30/1/24

உன்னை நினைத்து நினைத்து

மணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து உருவான உதயமடா நீ!

 என் உயிரோடு உனை சேர்த்து கருவோடு இணைந்தவனடா நீ!

என் வயிற்றில் கை வைத்து ரசித்ததுண்டு நான்!

 ஆறாம் மாதம் நீ அடையும் போது ஆனந்த கண்ணீரில் ஆழ்ந்தவளடா நான்!

நீ பிறக்க போகும் தருவாயில் என் வயிற்றிலேயே இறந்தவனடா நீ!

உன் முகம் கூட பார்க முடியாத பாவியடா நான்

 பத்து வருடமாக உன்னை நினைத்து நினைத்து அழும் பேதையடா நான்!

என்று உன்னோடு வந்து சேர்வேனோ ஆவியாய் நான்.

0 Please share your thoughts and suggestions!: