அம்மா மனதுக்கு ஆறுதலையும் உடலுக்கு தெம்பையும் தரும்
அற்புத சொல் அம்மா உச்சரிக்கும் உதடுகளுக்கு
உத்வேகம் தரும் அட்சய பாத்திரம் அம்மா எல்லா
உயிர்க்கும் பொதுவான மூல மந்திரம் அம்மா உணவில் கூட
உயர்ந்தவைகளை பிள்ளைக்கு தரும் தியாக பிரம்மம்
Read & Top 750+ Tamil Love Kavithaigal ✓ 2025 & 26 - New Collections of Tamil Love Kavithai (Poem) Competition, (சிறந்த தமிழ் கவிதைகள்)
அம்மா மனதுக்கு ஆறுதலையும் உடலுக்கு தெம்பையும் தரும்
அற்புத சொல் அம்மா உச்சரிக்கும் உதடுகளுக்கு
உத்வேகம் தரும் அட்சய பாத்திரம் அம்மா எல்லா
உயிர்க்கும் பொதுவான மூல மந்திரம் அம்மா உணவில் கூட
உயர்ந்தவைகளை பிள்ளைக்கு தரும் தியாக பிரம்மம்
தவமிருந்தாலும் கிடைக்க முடியாத பாசம் தாயின் பாசம்!
மனதில் கஷ்டம் இருந்தாலும் அன்பை வெளிக்காட்டும் பாசம் தாயின் பாசம்!
எந்த மனிதனும் பார்க்காத பாசம் தாயின் பாசம்!
அவள் பெண்மையின் பேரழகு
என்னைப் பெற்றெடுத்த ஓர் அழகு
பதுசாய் என்னை வளர்த்திட,
அவள் நெய்தால் ஒரு பஞ்சு மெத்தை
ஆனால் அவள் உறங்கியதோ ஒரு ஓலைப்பாய் ,
ஈரத்துணி இறுக கட்டி அவள் வயிறு பசியாறி,
ஈச்சம் பழம் இலந்தைப்பழம் என்றெல்லாம் எனக்கு அளித்தாள்,
ராணி என அவளை வைக்க ஆசைப்பட்ட ஏழை குழந்தை,
அவள் போன வழியெல்லாம் மலர் தூவி ஏங்கி நின்றேன்.......
விடுமுறை இல்லை உனக்கு,
உன் வியர்வை துளிகளில் இல்லை கணக்கு,
விருந்தோம்பலும் பிறருக்கு செய்திடும் உன் மனது,
ஆனால்வெற்றிடமாகிடும் உன் வயிறு,
மீந்த உணவையும், மகிழ்ந்து சாப்பிடும் உன் மனது,
நீ மகிழ்ச்சியின் பிறப்பு, கவலை இருந்தாலும்,
வெளிக்காட்டாத உன் உணர்வு,
உன் மனதில் இல்லை யாரிடமும் வெறுப்பு,
நீ அன்பெனும் பாசப்பிணைப்பு,
இப்பூமிக்கு உன்னால் சிறப்பு,
இதை யாரும் சொல்லமுடியாது மறுப்பு,
இவ்வுலகில் அம்மா எனும் உறவு,
ஆண்டவன் அருளின் படைப்பு.....
உன் பஞ்சு மெத்தை கால்கள்
தரையில் படுகையில் தரை
சிலிர்த்து போகிறது! அழகான
கருவாக நீ என் வயிற்றில்
உருவான போத என்னை
ஆனந்த்தில் ஆழ்த்தி விட்டாய்!
நான் கொடுத்த முச்சுக்காற்றை நீ
விடுகையில் என் மனம் பரவச மடைகிறது!
முளைத்தெழும் விதைப் போல நீ
வளர்ந்து வா அம்மாவின் மடியில் தூங்க!........