31/12/19

குண்டுகள் துளைக்காத கவசம் (கவிதை போட்டி)

love failure kavithai
வேறு மனம்
குண்டுகள் துளைக்காத
கவசம் கொண்டு
கட்டப்பட்ட மனம்  -இடிந்தது
கடுஞ் சொற்கள்
கேட்ட கணம் !
காக்க வேண்டும் -வேறு
கவசம் கொண்டு -இல்லை
கேட்க வேண்டும் எதையும்
கடந்து செல்லும் மனமொன்று
 -வி .ஆஷாபாரதி

Tamil Kavithai Competition


27/12/19

விவசாயி (உழவன்) - (கவிதை போட்டி)

vivasayam kavithaigal
உயிர் வாடிய காலம் சென்று!
பயிர் வாடி அழிகிறது இன்று !
அணைத் திறந்து பயிரிட்ட நீயோ,
வினை மறந்து பயணிப்பது ஏன்?
பொங்கல் வைத்து நன்றி கூறிய
நன்றி மறவா நல்லவனே!
உனக்கு நன்றிக் கூற வாய்ப்பிது!
உனக்கு வந்தனை செய்வதில் எனது சிறுப்பங்கு இக்கவிதை!
வாழ்க உழவும் உழவனும்!
வளர்க தமிழும் தமிழரும் !!
- நா ஈஸ்வரன்

இயற்கை தந்தன இனிமை - (கவிதை போட்டி)

natural tamil kavithai image

அந்தி சாயும்  நேரம்பிறை நிலவும் சூரியனும் 
குளிர்ந்து தன் அழகை பிரதிபலிக்க
ஒய்யாரமாக வளர்ந்து  வானத்தை பார்த்து
விருட்சம் நின்றிருக்க...

இலைகளாய் உருவாக்கி சிட்டுக்கள் வீற்றிருக்க 
வித்தகம் தந்து செயற்கை விளக்கை கண்டு 
எகத்தாளம் செய்தது இயற்கை...

இனிமையான கானம் இசைத்து பட்சிகள்
தங்கள் இருப்பிடத்தை அணுக...

பாரெங்கும் பயணித்து கலைத்தது
மாலைப்பொழுததை தனதாக்கி.

மயக்கும் தனிமையை ரம்யமாக்கி சென்றது
இதுவல்லவோ வியக்கும் விந்தை உலகம்!

- உமா பாலகிருஷ்ணன்

Tamil Kavithai Competition

 

நட்பு அழகானவை - (கவிதை போட்டி)

friends kavithai tamil
நட்பு
என்று தெரியா அன்பு அது
அறியா வயது ... குட்டை பாவாடை
போட்ட நாட்கள் அவை ... அத்துனை
*அழகானவை*...

*வெள்ளியும் ஞாயிறும்*
தொலைக் காட்சி காணுகையில்
கையில் தொலைக்கா நேசம்
விரல் பிடித்திருக்கும் அவை ... அத்துனை *அன்பானவை* ...

பதினாறு தாண்டா பருவமது
பாவாடை தாவாணி வீதி உலாவில்
அரும்பு மீசை தொடரும் போது
அச்சம் கொண்டு கை பிடித்து
நடையில் வேகம் காட்டும் அவை... அத்துனை *பாதுகாப்பானவை*...

கல்லூரியில் விலங்காத விலங்கியல்
நானும் ... தடுமாறும் தாவரவியல்
நீயும் படித்து முடித்து சின்னதொரு
கையேட்டில் கையெழுத்து
வாங்கி விடைபெற முடியா ஆனாலும்
மணம் முடித்து விடைப்பெற்றோம்
*விடுமுறையில்லா இயந்திர வாழ்வில்*...

அழைப்பு வரதான் செய்கிறது காலங்கள் மாறினாலும் ...

இரு ஒரு நிமிசம் *இடைவேளையில்*
பேசுகிறேன் என நீயும் ...

அவருக்கு *சட்னி போடுகிறேன்*...
இரு கூப்பிடுகிறேன் என நானும் ...

*உதடுகள் நான்கும் உரைக்க* தான் செய்கிறது ... காலத்தின் வேகத்தில் ..

ஆயினும்
உள்ளம் நினைக்க தான்
செய்கிறது *நட்பினை* ...

*முப்பது அகவையினை* தொட்டது
அல்லவா அது ...
பசுமை மாறா நினைவினை
சுமந்த வண்ணம் நாளும் ...

- அம்மு தண்டபாணி

Tamil Kavithai Competition

சிறகில்லா பட்டாம்பூச்சி - (கவிதை போட்டி)


butterfly kavithai
 வெற்றிடம் எங்கும் பரவிக் கொண்டிருக்கும் காற்றிற்கு‌ கூட பிரிவினையை வகுத்த - இந்த பிரிவினைவாதிகளின் தேசத்தில் கருவிலேயே பிரிவினைக் காற்றினை சுவாசிக்கத் தொடங்கியது
இந்த உலகத்தை காணாத பிஞ்சு மழலை - பாவம்
தன்னிகரில்லா உலகில் தனக்கோர் அடையாளத்தை தேடிக் கொண்டே இருக்கிறது- இந்த "சிறகில்லா பட்டாம்பூச்சி".
 - ப.முருகன்

12/12/19

பட்டாம்பூச்சி கவிதைகள் - (கவிதை போட்டி)

butterfly kavithai in tamil
Pattampoochi kavithai in Tamil
பட்டாம்பூச்சி காதல் கவிதை


அடர்ந்த காட்டில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
மேனியில் குறுந்தகை மின்னிட
இளஞ்சூரியன்  ஆரஞ்சு வண்ண
மை தெளித்து தங்க பொட்டு வைத்த
பட்டாம்பூச்சி ஒன்று
என்னருகே வந்தது!

தொட்டுப்பார்க்க கரம் நீட்ட
வெட்கத்தில் நாணி சிவந்து கொண்டது!
உயர்திணை அஃறிணை கடந்து
பட்டாம்பூச்சி என்னிடம் ஏதோ பேச வர
புது உலகில் ஐக்கியமானோம்

சுதந்திரவாதி என்னை
அருங்காட்சியத்தில் சிறை
வைக்கிறார்கள் என்று
வருத்தப்பட்டுக்கொண்டது! ​
பொதுவாய் சொல்லி வைத்தேன்
சுதந்திர நாட்டின் அடிமைகள்
நாங்கள் என்று!

ஒப்புக்கொள்வதாய் இறக்கை அசைக்க
புன்னகையோ என நான் அதிசயிக்க
பெயரென்ன என கேட்டதற்கு
மெல்லமாய் காதருகே
செல்லமாய் "காதலி" என்றது!

பெயரா? அழைப்பா? என்றேன்...
இயற்கை காதலர்கள்
நீங்கள் மட்டும் தானா?
இயற்கை உங்களை
காதலிக்க கூடாதா?
என்றவாறே பறந்து சென்றது...

காதல் சிறையில்
நான் சிக்கிக் கொள்ள
என் “காதலி”
பட்டாம்பூச்சியோ சுதந்திரமாய்
வானில்!

#ஜெயராஜனோ
 

Tamil Kavithai Competition

Experience the delicate beauty of butterflies through enchanting Tamil kavithai and poems. Explore heartfelt butterfly kavithai in Tamil, a poetic celebration of nature's winged wonders. Let your imagination take flight with captivating butterfly poems in Tamil, each verse a tribute to the grace and charm of these enchanting creatures. Dive into the world of butterfly kavithai, where words flutter like butterflies, painting vivid images in your mind.

5/12/19

உன் நினைவாள் - (கவிதை போட்டி)

tamil feeling kavithai
Sad Tamil kadhal kavithai
நினைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்கிறேன்
என் அன்பே...
உன் நினைவுகள் என்னை கொள்கிறது
உன் நினைவுகள் என்னை துரத்துகிறது
நான் இங்கு இல்லை
நீ தான் என்னுள்ளில் இருக்கின்றாய்
ஆழ்கடலை போல என் உள்ளம்
அமைதியாய் இருக்கிறது
உன் நினைவாள்...

- பொற்கொடி

Tamil Kavithai Competition


2/12/19

காதலாய் - (கவிதை போட்டி)

love feeling kavithaigal
feeling kavithai image

காதல்

எழுதிய
எழுத்துக்களிலெல்லாம்
நீயே ஒளிந்திருக்கிறாய்
காதலாய்!

வாசம்

நீளும் மழையிரவில்
என் பிணி தீர்க்கும்
மாமருந்து
அவளின் வாசம்...

கூடு

ஓரே கிளியின் கூட்டுக்குள்
முகவரி எதற்கு என்றாய்
இருந்தாலும் என்றேன்
இன்று என் முகவரி தேடுகிறேன்.

புத்தன்

ஆசைகளை
மறைத்தும், ஒளித்தும்
வாழும் வேளையில்
நாமும் மாறிப்போகின்றோம்
வாழும் புத்தனாக.

S. அப்பாஜி

Tamil Kavithai Competition

28/11/19

ஒருபோதும் நீ அறிந்ததில்லை - (கவிதை போட்டி)


love failure kavithaigal imag
love failure kavithai

என் பொறுமையில் துளியும் உனக்கில்லை என்கிறாய்....

என் அருமையை ஒருபோதும் நீ அறிந்ததில்லை என்கிறாய்...

என் வலிகள் உனக்கு புரிந்ததில்லை என்கிறாய்....

நான் அறிந்ததும் புரிந்ததும் என்னுள் தோய்ந்து கிடக்கின்றன....

அதனால்தான் உன்னை எண்ணும் பொழுதெல்லாம்

நான் காதலில் அமிழ்ந்து போகின்றேன்....

- சரண்யா சின்னக்கண்ணு

25/11/19

இன்றோ அமாவாசை - (கவிதை போட்டி)

அருள்வாசன் கவிதை - கவிதை போட்டி!

கவிதை போட்டி

காற்றில் கரைந்தது கீதம்
காக்கைக்கு அவளிட்ட அண்ணம்
கா கா காவென்று கூவியே!
ஒலியின் திசையில் முழுநிலா
அடடே என்ன அதிசயம்
இன்றோ அமாவாசை!

 - அருள்வாசன்

Tamil Kavithai Competition

அன்புடன் மனைவி

Kanavan Manaivi Tamil Kavithaiஅன்பே, நீங்கள் என்னைப் பிடிக்கும்போது,
​​எனது உணர்ச்சிகள் அதை வரவேற்கிறது.

அன்புடன்!

உங்களது இதயத் துடிப்பை 

நான் இசை தாளத்துடன் கேட்கிறேன்.
வரிகளின்றி!

ஒவ்வொரு அணைப்பிலும், வெப்பத்தின் அன்பினாலும்  
என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது - உங்களது
அணைப்பு.

காதலனே, நீ மிகவும் மென்மையாகவும், 
வலிமை மிக்காக கைகளால் 
என்னைத் தொடும்போது,
நான் எங்கிருந்தாலும், உடனே 
உங்களுடைய அரவணைப்பில்
என்னை மூடிக்கொள்கின்றேன்.


நீங்கள் என்னை நெருக்கமாக 
பிடித்துக் கொண்டு
இரவு முழுவதும் என்னை ஆறுதல்படுத்துகிறீர்கள். 
அடடா...

பகல் வெளிச்சத்தின் முதல் அறிகுறி!
நீங்கள் என் கன்னங்களில் தரும் முதல் முத்தம்.

உங்களது நாளைத் தொடங்குவதற்கு முன்பு 
நீங்கள் என்னை கட்டியணைத்து 
முத்தமிடுவதிலில் தொடங்குகின்றன.

நீங்கள் எனது இதயத்தில் கொண்டு வரும் மகிழ்ச்சிக்கு, 

எந்த தமிழ் வார்த்தை பயன்படுத்தி நான் கூறுவது.

நீங்கள் என் வாழ்க்கையை மிகவும் அழகாகவும், 

அற்புதமாகவும், புதியதாகவும் மாற்றுகிறீர்கள். 
எப்படி ?

நீங்கள் என் நம்பிக்கை மற்றும் கனவுகள். 
சொல்ல போனால் எனக்கு அனைத்தும் நீங்கள் தான்
நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.


- அன்புடன் மனைவி

28/9/19

எது உண்மை

kavithai unmai

இதில் ஒரு பொய்யுண்டு!
ஒரு உண்மையுண்டு!
எது பொய்? எது உண்மை?
நிலவு உன்னை போன்று இருக்கு!
உன்னை போன்று நிலவு இருக்கு!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா


எது பொய் எது உண்மை கமெண்ட்ஸ் பண்ணவும் மறக்காமல் நன்றி!.. :)

15/3/19

கடத்தல் செய்கிறாள்!

new kavithai in tamil

எப்போதெல்லாம்
தனிமையில் என்னோடு நான்
உரையடிக்கொண்டுருக்கின்றனோ...
அப்போதெல்லாம் கண்டுக்கொண்டு
உன் நினைவுகளை எப்படி என்னுள்
கடத்துக்கிறாய்...?

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

6/3/19

சற்றே இளைப்பாற

இளைப்பாற
ஆயிரம் மரங்கள்
இருந்தாப் போதும்!..
இறங்காமல்  - நீளுமோ
நமது சிறகுகள்!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

19/2/19

பெண்ணுரிமை!

pennurimai kavithai in tamil

வீட்டுசுமை!!!

கனத்த சிறகுகளுடன்

பறவைகளுக்கு 

விடுதலையாம்!!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

 

31/1/19

இதய அறைகள்

rhyming kavithai in tamil

இப்போதெல்லாம்
இதயத்தின் ஓட்டம் அடிக்கடி
தடைபெறுகிறது...

நீ இல்லை
என்பதை உணர்த்தும் - உன்
நினைவுகள் அங்கொன்றும்,
இங்கொன்றும் சுற்றி
திரிகின்றது...

நீ வந்து சேர்ந்த - முதல்
அறை எது என்று
தெரியாமல்...

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

29/1/19

முத்த ஏற்புரை

valentine day kavithai

முத்தமிடதிலில் துவங்கி...
நமது பயணத்திட்டம் ஆரம்பம்!
பயணங்கள் உன்னில்
இருந்து தொடங்குகிறது!

நமது இதழால் நகர்ந்து செல்வதெல்லாம்...
நெடுஞ்சாலை பயணமகிபோகிறது...
நாம் செல்லும் பாதையில்!
முத்தங்களின் தடையங்கள் அழித்து விடாதே!

எனக்கு ஞாபகமறதி அதிகம்!
அதனால் பயண நடுவில் நான்
அடிக்கடி வழிமாறி செல்வதுண்டு...
ஆகையால் கவனம் கொள் - இல்லையே
முதலில் இருந்தே பயணிக்க விரும்புகிறேன்!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

23/1/19

முத்தங்கள்!

tamil kadhal kavithaigal

காதல்...!!!
கதகதப்பில் என்னை...
குளிரூட்டும் மருந்து!
உன் முத்தங்கள்...
மட்டுமே...!!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா

 

3/1/19

இது சாத்தியமா?

tamil love kavithai 2019

எனது விழிகளில்!

ஆயிரம் கவிதைகளை!...

புதைத்து செல்கிறாள்!

அவளது அரைநொடி

பார்வையில்!!!

- கவிஞர். தினேஷ் குமார் ஆ. பா