புயல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புயல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12/2/25

நீரின் ஆழம்

 நீர் மூழ்கி கப்பலுக்கு தெரியும்

               நீர் ஆழமென்று  ஆனால்

போதை நீரிலேயே மூழ்கிக் கிடக்கும்

     ‌ ‌ஆண்களுக்குத் தெரியாது

நீரின் ஆழம் வாழ்க்கையின் ஈரத்தை

        அழித்து  விடும்  என்று

20/1/25

உன்னை நினைத்து

மௌனம் பேசும் மனமே

மனம் திறந்து பேசு என்னிடமே

உன் பதிலை எண்ணி தினமே

உயிர் போகிறது ஒவ்வொரு கணமே

பகலில் நிலவு வந்ததே

பாதியில் மறைந்து போனதே

உள்ளம்தான் தினம் ஏங்குதே

உன்னை நினைத்து உயிர் மூச்சு வாங்குதே

 

22/10/24

மனிதனின் உணர்ச்சி

 ஓசையில்லா ஒரு பாடலின் ரசம்...

அலையில்லா ஒரு கடலின் இரைச்சல்...

சப்தமில்லா ஒரு குழந்தையின் அழுகுரல்...

தேனில்லா ஒரு பூவின் மணம்...

பனியில்லா ஒரு இரவின் குளிர்...

சொல்லில்லா ஒரு மொழியின் பொருள்...

வில்லில்லா ஒரு அம்பின் குறிக்கோள்...

சுவையில்லா ஒரு உணவின் தரம்...

துன்பம் துரத்தாது, துரோகம் தீண்டாது,

பகை பல்லிளிக்காது வாழும் 

ஓர் மனிதனின் உணர்ச்சிகளிவை...!!!

14/10/24

கடவுளின் மருவுருவமே

 கடவுளின் மருவுருவமே! 

உன் அன்பின் வார்தைக்கு அகிலமே மயங்கும் ,

உன் வரம் நானில்லை என் வரம் நீ மட்டுமே,

 நான் அழும் போது.கண்ணீரை துடைக்கும் தோழியே!

நான் சுவாசிக்கும்  காற்றே அவள் தான் அம்மா.....

13/10/24

ஆசிரியை

 அம்மா சொல்வாள் நேர்த்தியாக உடை அணி என்று;

அப்பா சொல்வார் தொலைக்காட்சி பார்க்காதே என்று;

பாட்டி சொல்வாள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள் என்று;

தாத்தா சொல்வார் கைப்பேசி வேண்டாமே என்று;

சகோதரன் சொல்வான் புத்தகம் எடுத்துப் படி என்று;

ஆனால், அனைவரிடமும் நான் சொல்வேன்....

உங்களின் எல்லா முகமுமாக இருக்கும்

என் ஆசிரியை சொன்னால் மட்டுமே செய்வேன் என்று......

வாழ்க ஆசிரிய பெருமக்கள்! நன்றி

24/8/24

தன்னம்பிக்கை

 உனையொரு சிறுதுறும்பென நினைதிடும் - அவர்

முன்னிலே விண்மின்னையும் கரத்திலே பிடித்திடு 

நாடாண்டு சென்றரசனுக்கு ஆயிரம் கையில்லையே..

அதை எடுத்துன்னறிவிலே இட்டு உணர்ந்தெழுந்திடு..


குருவின் அருமை

 கருவாய் எனை உருவாக்கிய குருவே உம் அருமை,

தெரியாமலே தறிகெட்டேன் சரியாக்கிடும்  நீரே...!!!

தறியாகினும் சரியாகிட உம்மிடமே மீண்டு வருவேன்...

முடியாதெனும் தடிவார்த்தையால் அடி கொடுத்து விட வேண்டா...!!!

காலடி ஆயினும் அடியேன் அதில் கிடையாய் கிடை கிடப்பேன்...

முடியாதெனும் தடிவார்த்தையால் அடி கொடுத்து விட வேண்டா...!!!

இறையும் இறைமறையும் பலத்துறையும் கற்றுக் கொடுத்தீர்...

என் குறையும் பல கறையும் அது மறையும் வரை வெளுத்தீர்...!!!

கருவாய் எனை உருவாக்கிய குருவே உம் அருமை...,

தெரியாமலே தறிகெட்டேன் சரியாக்கிடும்  நீரே...!!! - எனை சரியாக்கிடும்  நீரே...!!!

22/8/24

பாரதியின் படைப்புகள்

 அழகிய நீர்த்தடாகம். பரந்து விரிந்து வானம். பச்சை நிற புல்வெளி.

பூத்துக் குலுங்கும் மலர்கள். மயில்களின் நடனம். பறவைகளின் கீச்சல்கள்.

கிளிகளின் பாஷைகள். தேன் குடிக்கும் வண்டின் முயல்கள்.

மரங்கள் ஒன்றொடொன்று உரசும் ஊடல்கள்.

இவ்வளவு இருந்தும் எனக்கு பசி இருந்தது.

தின்றால் போதும் என்று கூறும் அளவுக்கு 

வயிற்றுப் பசி இல்லை. செவிப்பசி ஆம்.

இத்தகைய சூழலில் மனம் மறந்து செல்லக்கூடிய நிலையில் கூட,

என் செவிகளில் எதோ ஒன்று குறைபாடாகவே இருந்தது.

ஆம் அதுதான் புண்பட்ட மனத்திற்கு

மாபெரும் ஊன்றுகோலாய் இருந்த பாரதியின் படைப்பு.

கடலில் மூழ்கிய உயிர் துறக்க எண்ணியவனுக்கு கை நிறைய

 முத்துக்களை பரிசாக கொடுத்தாள் கடல் அன்னை.

ஆம் எனக்கும் அப்படித்தான் இருந்தது பாரதியின் படைப்புகளை வாசிக்கும்
 போது.

14/7/24

பெண்மையின் ‌பேரழகு

 அவள் பெண்மையின் ‌பேரழகு

என்னைப் பெற்றெடுத்த ஓர் அழகு

பதுசாய்  என்னை வளர்த்திட,

அவள் நெய்தால் ஒரு பஞ்சு மெத்தை

ஆனால் அவள் உறங்கியதோ ஒரு ஓலைப்பாய் ,

ஈரத்துணி இறுக கட்டி அவள் வயிறு பசியாறி,

ஈச்சம் பழம் இலந்தைப்பழம் என்றெல்லாம் எனக்கு அளித்தாள்,

ராணி என அவளை வைக்க ஆசைப்பட்ட ஏழை குழந்தை,

அவள் போன வழியெல்லாம் மலர் தூவி ஏங்கி நின்றேன்.......


15/2/24

அம்மாவின் மடியில்

 உன் பஞ்சு மெத்தை கால்கள் 

தரையில் படுகையில் தரை

சிலிர்த்து போகிறது! அழகான 

கருவாக நீ என் வயிற்றில் 

உருவான போத என்னை 

ஆனந்த்தில் ஆழ்த்தி விட்டாய்! 

நான் கொடுத்த முச்சுக்காற்றை நீ

விடுகையில் என் மனம் பரவச மடைகிறது!

முளைத்தெழும் விதைப் போல நீ 

வளர்ந்து வா அம்மாவின் மடியில் தூங்க!........


25/11/20

நிவர் புயல் கவிதை - கடலில் வாழும் கடல் நீ

நிவர் புயல் கவிதை:

niver puyal kavithai

கடலில் வாழும் கடல் நீ ❤

இந்த தூரல் (புயல்)

என்னை என்னசெய்து விடக்கூடும்?⛈️