29/2/24

எட்டிப்பார்க்கும் நிலவு

 மேகத்திற்கு மறைந்து எட்டிப்பார்க்கும் நிலவு

எட்டாக்கனியென அறிந்தும் - அதனை

தொட்டுப் பார்க்க எத்தனிக்கிறது உள்ளம்....

24/2/24

முகப்புத்தகத்தில்

 எப்போதும்போல் முகப்புத்தகத்தில் 

நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தேன்.

தள்ளத் தள்ள பதிவுகள் குவிந்து கொண்டே இருந்தன. 

 இருபாலர் கல்லூரியில் படித்த நண்பன் ஒருவன்

 கல்லூரிச் சுற்றுலா புகைப்படத்தை பதிவிட்டு இருந்தான்.

தள்ளிய விரல் உறைந்து நின்றது.

நினைவுகள் கல்லூரி காலத்திற்கு இழுத்துச் சென்றன. 

ஓர் இன்பச் சுற்றுலா நடந்திருக்கலாம் 

ஒரு குழு புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம்

வீட்டில் பிரேம் இட்டு மாட்டியிருக்கலாம்

அந்தக் கொடுப்பினையும் இல்லை.

இத்தனை வருடங்களாக ஒர் ஒளிப்படத்தை 

ஒளித்து வைத்து பார்க்க வேண்டியிருந்திருக்காது.


நாம் சந்திக்கும் பூங்கா

நீர்வாழ் தாவரங்கள் நிலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும்
 
நம் அன்பில் மிதந்து பூக்களோ! பூத்துத் தரும்
 
நாம் வேண்டும் வண்ணம் பூக்களை விஞ்சும்
 
திரவியதோடு நடை பழகிக்கொண்டிருக்கும் தென்றல்.

'பிறருக்கு அனுமதியில்லை' இவ்வாசக பலகையை

பூங்காவே மாட்டிக்கொண்டது ஒருவரின்றி ஒருவர் 

வருவோமெனில் முதற்சொன்ன மூன்று சேவைகள் மூடப்படும்.

நீ சுவைத்துத்தரும் காய்கள் எனக்கு கனியாகும் 

இச்சேவை மாத்திரம் எனக்கு இங்கும் வெளியும் கிட்டும்.

நீ என்னிடமிருந்து பறிக்கப்பட்ட பின், இப்பூங்கா 

என்னிடம் வெறுமையை காட்டியது இப்போதோ 

வெறுப்பை காட்டுகிறது தாவரங்களா? புதர் மண்டிற்று.

பூக்களா? அவை பூப்பதேயில்லை தென்றலா?

உஷ்ணமேட்றி தகிக்கின்றது பூங்காவா? 

அது என்னை வதைக்கும் கூடமாகிப்போயிற்று.

 

23/2/24

மறைந்த நினைவுகளுடன்

 மறைந்த நினைவுகளுடன்

மறந்து சென்ற உன்னை

மரத்துப்போன நெஞ்சம்

மருந்தென எண்ணும்

அன்பின் முடிவு

அன்பின் வெளிபபாடே காதல்

காதலின் வெளிபாடே அன்பு

அன்பின் வெளிபாடே‌ மோதல்

மோதலின் வெளிபாடே காயம்

காயத்தின் வெளிபாடே கண்ணீர்

கண்ணீரின் வெளிபபாடே ஞாயம்

ஞாயத்தின் வெளிபாடே குரல்

குரலின் வெளிபாடே ஏக்கம்

ஏக்கத்தின் வெளிபாடே கோபம்

கோபத்தின் வெளிபாடே உண்மை

உண்மையின் வெளிபாடே நீதி

நீதியின் வெளிபாடே வெற்றி

வெற்றியின் வெளிபாடே தலைகனம்

தலைகனத்தின் வெளிபாடே ஆதிக்கம்

ஆதிக்கத்தின் வெளிபாடே அழிவு

அழிவின் வெளிபாடே முடிவு. 

20/2/24

கொரோனா

 வாழ்கையின் சீற்றத்தை கண்டோமடா !!!

கொரோனாவின் அச்சத்தில் வாழ்ந்தோமடா !!!

முககவசத்தை அணிந்து நடமாடினோம் !!!

கைக்கழுவி சுத்தத்தை நிலைநாட்டினோம் !!!

சமூக விலகல் ஒன்றை பின்பற்றுவோம் !!!

தடுப்பூசி போட்டு பாதுகாப்பாகிடுவோம் !!!

கடந்து போகும் என நம்பிடுவோம் !!!

மன உறுதியால் வென்றிடுவாம் !!!


18/2/24

இது தான் வாழ்க்கை

 'சாவி' இல்லாத 'பூட்டை'

மனிதன் உருவாக்குவதில்லை

'தீர்வு' இல்லாத 'பிரச்சனைகளை' 

கடவுளும் தருவதில்லை!

இது தான் வாழ்க்கை, 

இதை புரிந்துக்கொண்டால் 

வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம்..


மூத்தவனாய் பிறந்தவன்

 முத்தமிட்டு மகிழ்ந்திடவே மூத்தவனாய் பிறந்தேனோ????

காலம் கடந்து போன பின்னும் கர்ணன் போல காப்பேனோ????

உன் முன்னேற்றம் கண்ட பின்பே மூச்சயர்ந்து போவேனோ????

உன் இன்னல் எல்லாம் தேர்ந்த‌ பின்பே இறைவனடி சேரவேனோ?????


உன் மீது கொண்ட காதல்

 உன் மீது கொண்ட காதல் கண்ணில் இருந்தால்

கண்ணீராய் துடைத்து இருப்பேன்

இதயத்தில் இருப்பதால் உயிர் விடுகிறேன்
       

உன்னை பார்த்த முதல் நாள்

 உன்னை பார்த்த முதல் நாள் என் மனதில் மாற்றம் ஒன்று கண்டேன்.

தினமும் ஆயிரம் கனவுகளுடன் என் நாட்கள் அழகாய் நகர,

நீ என் அருகில் இருந்தால் இந்த மாற்றமும் ஏற்றம் ஆகும்.

எப்போது திருமணம் எனும் மேடையில் என்னை அறங்கேற்றுவாய்

இன்று வரை உன் வரவை எண்ணி நிதமும் காத்திருக்கிறேன்.

அல்லிராணி

 ஆதவன் மறையும் முன்பு

ஆடையை அணிந்து கொண்டு

ஆசை ஆசையாக அல்லிராணியை

ஆறுத்திங்கள் கழித்து காணச் சென்றேன் - அங்கு

அல்லிராணி சிங்காரமாக சிகை

அலங்காரம் செய்து கொண்டிருப்பதாக செய்தியைக் கேட்டு

அரைமணி நேரம் அமர்ந்திருந்தேன்

அல்லிராணி ஆடி அசைந்து வரும் வேளையில்-என்

அப்பா மகனே! 'ஆ' விற்கு சேவகம் செய்- என்று

ஆணைபிறப்பிக்கவே அழுதபடியே வீட்டிற்கு வந்துவிட்டேன்.


17/2/24

நிலை தடுமாறி நிற்கிறேன்

 அன்பினை அமுதாக்கி  தந்தவளே

உயிரையும் மெய்(உடல்)யினையும் தந்த

 உனக்கு உயிர் எழுத்திலும் சரி 

மெய் எழுத்திலும் சரி வர்ணிக்க 

வார்த்தை கிடைக்காததால் நிலை தடுமாறி

 நிற்கிறேன் இந்த வரிகளை முடிக்காமல்.

என்னிலும் நீ எண்ணிலும் நீ

ஒரு தொலைபேசி எண்ணை டயல் செய்து அழைக்க வேண்டியிருந்தது.

முதல் மூன்று எண்களை பார்த்தே டயல் செய்தேன்.

நான்காம் ஐந்தாம் ஆறாம் எண்களை விரல் தானாக டயல் செய்தது,

மூன்று எண்ணிற்கு மேல் நான் பார்க்கவே இல்லையே!

உணர்வு கொண்டு கவனித்தேன். என் விரல் டயல் செய்து கொண்டிருந்தது 

அவள் எண. தூக்கிவாரிப்போட்டது. இருநான்கு(8) ஆண்டுகளாய்

இவ்வெண்ணை நான் டயல் செய்ததே இல்லை

இன்னமும் என் விரல் நுனிகளில் என்ன செய்துகொண்டிருக்கிறாய்.
 

எனக்கு ரோஜாக்கள் பிடிக்கும்

 எனக்கு ரோஜாக்கள் பிடிக்கும் சிலமுறை

செடிகள் வாங்கி சிரத்தையோடு பராமரித்திருக்கிறேன்
 
ஓரிருமுறை பூக்கும் பின் காய்ந்து போகும்
 
இருந்தும் எனக்கு எந்த ரோஜாவிடமும் கோபமில்லை.

16/2/24

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயத்தைப் போற்றுவோம்...!
 
உலக படைப்பில் உன்னத படைப்பே இயற்கை விவசாயம்.....!
 
ஏர்கலப்பையை பிடித்து நிலத்தை சமப்படுத்தி....!
 
முத்து முத்தாய் விதையை விதைத்து....!
 
பச்சை பச்சையாய் நெற்கதிர் முளைத்து...!
 
உலகின் பஞ்சத்தை போக்கும்....!
 
விவசாயத்தை நோசிப்போம்....!
 
உழவனின் உடலில் முத்து முத்தாய்.....!
 
வியர்வை சொட்ட சொட்ட....!

கட்டு கட்டாய் நெற்கதிரை.....! 

அறுவடை செய்வோம்....! 

ஆடி பட்டம் தேடி வர ஆசை ஆசையாய்....! 

கரும்பை  போட்டு கட்டு கட்டாய் கட்டி குவிப்போம்....!

அனைத்து வகை காய்யையும் இயற்கையில் .....! 

விளைவித்து ஊர் ஊராய் சென்று....! 

இயற்கை காய்யென கூவி  கூவி விற்பனை செய்வோம்.....! 

மழை மும்மாாி பொழிய....! 

மக்கள் பஞ்சம் தீரா.....! 

மண்ணின் மணம் மற.....! 

புதிது புதிதாய் விவசாயத்தை செய்வோம்.....! 

மழை தரும் இயற்கையை போற்றுவோம்.....! 

மண் வளம் தரும் மண்புழுவை பாதுகாப்போம்.....! 



என் இதயம் நீதான்

 என் கண்னிரை துடைபதர்கு யாரும்  இல்லை

என் கவலைக்கு ஓய்வு இல்லை

என் காதல் அவலுக்கு புரியவில்லை

அதை மறக்க என்னாள் முடியவில்லை

அவள் இல்லாத உலகம் எனக்கு தேவையில்லை

என் இதையம் அவளால் காண வில்லை

அதை தேடி பார்க்க எனக்குவிருப்பம் இல்லை

என் என்றால் என் இதயம் நீதான் என்று மறகவில்லை


15/2/24

அம்மாவின் மடியில்

 உன் பஞ்சு மெத்தை கால்கள் 

தரையில் படுகையில் தரை

சிலிர்த்து போகிறது! அழகான 

கருவாக நீ என் வயிற்றில் 

உருவான போத என்னை 

ஆனந்த்தில் ஆழ்த்தி விட்டாய்! 

நான் கொடுத்த முச்சுக்காற்றை நீ

விடுகையில் என் மனம் பரவச மடைகிறது!

முளைத்தெழும் விதைப் போல நீ 

வளர்ந்து வா அம்மாவின் மடியில் தூங்க!........


விரல் கோர்க்கும் நேரம்

 உன்னை நேசிக்க ஆரம்பித்த நிமிடத்தை விட
 
நேசிக்கும் நிமிடமே இதமானது!

என் கண்ணீரை நீ துடைக்கும் நேரமும் 

உன் விரலை என் விரலோடு கோர்க்கும் நேரம் எப்போது.

உன்னையை பார்க்கும் போது

 உன்னையை பார்க்கும் போது நெல்மனி போல 

          மனதில் ஆசைகொட்டி வழிகிறது! 

நீ என்னை பார்க்காத தருணம் இதயம் 

           மரணத்தின் வாயிலை எட்டி விடுகிறது! 


12/2/24

என்றென்றும் நீயெனக்கு நண்பனே

நண்பன் என்ற ஒரு சொல்லே
உலக மக்களின் ஆதரவு-கீழே 
விழும் முன்னே தாங்கி பிடித்திடித்திடும் 
கரம் கொண்டான் நண்பனே

கோடையிலே நீராய் குளிர்ச்சியில் தீயாய்
தீபமாய் இருப்பான் நண்பன்-காலமது
புறந்தள்ளும் உலகமது உடைத்தெறியும் ஆதரவு 
கரமாய் அன்பு நண்பனே

பட்டியலில் சேர்க்கவில்லை இருந்தாலும் தெய்வமவன்
தோல்வியில் தன்னம்பிக்கை கொடுப்பான்-வெற்றியில்
மனநிறைவு அடைவான் இணைபிரியா சந்தோஷம்
உறவறியா அப்பாசம் நண்பனே

பூமியதுதூக்கி எறிந்தாலும் உன் மடியில்
விழவேத்தான் ஆசை கொள்வேன்-கர்ணன் 
வழி நடப்பேன் உனக்கென உயிர்கொடுப்பேன்
என்றென்றும் நீயெனக்கு நண்பனே 

ஆலமரம் போல விரிந்து வாழ

ஆலமரம் போல விரிந்து வாழ...
 
துன்பத்தை துடைத்து எழு

கஷ்டத்தை கரைத்து எழு

கவலையை  கலைத்து நில்

வாழ்க்கை என்ற விதைக்கு 

தன்னம்பிக்கை என்ற நீரை ஊற்றி 

ஆலமரமாய் விரிந்து வாழ்வோம்!...

8/2/24

என்னை கவர்ந்தாய் நீ

 உன் ஆன்மாவினுள் என் ஆன்மா சென்று 

உன்னை புரிந்துக் கொள்ள வேண்டுமென  

என் மனம் துடிக்கிறது ஆனால் நீயோ 

என் உயிரினுள் ஊடுருவி என்னை கவர்ந்தாய் நீ....


உன் பாதம் ஏந்தி இருப்பேன்

 மறந்து போன உன் காதல் ஏனோ
 
என் இதயத்திற்கு ஓர் சுமைதான்

உருகும் மெழுகாய் உன்னிடம்,

 என் காதல் கனவுகளும் உறைவது ஏனோ

நம் காதல்  பாதைகள் அழிந்தாலும் 

என்னென்றும் உன் பாதம் ஏந்தி இருப்பேன்.

7/2/24

எப்போது சொல்வேன் என் காதலை

 அவள் முன் செல்ல

நான்  அவள் பின் செல்ல

காலங்கள் எங்களை கடத்தி செல்ல

கடந்த காலத்தை நினைத்து

என் மனம் செல்ல

அவளை கண்டு எப்போது

சொல்வேன் என் காதலை!

நம் நாட்டினை செழிக்க வைப்போம்

சிறப்புக்குரிய  நம் தமிழ்
   இன்று சிக்கிக்கிடப்பது ஏனடா?

வெற்றிக்குரிய நம் வீரம்
   இன்று மண்டிகிடப்பது ஏனடா?

சோலை நிறைந்த நம்நாட்டிலே
   இன்று சுரங்கம் தோண்டுவது ஏனடா?

பசுமை செழித்த நம் நாட்டிலே
  இன்று பறவை பறப்பது அறிதடா?

பயிர்கள் விளையும் நம் மண்ணிலே
  இன்று பாவம் விளைவது ஏனடா?

பிச்சை போடும் வேளையிலும்
  அச்சம் எட்டிபார்க்குது ஏனடா?

காண கிடைக்காத இந்த நாட்டினை
  கடவுள் நமக்கு கொடுத்தது ஏனடா?

களை பிடுங்கி நம் நாட்டினை
  சுத்தம் செய்வோம் வாங்கடா!

நாம் தமிழனாக பிறந்தது ஏனடா?
நம் நாட்டினை செழிக்க வைப்போம் வாங்கடா!!! 

6/2/24

எனது பள்ளி

 தேன் கொஞ்சும் கவி அரங்கில் விளையாட வந்தவளே!!

நாற்றிசையை பார்க்கையிலே நாளெல்லாம் இனிக்குதடி!‍‍!‌

'புல்லெல்லாம் வண்டூர பூவெல்லாம் தேனூர நடைபோட்டு வந்தவளே'

சுற்றி சுற்றி நான் பார்க்க நீல வானம் சிலிர்குதடி!!

உள் வைத்த முதற்படியோ மூச்சு விடா துடிக்குதடி!

முதற்வகுப்பில் நான் கேட்டேன் முணுமுணுத்த கீதமடி!

இடைவேளை கிடைத்த உடன் இடையில்லா ஓடினேன்...

"தென்றல் காற்று எனை வந்து கொஞ்ச சொல்லி அழைக்குதடி"

பூங்கா உள் சென்றாளே பூவாசம் மயக்குதடி,

மரத்தடி நிழலைத் தான் மனம் சொல்லி ஏங்குதடி....

மைதானம் உள்சென்றாலே சிறுகல் கூட இல்லையடி!!

சுற்றி வந்து நீ பாரு பூவெல்லாம் மலர்ந்திருக்கும்.....

படி ஏறி வந்தாலே, முதற்வகுப்பு தெரியுமடி உள் வந்து நீ பாரு

உன் மனது தொலையுமடி, கரும்பலகை அழகை கூட வர்ணிக்க முடியுமடி....

"கழிப்பறையின் சுத்தமே எம்பள்ளி சிறப்படி"

காற்றில் ஆடும் மரங்கண்டு எம்மனது குளிருதடி,

மரம் சூழ்ந்த எம்பள்ளி 'நீலகிரி'யின் வரமடி!!

என்னென்ன நான் சொல்ல எம்பள்ளி அருமையை,

நாளெல்லாம் நான் சொல்வேன் எம்பள்ளி பெருமையை!!

எங்கே போனது நீதியும் நேர்மையும்

 பத்திரிக்கையாளன் காலடியில் விவசாயின் உடல்..

ஓங்கி ஓங்கி கழுத்தில் குதிக்கிறான்..

குண்டடி பட்டு பிணமான பின்னாலும்..

ஏன் இந்த கொலைவெறி தனம்..

பேனாவின் மையாக ரத்தத்தை நிரப்புவதற்கா..

அல்லது கருப்பாக்க வெகுமதியை பெறுவதற்கா..

நம் நாட்டில் கொலை செய்தால்..

உயரிய பதவியும் ஆட்சியும் கிடைக்குமல்லவா...

பாவம் அவனுக்கும் ஆசை  வந்துவிட்டதுபோல...

அல்லது பெரிய தொலைக்காட்சிகளில் நெறியாளனாகனும் போல..

எங்கே போனது நீதியும் நேர்மையும்..

காக்க வேண்டியவர்கள் குண்டுகளை துளைக்கிறார்கள்..

கடமை செய்ய வேண்டியவர்கள் கையாளாகிறார்கள்..

நம் நாடு ஜனநாயகநாடு நம்புங்கள்...

விவசாயம் எங்கள் நாட்டின் அடையாளம்..

விவசாயிகள் எங்களின் உயிரை போன்றவர்கள்..

தேர்தல் சமயத்தில் விற்கப்பட்ட வார்த்தைகள்..

அரசியல்வாதிகள் அனைத்தையும் விற்றே பழகிவிட்டார்கள்..

நாம் வெற்றுப்பேச்சை கேட்டே பழகிவிட்டோம்.. 

எதை விற்றாலும் சுட்டாலும் புதைத்தாலும்...

நாம் ஊமையாகவே  செவிடாகவே வாழவோம்..

வாழ்க ஜனநாயகம் வாழ்க ஜனநாயகம்..

என்ற மந்திரத்தை மனதுக்குள் துதித்துக்கொண்டே...


வாழ்க்கை ஒரு வேட்கை

 வாழ்கையடா? இது! நம் வாழ்கையடா? இது!

வேட்கை கொண்ணதடா! மன வேட்கை கொண்டதடா!

வாகைசூடும் மலர்மாலை வீழ்த்த விடையில்லை

மலர் கனமில்லை ஐயோ! தோற்றியவன்

வீழ்தியனை தோற்றுவிட்டான் மதி கெட்டுவிட்டான்

சாதனைக்கு தோய்வில்லை பணபோதனைக்கு ஒய்வில்லை

மனம் சீரில்லை மஞ்சள் விடியல் எம்மை விரைந்திடுமோ?

இல்லை இருள் நின்றிடுமோ? நாடியதாம் உலகம் 

வாடியதாம் வாழ்க்கை-என்ற கதையானது வேட்கை

5/2/24

வானம் தேடி வந்த நிலவே

 வானம் தேடி வந்த நிலவே இரவில் மட்டும் ஏன் வருகிறாய்?

பூக்கள் தேடி வந்த காற்றே பூக்களை பறித்து ஏன் செல்கிறாய்?

காதல் வலி

 எனக்கு தெரியும் உன் காதலை ஏற்க மறுத்ததால் 

கொடுத்திருப்பேன் இரண்டு நாள் வலி!... 

ஆனால் காதலை ஏற்றுக் கொண்டிருந்தால்

 கொடுத்திருப்பேன் மரண வலி!

உனக்கல்ல! என் பெற்றோர்களுக்கு!

4/2/24

என்னை மறந்தேன்

 
இறைவனின் மந்திரம் நீயே! உயிர்களின் உருவம் நீயே!
 
உள்ளத்தின் உணர்வும் நீயே! பசியும் நீயே அதன் உணவும் நீயே!
 
பூமியும் நீயே அதன் பொறுமையும் நீயே! வீழும் அருவியும் நீயே! 

பாயும் நதியும் நீயே! காற்றின் காவியம் நீயே! 

உலகிற்கு அணியைச் சேர்த்ததுஉம் நீயே! அணியை காக்கும் ஆகாயமும் நீயே!

அண்டசராசரம் இயக்கும் கையே! இயற்கையே! 

உன்னத பண்புகளால் வியந்தேன்! என்னை மறந்தேன்! மயங்கினேன்!


உன் உயிரே என் மூச்சு

நான் பிறந்ததும் என்னை தூக்கிய முதல் கை

நான் வளர்ந்ததும் நான் சாய்ந்த முதல் தோல் 

நான் அழுகும் போது என் கண்ணீரை துடைத்த முதல் ஜீவன்

நான் சிரிக்கும் போது அதை ரசித்த முதல் உள்ளம்

நான் வணங்கும்  தெய்வம் நான் சிரித்தாலும் அழுதாலும்

எனக்காக துடிக்கும் ஒரே மணம் இந்த உலகில் 

நான் மதிக்கும் ஒரே உயிர் நான் வளரும் பொது 

அதை பார்த்து சிரிக்கும் ஒரே நல்ல உள்ளம் இவ்வனைத்து

 வார்த்தைகளுக்கும் ஒரே  அர்த்தம் " அம்மா" 

உன் உயிரே என் மூச்சு நான் சிரிப்பதும்
 
உன்னாலே நான் அழுவதும் உன் முன்னே

விரும்பியவரின் கைகோர்க்கும் நாளுக்காக

 காதல் நம்மையும் நம்மீது காதல் கொண்டவர்களையும் அழகாக்கும்!

சிலநேரம் பைத்தியமாக்கும்! சிலநேரம் கெஞ்ச செய்யும்!

சிலநேரம்  கொஞ்ச செய்யும்! பொய்களை ரசிக்கும்!

மீண்டும் மீண்டும் பார்க்க துடிக்கும்!

விலகி செல்ல நினைக்கும்! விரும்பியவருக்காக 

தன் விருப்பத்தைக் கூட விட்டு கொடுக்க செய்யும்!

சண்டை கொள்ள செய்யும்! துணிச்சலைப் பற்றிக் கொள்ளும்!

இடையில் வேறு ஒருவர் வந்தால் பொறாமை உள் நுழையும்!

தினம் தினம் கண்ணாடி பார்க்கச் செய்யும்!

எங்கிருந்தாலும் நினைவுகளால் ஒன்றாகும்!

மௌனத்தின் மொழி சொல்லும்! இருவீட்டாரும் ஏற்று 

விரும்பியவரின் கைகோர்க்கும் நாளுக்காக காத்திருக்கும்....

விடுதலை என்பது அடிமைதான்

 விடுதலை என்பது யாதெனக் கேட்டேன்

உரிமையின் உணர்வுகள்  என்றான் போராளி

உரிமை என்பது யாதெனக் கேட்டேன்

உனக்கானதை நீ தேர்ந்தெடுப்பதே என்றார்கள்

சிந்தித்தேன் எனக்கானதை நான் தேர்ந்தெடுப்பதா?

எனக்கான உணவையே தேர்ந்தெடுக்க முடியவில்லை

உழைத்த பணத்தையே பாதுகாக்க முடியவில்லை

கலாச்சாரத்தின் கண்ணியத்தை உயர்த்த முடியவில்லை

தமிழனின் அடையாளத்தை அடைய முடியவில்லை

சகோதரத்துவத்தில் சுயநலத்தை அழிக்க முடியவில்லை

கன்னிகளின் கற்பை காக்க முடியவில்லை

திருமணத்தில் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை

மனிதத்தின் மாண்பை உணர்த்த முடியவில்லை

இந்தியாவின் இறையாண்மையை நுகர முடியவில்லை

மதங்களின் சாயத்தை போக்க முடியவில்லை

இளமையிலும் இன்பத்தை அடைய முடியவில்லை

இயற்கையின் அழிவை தடுக்க முடியவில்லை

முடியவில்லை என்பதற்கே முற்றுப்புள்ளி இல்லை

எப்படி விடுதலை உரிமையாய் இருக்கும்

எனவே விடுதலை என்பது அடிமைதான்

சாக்கடை சமூகம் தான் இது

 உயிர் நீருக்கு உதிரம் தடவி

உருவம் கொடுத்து உணவூட்டி 

உஷ்ணமளித்து உபாதை பொருத்து

உலகிற்கு காட்டும் உனை சில நேரங்களில் 

தீட்டு என சாடும் சாக்கடை சமூகம் தான் இது