18/8/24

அன்று போல் இன்று இல்லை

 அன்று போல் இன்று இல்லை என்ற எண்ணம் அடிக்கடி வருகிறது...

ஒவ்வொரு முறையும் உனை பார்க்கும்போதும்

ஆசையுடன் சுவாசித்த கணம் இன்று இல்லை...

நாட்கள் நகர நகர ஏதோ மாற்றம் இயல்பா...??? 

இல்லை என் எண்ணமா....எதுவும் புரியவில்லை.

வெட்ட வெளியில் யாருமே தீண்டா வண்ணம் உனை காத்தேனே...

மழை கொட்டும் முன்பே மார்போடு அணைத்து உனை பார்த்தேனே...

நீ இல்லா இடத்தில் எனக்கில்லை நீராகாரம்..

நீ தந்த சுகம் நீளுமே நாள்தோறும்...

பலகாலம் வாழ்வாய் என நினைத்தேனே..

நமக்குள் பாதியிலே  புளித்தது ஏனோ காதலாங்க..........!!!!???

அட அம்மா செஞ்ச மாங்கா ஊருகாய்ங்க வர வர ரொம்ப புளிகிது.....!!!


0 Please share your thoughts and suggestions!: