28/11/23

இறுதி மூச்சுவரை

 நீ என் முதலாக இல்லை,முடிவாக வேண்டும்... 

நீ என் கனவாக இல்லை, நினைவாக வேண்டும்...

 நீ என் கண்ணாக இல்லை, பார்வையாக வேண்டும்... 

நீ என் காமத்தில் இல்லை, காதலில் வேண்டும்...
 
நீ என் இளமையில் மட்டும் இல்லை, முதுமையிலும் வேண்டும்...
 
நீ என் துணையாக இல்லை, நிழலாக வேண்டும்... 

நீ என் மூச்சாக இல்லை, இறுதி மூச்சுவரை என்னோடு இருந்தால் போதும்!!!

27/11/23

உன் நினைவில் நான்

 என்னை கவிஞன் ஆக்கிய பெருமை உன்னையே சேரும்..! 

உன்னை பார்க்காமல் இன்றுடன் மூன்று வருடங்கள் கடந்து செல்கின்றன... 

உன் மீது நான் கொண்ட அன்பில் சிறுதுளி கூட மாற்றம் இல்லை...

இன்று மட்டும் இல்லை என்றும் உன் நினைவில் நான்...

என்னுடன் இருப்பாயா

 என்னுடன் இருப்பாயா எனக்கே எனக்காக மட்டும்  என்னை புன்னகைக்க வைத்தவனாய்
 
இருப்பாயா என்னை சுற்றி சுற்றி வருவாயா  என் ரசிகனாக இருப்பாயா  இல்லை 

என்னை வர்ணிக்கும் கவிஞனாக இருப்பாயா மார்போடு அனைத்துக் கொள்வாயா 

 என் உணர்வுகளை புரிந்து  கொள்வாயா என் அழுகையை துடைப்பாயா  

என்னுடன் கை கோர்த்து நடப்பாயா அல்லது குழந்தை வேடம் அணிந்து
 
என்னை தூக்கி செல்வாயா என் மனம் உன்னை நினைக்கையில்  என் அருகில் 

வருவாயா முழுமையாக காதலிப்பாயா எப்படி தான் இருப்பாய் 

அதுவாக இருப்பாயா அல்ல இதுவாக இருப்பாயா  இப்படியெல்லாம்

 இருப்பாயா என்னவனாக என்னுடன் இருப்பாயா  என்னுடன் இருப்பாயா !!!!!

26/11/23

காத்திருந்த காதல்

 கண்ணிமைக்கும் நொடிப்பொழுதிலே என் கனவோடு கலந்தவனே
 
கனவில் கலந்த நீ என் நிஜத்தின் நிழலாக வருவது எப்போது... 

காத்திருப்புகளே காதலாய் மாறி போன நம் வாழ்வில் 

காத்திருந்த காதல் காவியமாய் மாறுவது எப்போது...

கானல் காதல்

ஒரு பொன் மாலை பொழுதினிலே, ஓவியமாய் பெண்ணொருத்தி
 
அவளை என் ஒற்றைக் கண்களால் ஒருமுறை கண்டேன்...
 
 சேனைகள் ஆறாயிரம் அவளருகில், பாவனைகள் ஒராயிரம்
 
அவள் முகத்தில், நின்றது பெண்ணா பதுமையா என்ற ஐயம் ஓங்க...  

விழுந்தேன் காதலில், பின் அறிந்தேன் அவளை என் 

பகைவனின் மகளென்று! மனம் செய்வதறியாது திகைத்து 

விழித்தேன் தெரிந்தது கனவென்று புரிந்தது கானல் நீரென்று! 

25/11/23

கண்டதெல்லாம் அதிசயம்

கண்டதெல்லாம் அதிசயம், புரிந்து கொண்டான் மனிதன். 

கண்ணில் தெரியாதவாறு படைத்ததால்,
 
காற்றின் அருமை புரியாமல் போனது.

  "அது படைத்தவன் தவறு என்று பதில் தேடாமல்,

 கொடுத்தவன் ஈகை குணத்தை நீ புகழ்பாடு!",
 
புலப்படாத காற்றையும், புகை கலந்து வீதியில் உலாவவிட்டு, 

கண்களுக்கு புலப்படுத்துவதா மனிதனின் அறிவு.
 
இனி மாசு வேண்டாம், அதை தூசாக நினைத்து தூர வீசு.
 
உன்னை மாற்றிக் கொள், இனி மின்னொளியாய் மாறி,மாற்று வழி,
 
மின் , ஒளி, என நாம் நலம்பெற, பலவகையில் பலன்தர பலயிருக்க.

23/11/23

எனக்கென நீ உனக்கென நான்

உன்னை முதல்முறையாகப் பார்த்தப்பொழுது என் மனதிற்குள் ஏதோ 

புது மாற்றம் உன்னை பிடித்ததற்குக்  காரணமோ உனது தோற்றம்!! 
 
உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன் பிறகு வேண்டாம் என்று நினைத்தேன்

  நண்பர்களாகப் பழகினோம் காதல் என்னும் மொட்டில் இருந்து காதலர்களாக மலர்ந்தோம்!! 
 
 நீயும் ஓரிடத்தில்  நானும் ஓரிடத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பது ஒரே இடத்தில்

 பார்த்தவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்கும் கண்கள் பேசத் தயங்கும்

 உதடுகள் புன்னகையுடன் நம்முடைய காதல் தருணங்கள்  உன் விரலை பிடித்துக் கொண்டு

 பிரிய மனதில்லாமல்  துடிக்கும் என் இதயம்  கால அவகாசமும் இல்லை!!  பிரிய மனதும் இல்லை!! 

 விரலை விடும் பொழுது  தீராதக் கண்ணீர்த் துளிகள்  நம் காதலின் அடையாளமாய்!!
 
மீண்டும் கை கோர்க்க  இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ???

  அன்றும் இன்றும் என்றும் என் வாழ்விற்கு உன்னால் மட்டுமே வண்ணம் பூசி ஒளி வீச முடியும்!!
 
இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எனக்கென நீ உனக்கென நான் என இருப்போம்!!! 

21/11/23

கடவுளின் வடிவம் தாயாக

  "பசியோடு தாயிருப்பாள் இருந்தும் தன் பிள்ளைக்கு, தவறாமல் பால் கொடுப்பாள்! 
 
 புத்தாடை உனக்கு தந்து, கந்தலை புத்தாடையாய் உடுத்திடுவாள்!
   
சுடும் தரையில் அவள் நடப்பால் தன் இடுப்பில் உனை சுமப்பால்!
  
 பரீட்சைக்கு நீ படிக்க துணையாக விழித்திருப்பாள்!
 
  கருவிலே சுமந்த உன்னை மட்டுமன்றி, உன் புத்தகப் பையினையும் சுமந்திடுவாள்!
  
 தோல் அளவு வளர்ந்த உன்னை குழந்தை என்றே, குளிப்பாட்டுவாள்!
  
 முன்னாலே நீ நடக்க, பின் நின்று ரசித்திடுவாள்!
 
  பட்டத்தை நீ பெற, தாய் பட்ட கஷ்டத்தை சொன்னதில்லை!
 
  அன்பின் ஆழம் கடலாக, கடவுளின் வடிவம் தாயாக!!!   

20/11/23

முத்தம்

தன் பெண்மைக்கு, மேன்மை சேர்க்கும்
 
தாய்மை நிலைஅளித்த குழந்தைக்கு,

 அன்னையின் முதல் பரிசு "முத்தம்."

என் முதல் நாயகனே

கருவினில் சுமக்காமல், தன் உயிரினில் சுமக்கும்... என் முதல் காதலனே..,

 என் முதல் நாயகனே.., உன் கஷ்டத்தை மறந்து, எனக்கு இஷ்டப்பட்டதை தந்தாய்...

 உன் அன்பினால் வளர்த்து, எனக்கு இன்பத்தை மட்டும் கொடுத்தாய்...
 
உன் அக்கறையை தந்து, எனக்கு எக்கறையுமில்லா பாசத்தை வடித்தாய்...

 எனக்கு வெற்றியை மட்டுமே, கற்றுக் கொடுத்தாய்... ஆனால் இன்று
 
தோற்று விட்டேன்... என் தந்தையின் அன்பின் முன்னால்!!! 

11/11/23

சாரல் மழை

 சாரல் மழையாய் எனை தீண்டி சிலிர்க்க வைத்து !  

மனம்தனில் குறுகுறுப்பை உண்டாக்கி! 

எந்தன் மாற்றம்தனை என்னையே விந்தையாய் 

பார்க்கும்படி செய்துவிட்டாயே கள்வா!

10/11/23

இரவின் நிழலில்

 இரவின் நிழலில் உறங்கிகொண்டிருந்தன  குப்பத்து வீடுகள்

  இரயிலின் கூவலில் விழித்துக்கொண்டது தெருவிளக்கு 

 குப்பைத்தொட்டி  பிரசவித்த குப்பைகளுக்கு நாய்குட்டிகள்

 முத்தமிட்டுக்கொண்டிருந்தன  நின்றுவிட்ட மணிகூண்டின்

 கடிகாரத்தில் நடந்துக்கொண்டிருந்தது   நாலுகால்பூச்சியின்
  
கட்டிட வேலை  மூன்றாம் உலகப்போருக்கு போய்க்கொண்டிருந்தன
 
முறுக்குமீசை பூனைக்குட்டிகள்  தூரத்தில் காணல் நீரில் மிதக்கும் 

                     நிலவுபோல் மின்னொளியில் கரைந்துகொண்டிருந்தது கட்டிடங்களின் இரவு.                      

9/11/23

நீயோ உனக்கான பொறுமை

 நான் விதையாக தோன்றினேன்.. நீயோ கருவாக தோன்றினாய்.. 

நான் செடியாக வளர்ந்தேன்.. நீயோ மானிடராக வளர்ந்தாய்.. 

நான் கனியாக மாறினேன்.. நீயோ மாறாமல் நிற்கின்றாய்..
 
என்னுடன் வா மானிடனே.! ஐம்பூதங்களையும், காலத்தையும்

 எனக்கேற்றவாறு மாற்றினேன் கனியாக மாறினேன்! 

நீயோ உனக்கான பொறுமை, நம்பிக்கை, விடாமுயற்சி என 

அனைத்தையும் என்னிடம் இருந்து பெறுவாய்.. கனியாக மாறுவாய்!

8/11/23

அவள் வர்ணனைக்கு அப்பாற்பட்டவள் என்று

 என் மனம் கவர்ந்த இளைய பிராட்டியைப் பற்றி எழுத வாய்ப்பளித்த, அந்த 
இறைவனின்

 மேல் சிறிது கோபம் தான்!!! ஏனெனில் அவளைப்பற்றி எழுத சொன்னவன், 

அவளின் எக்குணத்தைப் பற்றி வர்ணிக்க என்று என் கனாவில் கூறவில்லை!!
 
வந்தியரை மணந்தும் என்னை மயக்கும் அவள் அழகைப் பற்றி வர்ணிப்பதா?

 அருண்மொழிக்கு இரண்டாம் தாயாக திகழ்ந்தவர் அன்பைப் பற்றி வர்ணிப்பதா?
 
அரசியலில் சிறந்து என் மனம் ஆள்பவளின் அறிவைப் பற்றி வர்ணிப்பதா?

சோழ குலத்தில் உதித்த பெண் புலியின் வீரத்தைப் பற்றி வர்ணிப்பதா?

 அவளின் கருநீல கண்களைப் பற்றி வர்ணிப்பதா?
 
மல்லிகை மொட்டினை ஒத்த அவளது மூக்கைப் பற்றி வர்ணிப்பதா?

பன்னீர் மொட்டின் இதழ்களை ஒத்த அவளது இதழ்களைப் பற்றி வர்ணிப்பதா? 

கூந்தல் கோபுரமாய் எழுந்து அவள் அழகை உணர்த்தும் அழகைப் பற்றி வர்ணிப்பதா? 

 இப்படி எல்லாம் என் சிந்தனை பொன்னி நதி போல் ஓட, என் மனம் குழம்ப,

ஒரு நொடி கண் மூடி அவளைப்பற்றி நினைக்க, என் மனமும் மதியும்
 
ஒன்று சேர்ந்து சொன்னது, அவள் வர்ணனைக்கு அப்பாற்பட்டவள் என்று!!!!!  

7/11/23

என் உயிரே

 வலிகள்தான் என்றாலும் வரவேற்கிறேன்.. வா என் அன்பே.. 

விதியென்ற ஒன்று உன்னை என்னுள்ளே கோர்க்க... 

என் உயிரோடு வளர்ந்த விதை நீ.. விருட்சமானாய்... 

வாழைப் போலே நீ குலை விடும்போது கண்ணீரோடு உன்னை ஏந்திக் கொள்வேன் கண்ணே..

 நீலம் பூத்த வானமும் திசைகள் எங்கும் ஊர்களுமாய்  இந்த உலகம் உனக்கு புதிதுதான்...
  
அன்பை மட்டும் எதிர்பார்க்காதே... வஞ்சகமும் வம்பும் கூட சேர்ந்து வரலாம்.... 

கண்ணில் தூசி விழுமுன்னே இமைகள் மூடிக் கொள்வது போலதான்... 

உன்னை நீயே காத்துக் கொண்டால்  இந்த உலகம்  உனக்கும் அழகாய் தெரியும்....
  
 உறவுகள் குறையலாம் .. நட்பும் பிரியலாம்.. காதல் கண்ணீர் தரலாம்... 
 
உடைந்து விடாதே...   உனக்கான நம்பிக்கை உனக்குள்ளே உண்டு... 

நீ ஆலமரமாய் விழுது விடும் நேரம் உன் அன்னை நான் உன்னை ஆசீர்வதிப்பேன்... 
  
அதற்காக இன்றே உன்னை வரவேற்கிறேன்...

  என் உதிரத்தில் வளர்ந்தாலும் உன்னிடம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை..

   யாருக்கும் காயம் தராமல் வாழ்ந்து காட்டு அதுவே போதும் என் உயிரே...

6/11/23

நீ ஓர் வரையாத ஓவியம்

  இயற்கை  இயற்கையே ! நீ ஓர்  வரையாத ஓவியம்
  
பாற்கடலை அருவியாக்கி  வின்மீன்களை மலர்களாக்கி
 
உணர்வுகளை ஊமையாக்குகின்றாய் உன்னை ரசிக்கத்தான்

எத்தனை கண்கள் அட அடடா ! குயில்களின் கூக்குரலும்  

மயிலின் அழகிய நடனமும் கருமேகத்தின் குளிர்ந்த காற்றும் 

இடியின் மேளதாள இசையும்  வண்ண நிலவின் ஒளியும் 

 சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்களும்  உன்னை 

வரவேற்க காத்திருக்கின்றன  வானவில்லின் ஏழு வண்ணங்களும் 

 ஏழு ஸ்வரங்களாக இசைகின்றன   இயற்கையே ! 

நீயும் உயிர்களின் பிறப்பிடம்தான்  மனதின் மனப்போராட்டங்களும் 

 உன் மடியில் இறக்கிவிக்கப்படுகின்றன  உன்னை
                                                             
                                                                வர்ணிக்க வார்த்தைகளின்றி விடைபெறுகிறேன்                                                                                                   


5/11/23

மனம் எனும் கூண்டில்

 மறதி வேண்டும் என்று மனம் துடிக்கிறது..!! 

மறக்க முடியாமல் நினைவுகள் மனதில் இருக்கின்றது..!! 

உன்னோடு பேசிய போது உன் விழி பார்த்து கிடந்தேன்!!! 

நீ என்னோடு பேசாத போது என் விழி இழந்து கிடந்தேன்!!! 

மனம் திறந்து பேசுவாய் என மங்கை மனம் எதிர்பார்க்கிறது... ஏனோ!!

 தெரியவில்லை, உன் மனம் கூற மறுக்கிறது. என் பாவம் செய்தேனோ!!!! 

ஒவ்வொரு நொடியும் என் சித்தம் முழுதும் பித்தம் கொண்டு,

 அழுகிறேன் உன் ஒற்றை குறுஞ்செய்தி வந்து விடும் என்று...!! 

உன் மீது இருக்கும் என் காதல் சிறு துளியெனும் குறையாது..!! 

சேராமல் போனாலும் உன் நினைவு  என்றும் மறையாது..!! 

இனிய நினைவுகளோடு எப்போதும் உறைந்து இருப்பாய் என் மனம் எனும் கூண்டில்...!!!

விரைவில் சந்திப்போம்

 உந்தன் வெண்மையான உள்ளத்தில் பல பொய்களை தீட்டினேன் 

என் பொய்களை உண்மையாக காட்டினாய் நீ எனக்களித்த வெகுமதி 

இந்த உலகறியும் நான் உனக்களித்த அவமதிகள் யாரறிவார் நானறிந்தேன்

என் தீட்டலின் வேதனை எவ்வளவு கொடியதென்று துளிகூட சிந்திக்காத 

என் மதியும் சுயநலமிக்க என் கரங்களும் இனிமேல் உன்னை 

சந்திக்காது உண்மையாக சிந்தித்தால் விரைவில் சந்திப்போம்

4/11/23

காதல் என்னும் உளி

வலிகளில் மிகவும்  கொடியது காதல்  வலி ..  

அதை தாங்கவும் கற்றுக்கொடுத்தது  உன் விழி.. 

தாங்கிய பின்னும் கொடுத்தாய் மறு வலி.. 

அதையும்  தாங்கிக் கொள்ள  கண்டுப்பிடித்தேன் ஒரு வழி.. 

அது தான் காதல் என்னும்  உளி..

3/11/23

உன் சமையல் அறையில்

சமையல் அறையில் நான் சமைத்திடும் போது  

வாசம்  நுகர்ந்து  அறையில் நுழைந்தாய் சமையலை 

சுவைக்க வந்தாய் என்று நினைத்தேன் ஆனால் நீ 

என்னை நெருங்கி வந்தார் நீயோ என்னை ரூசித்தாய் 

நானோ உன் குரும்புகளை ரசித்தேன் என்னை 

சினுங்க வைத்தாய் இறுதி வரை சமையலை ருசிக்கவில்லை