5/11/23

மனம் எனும் கூண்டில்

 மறதி வேண்டும் என்று மனம் துடிக்கிறது..!! 

மறக்க முடியாமல் நினைவுகள் மனதில் இருக்கின்றது..!! 

உன்னோடு பேசிய போது உன் விழி பார்த்து கிடந்தேன்!!! 

நீ என்னோடு பேசாத போது என் விழி இழந்து கிடந்தேன்!!! 

மனம் திறந்து பேசுவாய் என மங்கை மனம் எதிர்பார்க்கிறது... ஏனோ!!

 தெரியவில்லை, உன் மனம் கூற மறுக்கிறது. என் பாவம் செய்தேனோ!!!! 

ஒவ்வொரு நொடியும் என் சித்தம் முழுதும் பித்தம் கொண்டு,

 அழுகிறேன் உன் ஒற்றை குறுஞ்செய்தி வந்து விடும் என்று...!! 

உன் மீது இருக்கும் என் காதல் சிறு துளியெனும் குறையாது..!! 

சேராமல் போனாலும் உன் நினைவு  என்றும் மறையாது..!! 

இனிய நினைவுகளோடு எப்போதும் உறைந்து இருப்பாய் என் மனம் எனும் கூண்டில்...!!!

0 Please share your thoughts and suggestions!: