8/1/20

அம்மா - (கவிதை போட்டி)

mother tamil kavithaigal
உருவம் தோன்றும் முன் ஓர் அறிமுகம் உன்னுடன்....
உன்னுள் ஓர் உயிராய் உருண்டோடி,
உன் இதயத்துடிப்பின் மெல்லிசை கேட்டு சிறக்கடித்தேன் உன் கருவறையில் !!!
என் விழிகள் திறக்காமல் ,உன் கருவறையில் கைகோர்த என் முதல் தோழியே....
நான் இவ்வுலகம் தொட,
உண்ணுயிர் மறந்து என்னுயிர் காத்தாய் ....
முதன்முதலில் இவ்வுலகின் ஓசை கேட்டு அஞ்சினேன்...
என்னை உன் இதையத்தோடு கட்டி அணைத்தாய்,
அழுகை மறந்தேன் என்னவள் வாசம் கண்டு..
என்னவள் மடி தவழ்ந்து,
மழலையாக அவளை வலம் வந்தேன்..
என்னவள் கண்கள் சிவக்க,என்னை துயில் கொள்ள செய்த என் தேவதை...
பள்ளியில் அடி வைக்க, அவள் மடி இறங்கினேன் ...
பணியில் அமரும் பொழுது,அவள் கை பிரிந்தேன்...
இன்றும் என் மனம் அழைக்கிறது...
அம்மா, உன் மடி தா
தலைசாய்ந்து,
ஒரு துயில் கொள்ள வேண்டும்,
இதரணியை மறந்து!!!!

- ச. மதுமதி

Tamil Kavithai Competition


2 Please share your thoughts and suggestions!:

Sivamurgan சொன்னது…

மிகவும் அற்புதமான கவிதை....

SARANYARAJA சொன்னது…

nandru