26/1/24

உன் காலடியில் என் கவிதை

 அன்பு அன்னைக்கு ஆயிரம் கோடி வணக்கங்கள்

 இல்லை என்பது உனக்கு தெரியாது ஈகை குணத்துடன்

 பிறந்ததினல் உள்ளத்து வலிமை இருந்ததினால்

 ஊக்கத்துடன் வலம் வருகிறாய் நாள்தோறும்

 எளிமையான தோற்றமும், பேச்சும் ஏற்றமான 

உன் வாழ்கையின் அடையாளம் ஐம்பது மணநாள்

 முடிந்தாலும் ஒலிக்கிறது உன் தேன் போன்ற குரல்

 ஓடியாடி நீ வேலை செய்தாலும் ஒளடதம் போன்ற 

உன் வார்த்தைகள் மாறாது. க ச ட த ப ற வல்லினம்

 உன் வலிமை எனக்கு அதிசயம், ங ஞ ண ந ம ன மெல்லினம்

 நீ அன்னை என்பதில் பெருமிதம், ய ர ல வ ழ ள இடையினம் 

உன் காலடியில் என் கவிதை சமர்ப்பணம் 


0 Please share your thoughts and suggestions!: