16/1/20

திசைக்காட்டும் திருக்குறள் - (கவிதை போட்டி)

thiruvalluvar kavithai tamil

தமிழ்திருமகள் தந்த திசையெட்டும்
எம் திருகுறள் வெண்பாவில் ஈரடியாய்
குறளடி உடையது தமிழர் தந்த வரம்
மனிதனை செம்மைப்படுத்த
மனிதன் வகுத்துக்குடுத்த
வாழ்வியலை கற்றுக் கொடுக்கும்
உலகபொதுமறை பாரம்பரியம் போற்றும் நூல்
பண்பாளருக்கு பரிசாய் கிடைத்தது.
முப்பால் உணர்த்தும் முன்ணோர் பெருமை
திசை எட்டும் தித்திக்கும் புகழ்மனம்
வாழ்வியல் நெறிமுறை வளர்த்தெடுக்கும்
அறிவு ஊற்றாய் விசாலமான பார்வைக்கு வழிகாட்டும்
உத்ரவேதம்தனை வேதமாய் நினைத்து
படித்தால் இளயசமுதாயதயம் பயன்பெறும்
வாழ்வு செழிக்கும் வளம் கொழிக்கும்
பாகுபாடில்லா அனைவரும் சமம்
பொதுவுடைமை கருத்தை எடுத்துக் கூறுவது மிகச்சிறப்பு
இரண்டே அடிகளில் ஏழேச் சொற்களில்
உலகையே அளந்த ஒரு நூல்
எத்தனை அழகு
மனிதன் முதல் மாமன்னன் வரை
மலைத்துப் போகும் மிகச்சிறப்பு
அறிவியலும் உளவியலும் வியந்துப் போகும்
பொதுமறையாய்
திசைஎட்டும் தமிழ் மனம் வீசும் தமிழ் விளக்காய்
ஒளிவீசும் தமிழரின் வீரத்தையும் விவேகத்தையும்
எட்டுத்திக்கும் எடுத்துரைக்கும்
உலகமே போற்றும் பொதுமறையாய்
ஒளவைப் போற்றும் அறநூலாய்
செந்நாபோதரை போற்றி புகழவேண்டுமய்யா
முப்பால் உரைக்கும் அறம் பொருள் இன்பம் வீடு
நெறிமுறைக்கு சான்று எதையும் சுருங்கச் சொல்லி விளங்க
வாக்குவண்மைக்கு குறலடியே சான்று
உலகத்தத்துவத்தை எடுத்துக்கூறும் ஒப்பற்றநூல்
ஈரடிநூல் வெண்பாவின் குறட்பாக்களில் தனது வலிமையை உணர்த்தும்
தமிழ் இலக்கியக் கருத்துக்களை எடுத்தியம்பும் எழுத்தாணியாய்
தமிழர் நெஞ்சில் பதிந்த பசுமரத்தாணியாய்
எத்தனை அழகு  மின்னிடும் பொன்னாய்
உரக்க சொல் உலகிற்கு
- சரண்யா. ஆர்

Tamil Kavithai Competition

திருக்குறள் சிறப்பு கவிதை: Explore the timeless wisdom of Thirukkural through exquisite Tamil kavithai. Discover the profound verses of Thiruvalluvar in Tamil and Kavithai dedicated to Thirukkural. Delve into the world of poetic expressions inspired by the moral and ethical values of Thirukkural.

0 Please share your thoughts and suggestions!: