22/8/24

பாரதியின் படைப்புகள்

 அழகிய நீர்த்தடாகம். பரந்து விரிந்து வானம். பச்சை நிற புல்வெளி.

பூத்துக் குலுங்கும் மலர்கள். மயில்களின் நடனம். பறவைகளின் கீச்சல்கள்.

கிளிகளின் பாஷைகள். தேன் குடிக்கும் வண்டின் முயல்கள்.

மரங்கள் ஒன்றொடொன்று உரசும் ஊடல்கள்.

இவ்வளவு இருந்தும் எனக்கு பசி இருந்தது.

தின்றால் போதும் என்று கூறும் அளவுக்கு 

வயிற்றுப் பசி இல்லை. செவிப்பசி ஆம்.

இத்தகைய சூழலில் மனம் மறந்து செல்லக்கூடிய நிலையில் கூட,

என் செவிகளில் எதோ ஒன்று குறைபாடாகவே இருந்தது.

ஆம் அதுதான் புண்பட்ட மனத்திற்கு

மாபெரும் ஊன்றுகோலாய் இருந்த பாரதியின் படைப்பு.

கடலில் மூழ்கிய உயிர் துறக்க எண்ணியவனுக்கு கை நிறைய

 முத்துக்களை பரிசாக கொடுத்தாள் கடல் அன்னை.

ஆம் எனக்கும் அப்படித்தான் இருந்தது பாரதியின் படைப்புகளை வாசிக்கும்
 போது.

0 Please share your thoughts and suggestions!: