18/2/24

அல்லிராணி

 ஆதவன் மறையும் முன்பு

ஆடையை அணிந்து கொண்டு

ஆசை ஆசையாக அல்லிராணியை

ஆறுத்திங்கள் கழித்து காணச் சென்றேன் - அங்கு

அல்லிராணி சிங்காரமாக சிகை

அலங்காரம் செய்து கொண்டிருப்பதாக செய்தியைக் கேட்டு

அரைமணி நேரம் அமர்ந்திருந்தேன்

அல்லிராணி ஆடி அசைந்து வரும் வேளையில்-என்

அப்பா மகனே! 'ஆ' விற்கு சேவகம் செய்- என்று

ஆணைபிறப்பிக்கவே அழுதபடியே வீட்டிற்கு வந்துவிட்டேன்.


0 Please share your thoughts and suggestions!: