26/10/23

என் காதல் மட்டும் எப்படி உன்னைச் சேரும்

என் வானம் நிலா கண்டதில்லை,

என் மண் மழை கண்டதில்லை,

 என் தோட்டத்தில் பூக்களும் இல்லை, 

என்னிடத்தில்புன்னகையும் இல்லை,

 கல்லறைப் பூக்கள் என்றும் கருவறை

சேர்வதில்லை...என் காதல் மட்டும்

 எப்படி உன்னைச் சேரும்...?

25/10/23

தாய் தமிழ் கவிதை

 அண்டத்தை உனக்கு அறிமுகம் செய்ய குருதியை கொடையளித்து நீ பிறக்கையிலே! 

உன் அழுகுரல் செவித்து பூரிப்பவளும் தாயே ! கண்டங்கள் உன்னை நெருங்கா

 வண்ணம் கண்ணிமையென காத்து  நீ வளரையிலே! உன் கண்ணீரை கண்டு 

துடைப்பவளும் தாயே! புன்னகை மலராய்- நீ பூத்திருக்க கள்ளி முட்களின் மத்தியிலே

 வாழ்ந்து-நீ இளைப்பாற இலைகளின் நிழலென நித்தமும் நிறைவாய்-நீ வாழ

        அன்பென்னும் தொகையை மிகையாய் வழங்குபவளும் தாயே!       

தாய்




13/10/23

உண்டா தமிழ் கவிதை

வாழ்க்கை கவிதைகள்

 "மனதிற்கு அமைதி தரும்
கடல் ஆலைகளை இரசித்தது
உண்டா?...

உடலுக்கு புத்துணர்வு தரும்
நீர்வீழ்ச்சிகளில் குளித்தது
உண்டா?...

உள்ளத்தை கொள்ளைக்கொள்ளும்
மழை நீரில் ஆடியது 
உண்டா?...

முகத்தை மெல்ல வருடிச்செல்லும்
தென்றல் காற்றை உயர்ந்தது  
உண்டா?...

பச்சை பசுமையான 
வயல்வெளிகளை கண்டது
உண்டா?...

நண்பர்களுடன் ஒன்றாக
ஆற்றில் எதிர்நீச்சல் போட்டது
உண்டா?...

நுகர்ந்தவரை மதிமயக்கம்
பூக்களை நுகந்தது 
உண்டா...

அன்னாந்து தண்ணீரை தேடும் 
கருமேகங்களை பார்த்தது
உண்டா?...

கண்களுக்கு விருந்தளிக்கும்
சூரிய உதையத்தை பார்த்தது 
உண்டா?...

சிறுவயதில் மரங்களில் 
மரக்குரங்கு விளையாடியது
உண்டா?...

கடும் தாகத்தில்
மண்பானை நீர் அருந்தியது
உண்டா?...

இத்தனையையும் உணந்தவனுக்கு
தான் இயற்கையின் அருமை புரிவது

உண்டு."

காளையார்கோவில் - ப.பவித்திரன்

Kavithai Competition 2023 & 24