4/2/24

என்னை மறந்தேன்

 
இறைவனின் மந்திரம் நீயே! உயிர்களின் உருவம் நீயே!
 
உள்ளத்தின் உணர்வும் நீயே! பசியும் நீயே அதன் உணவும் நீயே!
 
பூமியும் நீயே அதன் பொறுமையும் நீயே! வீழும் அருவியும் நீயே! 

பாயும் நதியும் நீயே! காற்றின் காவியம் நீயே! 

உலகிற்கு அணியைச் சேர்த்ததுஉம் நீயே! அணியை காக்கும் ஆகாயமும் நீயே!

அண்டசராசரம் இயக்கும் கையே! இயற்கையே! 

உன்னத பண்புகளால் வியந்தேன்! என்னை மறந்தேன்! மயங்கினேன்!


0 Please share your thoughts and suggestions!: