23/11/23

எனக்கென நீ உனக்கென நான்

உன்னை முதல்முறையாகப் பார்த்தப்பொழுது என் மனதிற்குள் ஏதோ 

புது மாற்றம் உன்னை பிடித்ததற்குக்  காரணமோ உனது தோற்றம்!! 
 
உன்னைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன் பிறகு வேண்டாம் என்று நினைத்தேன்

  நண்பர்களாகப் பழகினோம் காதல் என்னும் மொட்டில் இருந்து காதலர்களாக மலர்ந்தோம்!! 
 
 நீயும் ஓரிடத்தில்  நானும் ஓரிடத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பது ஒரே இடத்தில்

 பார்த்தவுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்கும் கண்கள் பேசத் தயங்கும்

 உதடுகள் புன்னகையுடன் நம்முடைய காதல் தருணங்கள்  உன் விரலை பிடித்துக் கொண்டு

 பிரிய மனதில்லாமல்  துடிக்கும் என் இதயம்  கால அவகாசமும் இல்லை!!  பிரிய மனதும் இல்லை!! 

 விரலை விடும் பொழுது  தீராதக் கண்ணீர்த் துளிகள்  நம் காதலின் அடையாளமாய்!!
 
மீண்டும் கை கோர்க்க  இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டுமோ???

  அன்றும் இன்றும் என்றும் என் வாழ்விற்கு உன்னால் மட்டுமே வண்ணம் பூசி ஒளி வீச முடியும்!!
 
இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எனக்கென நீ உனக்கென நான் என இருப்போம்!!! 

0 Please share your thoughts and suggestions!: