28/11/19

ஒருபோதும் நீ அறிந்ததில்லை - (கவிதை போட்டி)


love failure kavithaigal imag
love failure kavithai

என் பொறுமையில் துளியும் உனக்கில்லை என்கிறாய்....

என் அருமையை ஒருபோதும் நீ அறிந்ததில்லை என்கிறாய்...

என் வலிகள் உனக்கு புரிந்ததில்லை என்கிறாய்....

நான் அறிந்ததும் புரிந்ததும் என்னுள் தோய்ந்து கிடக்கின்றன....

அதனால்தான் உன்னை எண்ணும் பொழுதெல்லாம்

நான் காதலில் அமிழ்ந்து போகின்றேன்....

- சரண்யா சின்னக்கண்ணு

25/11/19

இன்றோ அமாவாசை - (கவிதை போட்டி)

அருள்வாசன் கவிதை - கவிதை போட்டி!

கவிதை போட்டி

காற்றில் கரைந்தது கீதம்
காக்கைக்கு அவளிட்ட அண்ணம்
கா கா காவென்று கூவியே!
ஒலியின் திசையில் முழுநிலா
அடடே என்ன அதிசயம்
இன்றோ அமாவாசை!

 - அருள்வாசன்

Tamil Kavithai Competition

அன்புடன் மனைவி

Kanavan Manaivi Tamil Kavithaiஅன்பே, நீங்கள் என்னைப் பிடிக்கும்போது,
​​எனது உணர்ச்சிகள் அதை வரவேற்கிறது.

அன்புடன்!

உங்களது இதயத் துடிப்பை 

நான் இசை தாளத்துடன் கேட்கிறேன்.
வரிகளின்றி!

ஒவ்வொரு அணைப்பிலும், வெப்பத்தின் அன்பினாலும்  
என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது - உங்களது
அணைப்பு.

காதலனே, நீ மிகவும் மென்மையாகவும், 
வலிமை மிக்காக கைகளால் 
என்னைத் தொடும்போது,
நான் எங்கிருந்தாலும், உடனே 
உங்களுடைய அரவணைப்பில்
என்னை மூடிக்கொள்கின்றேன்.


நீங்கள் என்னை நெருக்கமாக 
பிடித்துக் கொண்டு
இரவு முழுவதும் என்னை ஆறுதல்படுத்துகிறீர்கள். 
அடடா...

பகல் வெளிச்சத்தின் முதல் அறிகுறி!
நீங்கள் என் கன்னங்களில் தரும் முதல் முத்தம்.

உங்களது நாளைத் தொடங்குவதற்கு முன்பு 
நீங்கள் என்னை கட்டியணைத்து 
முத்தமிடுவதிலில் தொடங்குகின்றன.

நீங்கள் எனது இதயத்தில் கொண்டு வரும் மகிழ்ச்சிக்கு, 

எந்த தமிழ் வார்த்தை பயன்படுத்தி நான் கூறுவது.

நீங்கள் என் வாழ்க்கையை மிகவும் அழகாகவும், 

அற்புதமாகவும், புதியதாகவும் மாற்றுகிறீர்கள். 
எப்படி ?

நீங்கள் என் நம்பிக்கை மற்றும் கனவுகள். 
சொல்ல போனால் எனக்கு அனைத்தும் நீங்கள் தான்
நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.


- அன்புடன் மனைவி