22/8/24

காலம் வருமென காத்திருந்து

 வாகைசூடிய நிழலாய் வெந்தனலில் வாடி 

மறைந்து ஓடி எங்கோ மலையில் ஏறி

உயிரே நீயென் உறவோ ? மாயையோ ? - என

அலப்பறித்து கேள்வி கேட்கும் மாயவனே 

செங்கதிரோனும் அந்நிலவும் சாட்சி கூற  

உற்றோறும்  நட்போறும் நீதியோறும்  பெற்றோறும் 

 கண் அகன்று கயலால் காட்சிக்காண

 என்னோடு  உறவாடிய கூற்று மறந்தாயோ

பெண்ணே நீயென் உறவெனக்  கூறி 

இது மெய்யேயென பொய் உரைத்து 

காணும் காட்சியை கானல் நீராக்கி

இன்று மன்றாட வழி வகுத்தாயே 

தீயே காற்றே புவியே மழையே 

உயிரேயெனக் கவிபாடியே நெஞ்சில் உனை

வளர்த்து இன்று உள்ளம் பொசுங்க 

காலம் வருமெனக் காத்து இருக்கின்றேன் 

உன் பொய்க்கெல்லாம் பதிலடி கூறவே !

0 Please share your thoughts and suggestions!: