27/1/20

மகளும் ஓர் தாய் (கவிதை போட்டி)

parents kavithai
ஞாயிறு தூங்கும் அழகிய தருணம்
முழு வார எதிர்நோக்களின் ஆசை இவ்வோர் நாளில்
அடைந்த களிப்பில் வந்த களைப்பில்
தங்கள் கூடு நோக்கி பறக்கும் மக்கள்
கடலன்னை தனக்கென்ற தென்றலை
அலைகளுடன் கறை தள்ளிக்கொண்டிருந்தாள்
அலை இசையினிடையே தன் மூச்சுக்காற்றை
இசையென மாற்றி பசி நீங்க துண்டேந்தினான்
பேதையைத் தோளிலேந்திய தந்தை
ஆழலை ஓசை மட்டும் போதுமென்ற
நோக்கில் அவனிசை கடந்தனர் மக்கள்
பசியின் நேரமுணர்ந்த தந்தையாய்
பேதை பசி நீக்க தன் சட்டை பையில்
கை விட்டவனிடம் சிக்கியதோ பத்து ரூபாய்
பத்தாத பத்தில் மகளின் பசியாற்ற
மெதுரொட்டியும் பாலுமே கிடைத்தது
இரண்டையும் மகளுக்கே அளித்து
தன் பசியாற நீரருந்தி அமர்ந்தான்
தன் வண்ணக் கைகளில் ரொட்டியை
அழகாய் பிய்த்தெடத்து பாலில் தோய்த்து
தன் தந்தையின் பசி நீங்க 
பிஞ்சுக்கரத்தால் ஊட்டினால் அன்னையென
அடம்பிடிக்கும் குழந்தையென தலையாட்ட 
அவனைச் செல்ல அதட்டலுடனே
வாயினில் தினித்துவிட்டாள் தாயாய்
தன் முன்னே அன்னையைக் கண்ட ஆனந்தத்தில்
கண்ணீர் மல்கி வாரியனைத்தான் தன் தாயை
மகளும் ஓர் தாய்.
- அன்னமுரளி

Related Posts:

  • அன்பு முத்தம் பழச்சாற உனது உதடுகள் ? பனித்துளி முத்தம் தருகிறாய் - அன்பே! உன்மேல் படர்ந்தவுடன். … Read More
  • அன்பால் என்னவள்! என்னவளுக்கு இதில் எது பிடிக்கும் என எனக்கு மட்டும் தான் தெரியும்...  அவள் கூட தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை... ஏன் என்றால் எனக்கு பிடித்தால்… Read More
  • பெண்களின் உதடுகள் சிவப்பு பெண்களின் உதடுகள் சிவக்க வேண்டும்! சயாங்களில் அல்ல ஆண்கள் தரும் சந்தோஷத்தில்... … Read More
  • இதயத்தின் ஏக்கம்! நீ இமை மூடி பார்த்து செல்லும்பொழுது... உதிர்ந்த சருகின் ஓசை எனது இதயத்தில்... பொறுமையாகவே நடத்து செல்... ஏன் இதயம் தாங்க... - Dinesh Kumar AP … Read More
  • இனிப்பான கண்ணிர் இந்த காதல் நான் தனிமையில் அழும்போது என் கண்ணிர் உப்பகின்றன... அதுவே!உன்னை நினைத்து உருக்கும் பொழுது!அந்த கண்ணீரும் இனிக்கின்றனஉன்னைப்போலவே!எனது உதட்டில் பட்டவ… Read More

0 Please share your thoughts and suggestions!: