்பதால்......... 

அவள் மணம்

 மல்லிகை தோட்டத்தில் மாலை நேரம் வரும்

 மணம் கூட என் மனதுக்கு இதமளிக்கவில்லை 

என்னவள் என் மார்பில் சாய்ந்திட்ட வேளையில்... 

ஏனெனில் அவள் மணமோ அதையும் வென்று விட்டதே!!!


உன்னை நினைத்தேன்

          பசி என்று வந்தேன் உன் வறுமையை மறைத்து விருந்தளித்தாய்! 
                 
காலில் முள் குத்திவிட்டது என்றேன் உன் கத்தி காயத்தை
   
மறந்து மருந்திட்டாய்! தனிமையில் தவிக்கையில் 
  
உன்னை நினைத்தேன் தங்கமே என்று கண் முன் வந்து நின்றாய்

எதற்காக இத்தியாகம் என்றேன் என்னை மணமுடித்து அனுப்பிவிட்டாயே!!

மழை

 உன்னிடம் இருந்து என்னை காக்க
 
தான் குடை கொண்டு வந்தேன்  
 
அதிலுல்ல ஓட்டை வழியாக வந்து என்னை

நனைத்து விட்டாயே!!! வருத்தத்தில் நான்

அம்மா எனும் உறவு

 விடுமுறை இல்லை  உனக்கு, 

உன் வியர்வை துளிகளில் இல்லை கணக்கு,

விருந்தோம்பலும் பிறருக்கு செய்திடும் உன் மனது,

ஆனால்வெற்றிடமாகிடும் உன் வயிறு,

மீந்த உணவையும், மகிழ்ந்து சாப்பிடும் உன் மனது,

நீ மகிழ்ச்சியின் பிறப்பு, கவலை இருந்தாலும்,

வெளிக்காட்டாத உன் உணர்வு,

உன் மனதில் இல்லை யாரிடமும் வெறுப்பு,

நீ அன்பெனும் பாசப்பிணைப்பு,

இப்பூமிக்கு உன்னால் சிறப்பு,

இதை யாரும் சொல்லமுடியாது மறுப்பு,

இவ்வுலகில் அம்மா எனும் உறவு,

ஆண்டவன் அருளின் படைப்பு.....


6/3/24

நினைவுகள்

 சில நினைவுகள் துடிப்பை தரும் 

பல நினைவுகள் சிரிப்பை தரும் 

சில நினைவுகளால் திண்டாடும் நாம் 

பல நினைவுகளை கொண்டாட மறக்கிறோம்

ஆம் நினைவுகள் பறவைகள் தான் 

நம் மனதில் சுற்றி திரியும் பறவைகள்.

நிலவின் ஒளியில் நடக்க ஆசை

 உன்னோடு அந்த நிலவின் ஒளியில் நடக்க ஆசை 

யாரும் இல்லாத கடல் மணலில் உன் கை கோர்த்து நடக்க ஆசை 

கூண்டுக்குள் இருந்த நான் உன்னோடு வெட்டவெளியில் பறக்க ஆசை

 உன் மார் சாய்ந்து தூங்க ஆசை என்றும்

 உன் முதல் குழந்தையாக இருக்க ஆசை    

 காதலன் என்றாலே என்னைக் கட்டிப் போட்டு 

அவன் கட்டுக்குள் வைப்பவன் என்று எண்ணினேன்

ஆனால் நீ என்னை கட்டி அணைத்து 

உன் நெஞ்சுக்குள் வைத்துக்கொண்டு இருக்கிறவன் 

இறைவன் நம்மை  இணைத்ததிற்கு ஒரு காரணம் உண்டு

அதை நாம் இணைந்து அறிவோம் (அறிந்து) செயல்படுத்துவோம்.

                                               

29/2/24

எட்டிப்பார்க்கும் நிலவு

 மேகத்திற்கு மறைந்து எட்டிப்பார்க்கும் நிலவு

எட்டாக்கனியென அறிந்தும் - அதனை

தொட்டுப் பார்க்க எத்தனிக்கிறது உள்ளம்....

24/2/24

முகப்புத்தகத்தில்

 எப்போதும்போல் முகப்புத்தகத்தில் 

நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன்.

தள்ளத் தள்ள பதிவுகள் குவிந்து கொண்டே இருந்தன. 

 இருபாலர் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன்

 கல்லூரிச் சுற்றுலா புகைப்படத்தை பதிவிட்டு இருந்தான்.

தள்ளிய விரல் உறைந்து நின்றது.

நினைவுகள் கல்லூரி காலத்திற்கு இழுத்துச் சென்றன. 

ஓர் இன்பச் சுற்றுலா நடந்திருக்கலாம் 

ஒரு குழு புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம்

வீட்டில் பிரேம் இட்டு மாட்டியிருக்கலாம்

அந்தக் கொடுப்பினையும் இல்லை.

இத்தனை வருடங்களாக ஒர் ஒளிப்படத்தை 

ஒளித்து வைத்து பார்க்க வேண்டியிருந்திருக்காது.


நாம் சந்திக்கும் பூங்கா

நீர்வாழ் தாவரங்கள் நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்
 
நம் அன்பில் மிதந்து பூக்களோ! பூத்துத் தரும்
 
நாம் வேண்டும் வண்ணம் பூக்களை விஞ்சும்
 
திரவியதோடு நடை பழகிக்கொண்டிருக்கும் தென்றல்.

'பிறருக்கு அனுமதியில்லை' இவ்வாசக பலகையை

பூங்காவே மாட்டிக்கொண்டது ஒருவரின்றி ஒருவர் 

வருவோமெனில் முதற்சொன்ன மூன்று சேவைகள் மூடப்படும்.

நீ சுவைத்துத்தரும் காய்கள் எனக்கு கனியாகும் 

இச்சேவை மாத்திரம் எனக்கு இங்கும் வெளியும் கிட்டும்.

நீ என்னிடமிருந்து பறிக்கப்பட்ட பின், இப்பூங்கா 

என்னிடம் வெறுமையை காட்டியது இப்போதோ 

வெறுப்பை காட்டுகிறது தாவரங்களா? புதர் மண்டிற்று.

பூக்களா? அவை பூப்பதேயில்லை தென்றலா?

உஷ்ணமேட்றி தகிக்கின்றது பூங்காவா? 

அது என்னை வதைக்கும் கூடமாகிப்போயிற்று.

 

23/2/24

மறைந்த நினைவுகளுடன்

 மறைந்த நினைவுகளுடன்

மறந்து சென்ற உன்னை

மரத்துப்போன நெஞ்சம்

மருந்தென எண்ணும்

அன்பின் முடிவு

அன்பின் வெளிபபாடே காதல்

காதலின் வெளிபாடே அன்பு

அன்பின் வெளிபாடே‌ மோதல்

மோதலின் வெளிபாடே காயம்

காயத்தின் வெளிபாடே கண்ணீர்

கண்ணீரின் வெளிபபாடே ஞாயம்

ஞாயத்தின் வெளிபாடே குரல்

குரலின் வெளிபாடே ஏக்கம்

ஏக்கத்தின் வெளிபாடே கோபம்

கோபத்தின் வெளிபாடே உண்மை

உண்மையின் வெளிபாடே நீதி

நீதியின் வெளிபாடே வெற்றி

வெற்றியின் வெளிபாடே தலைகனம்

தலைகனத்தின் வெளிபாடே ஆதிக்கம்

ஆதிக்கத்தின் வெளிபாடே அழிவு

அழிவின் வெளிபாடே முடிவு. 

20/2/24

கொரோனா

 வாழ்கையின் சீற்றத்தை கண்டோமடா !!!

கொரோனாவின் அச்சத்தில் வாழ்ந்தோமடா !!!

முககவசத்தை அணிந்து நடமாடினோம் !!!

கைக்கழுவி சுத்தத்தை நிலைநாட்டினோம் !!!

சமூக விலகல் ஒன்றை பின்பற்றுவோம் !!!

தடுப்பூசி போட்டு பாதுகாப்பாகிடுவோம் !!!

கடந்து போகும் என நம்பிடுவோம் !!!

மன உறுதியால் வென்றிடுவாம் !!!


18/2/24

இது தான் வாழ்க்கை

 'சாவி' இல்லாத 'பூட்டை'

மனிதன் உருவாக்குவதில்லை

'தீர்வு' இல்லாத 'பிரச்சனைகளை' 

கடவுளும் தருவதில்லை!

இது தான் வாழ்க்கை, 

இதை புரிந்துக்கொண்டால் 

வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம்..


மூத்தவனாய் பிறந்தவன்

 முத்தமிட்டு மகிழ்ந்திடவே மூத்தவனாய் பிறந்தேனோ????

காலம் கடந்து போன பின்னும் கர்ணன் போல காப்பேனோ????

உன் முன்னேற்றம் கண்ட பின்பே மூச்சயர்ந்து போவேனோ????

உன் இன்னல் எல்லாம் தேர்ந்த‌ பின்பே இறைவனடி சேரவேனோ?????


உன் மீது கொண்ட காதல்

 உன் மீது கொண்ட காதல் கண்ணில் இருந்தால்

கண்ணீராய் துடைத்து இருப்பேன்

இதயத்தில் இருப்பதால் உயிர் விடுகிறேன்
       

உன்னை பார்த்த முதல் நாள்

 உன்னை பார்த்த முதல் நாள் என் மனதில் மாற்றம் ஒன்று கண்டேன்.

தினமும் ஆயிரம் கனவுகளுடன் என் நாட்கள் அழகாய் நகர,

நீ என் அருகில் இருந்தால் இந்த மாற்றமும் ஏற்றம் ஆகும்.

எப்போது திருமணம் எனும் மேடையில் என்னை அறங்கேற்றுவாய்

இன்று வரை உன் வரவை எண்ணி நிதமும் காத்திருக்கிறேன்.

அல்லிராணி

 ஆதவன் மறையும் முன்பு

ஆடையை அணிந்து கொண்டு

ஆசை ஆசையாக அல்லிராணியை

ஆறுத்திங்கள் கழித்து காணச் சென்றேன் - அங்கு

அல்லிராணி சிங்காரமாக சிகை

அலங்காரம் செய்து கொண்டிருப்பதாக செய்தியைக் கேட்டு

அரைமணி நேரம் அமர்ந்திருந்தேன்

அல்லிராணி ஆடி அசைந்து வரும் வேளையில்-என்

அப்பா மகனே! 'ஆ' விற்கு சேவகம் செய்- என்று

ஆணைபிறப்பிக்கவே அழுதபடியே வீட்டிற்கு வந்துவிட்டேன்.


17/2/24

நிலை தடுமாறி நிற்கிறேன்

 அன்பினை அமுதாக்கி  தந்தவளே

உயிரையும் மெய்(உடல்)யினையும் தந்த

 உனக்கு உயிர் எழுத்திலும் சரி 

மெய் எழுத்திலும் சரி வர்ணிக்க 

வார்த்தை கிடைக்காததால் நிலை தடுமாறி

 நிற்கிறேன் இந்த வரிகளை முடிக்காமல்.

என்னிலும் நீ எண்ணிலும் நீ

ஒரு தொலைபேசி எண்ணை டயல் செய்து அழைக்க வேண்டியிருந்தது.

முதல் மூன்று எண்களை பார்த்தே டயல் செய்தேன்.

நான்காம் ஐந்தாம் ஆறாம் எண்களை விரல் தானாக டயல் செய்தது,

மூன்று எண்ணிற்கு மேல் நான் பார்க்கவே இல்லையே!

உணர்வு கொண்டு கவனித்தேன். என் விரல் டயல் செய்து கொண்டிருந்தது 

அவள் எண. தூக்கிவாரிப்போட்டது. இருநான்கு(8) ஆண்டுகளாய்

இவ்வெண்ணை நான் டயல் செய்ததே இல்லை

இன்னமும் என் விரல் நுனிகளில் என்ன செய்துகொண்டிருக்கிறாய்.
 

எனக்கு ரோஜாக்கள் பிடிக்கும்

 எனக்கு ரோஜாக்கள் பிடிக்கும் சிலமுறை

செடிகள் வாங்கி சிரத்தையோடு பராமரித்திருக்கிறேன்
 
ஓரிருமுறை பூக்கும் பின் காய்ந்து போகும்
 
இருந்தும் எனக்கு எந்த ரோஜாவிடமும் கோபமில்லை.

16/2/24

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத்தைப் போற்றுவோம்...!
 
உலக படைப்பில் உன்னத படைப்பே இயற்கை விவசாயம்.....!
 
ஏர்கலப்பையை பிடித்து நிலத்தை சமப்படுத்தி....!
 
முத்து முத்தாய் விதையை விதைத்து....!
 
பச்சை பச்சையாய் நெற்கதிர் முளைத்து...!
 
உலகின் பஞ்சத்தை போக்கும்....!
 
விவசாயத்தை நோசிப்போம்....!
 
உழவனின் உடலில் முத்து முத்தாய்.....!
 
வியர்வை சொட்ட சொட்ட....!

கட்டு கட்டாய் நெற்கதிரை.....! 

அறுவடை செய்வோம்....! 

ஆடி பட்டம் தேடி வர ஆசை ஆசையாய்....! 

கரும்பை  போட்டு கட்டு கட்டாய் கட்டி குவிப்போம்....!

அனைத்து வகை காய்யையும் இயற்கையில் .....! 

விளைவித்து ஊர் ஊராய் சென்று....! 

இயற்கை காய்யென கூவி  கூவி விற்பனை செய்வோம்.....! 

மழை மும்மாாி பொழிய....! 

மக்கள் பஞ்சம் தீரா.....! 

மண்ணின் மணம் மற.....! 

புதிது புதிதாய் விவசாயத்தை செய்வோம்.....! 

மழை தரும் இயற்கையை போற்றுவோம்.....! 

மண் வளம் தரும் மண்புழுவை பாதுகாப்போம்.....! 



என் இதயம் நீதான்

 என் கண்னிரை துடைபதர்கு யாரும்  இல்லை

என் கவலைக்கு ஓய்வு இல்லை

என் காதல் அவலுக்கு புரியவில்லை

அதை மறக்க என்னாள் முடியவில்லை

அவள் இல்லாத உலகம் எனக்கு தேவையில்லை

என் இதையம் அவளால் காண வில்லை

அதை தேடி பார்க்க எனக்குவிருப்பம் இல்லை

என் என்றால் என் இதயம் நீதான் என்று மறகவில்லை


15/2/24

அம்மாவின் மடியில்

 உன் பஞ்சு மெத்தை கால்கள் 

தரையில் படுகையில் தரை

சிலிர்த்து போகிறது! அழகான 

கருவாக நீ என் வயிற்றில் 

உருவான போத என்னை 

ஆனந்த்தில் ஆழ்த்தி விட்டாய்! 

நான் கொடுத்த முச்சுக்காற்றை நீ

விடுகையில் என் மனம் பரவச மடைகிறது!

முளைத்தெழும் விதைப் போல நீ 

வளர்ந்து வா அம்மாவின் மடியில் தூங்க!........


விரல் கோர்க்கும் நேரம்

 உன்னை நேசிக்க ஆரம்பித்த நிமிடத்தை விட
 
நேசிக்கும் நிமிடமே இதமானது!

என் கண்ணீரை நீ துடைக்கும் நேரமும் 

உன் விரலை என் விரலோடு கோர்க்கும் நேரம் எப்போது.

உன்னையை பார்க்கும் போது

 உன்னையை பார்க்கும் போது நெல்மனி போல 

          மனதில் ஆசைகொட்டி வழிகிறது! 

நீ என்னை பார்க்காத தருணம் இதயம் 

           மரணத்தின் வாயிலை எட்டி விடுகிறது! 


12/2/24

என்றென்றும் நீயெனக்கு நண்பனே

நண்பன் என்ற ஒரு சொல்லே
உலக மக்களின் ஆதரவு-கீழே 
விழும் முன்னே தாங்கி பிடித்திடித்திடும் 
கரம் கொண்டான் நண்பனே

கோடையிலே நீராய் குளிர்ச்சியில் தீயாய்
தீபமாய் இருப்பான் நண்பன்-காலமது
புறந்தள்ளும் உலகமது உடைத்தெறியும் ஆதரவு 
கரமாய் அன்பு நண்பனே

பட்டியலில் சேர்க்கவில்லை இருந்தாலும் தெய்வமவன்
தோல்வியில் தன்னம்பிக்கை கொடுப்பான்-வெற்றியில்
மனநிறைவு அடைவான் இணைபிரியா சந்தோஷம்
உறவறியா அப்பாசம் நண்பனே

பூமியதுதூக்கி எறிந்தாலும் உன் மடியில்
விழவேத்தான் ஆசை கொள்வேன்-கர்ணன் 
வழி நடப்பேன் உனக்கென உயிர்கொடுப்பேன்
என்றென்றும் நீயெனக்கு நண்பனே 

ஆலமரம் போல விரிந்து வாழ

ஆலமரம் போல விரிந்து வாழ...
 
துன்பத்தை துடைத்து எழு

கஷ்டத்தை கரைத்து எழு

கவலையை  கலைத்து நில்

வாழ்க்கை என்ற விதைக்கு 

தன்னம்பிக்கை என்ற நீரை ஊற்றி 

ஆலமரமாய் விரிந்து வாழ்வோம்!...