7/2/24

நம் நாட்டினை செழிக்க வைப்போம்

சிறப்புக்குரிய  நம் தமிழ்
   இன்று சிக்கிக்கிடப்பது ஏனடா?

வெற்றிக்குரிய நம் வீரம்
   இன்று மண்டிகிடப்பது ஏனடா?

சோலை நிறைந்த நம்நாட்டிலே
   இன்று சுரங்கம் தோண்டுவது ஏனடா?

பசுமை செழித்த நம் நாட்டிலே
  இன்று பறவை பறப்பது அறிதடா?

பயிர்கள் விளையும் நம் மண்ணிலே
  இன்று பாவம் விளைவது ஏனடா?

பிச்சை போடும் வேளையிலும்
  அச்சம் எட்டிபார்க்குது ஏனடா?

காண கிடைக்காத இந்த நாட்டினை
  கடவுள் நமக்கு கொடுத்தது ஏனடா?

களை பிடுங்கி நம் நாட்டினை
  சுத்தம் செய்வோம் வாங்கடா!

நாம் தமிழனாக பிறந்தது ஏனடா?
நம் நாட்டினை செழிக்க வைப்போம் வாங்கடா!!! 

0 Please share your thoughts and suggestions!: