7/11/23

என் உயிரே

 வலிகள்தான் என்றாலும் வரவேற்கிறேன்.. வா என் அன்பே.. 

விதியென்ற ஒன்று உன்னை என்னுள்ளே கோர்க்க... 

என் உயிரோடு வளர்ந்த விதை நீ.. விருட்சமானாய்... 

வாழைப் போலே நீ குலை விடும்போது கண்ணீரோடு உன்னை ஏந்திக் கொள்வேன் கண்ணே..

 நீலம் பூத்த வானமும் திசைகள் எங்கும் ஊர்களுமாய்  இந்த உலகம் உனக்கு புதிதுதான்...
  
அன்பை மட்டும் எதிர்பார்க்காதே... வஞ்சகமும் வம்பும் கூட சேர்ந்து வரலாம்.... 

கண்ணில் தூசி விழுமுன்னே இமைகள் மூடிக் கொள்வது போலதான்... 

உன்னை நீயே காத்துக் கொண்டால்  இந்த உலகம்  உனக்கும் அழகாய் தெரியும்....
  
 உறவுகள் குறையலாம் .. நட்பும் பிரியலாம்.. காதல் கண்ணீர் தரலாம்... 
 
உடைந்து விடாதே...   உனக்கான நம்பிக்கை உனக்குள்ளே உண்டு... 

நீ ஆலமரமாய் விழுது விடும் நேரம் உன் அன்னை நான் உன்னை ஆசீர்வதிப்பேன்... 
  
அதற்காக இன்றே உன்னை வரவேற்கிறேன்...

  என் உதிரத்தில் வளர்ந்தாலும் உன்னிடம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை..

   யாருக்கும் காயம் தராமல் வாழ்ந்து காட்டு அதுவே போதும் என் உயிரே...

0 Please share your thoughts and suggestions!: