18/8/24

நீயில்லா நேரம்

 நெற்றி வகிட்டில் பொட்டு வைக்காததற்கும்

மல்லி வேண்டாமென முல்லை சூடுவதற்கும்

மாலை வேளையில் ஓய்ந்து படுப்பதற்கும்

இட்டிலிக்கு எண்ணைப் பொடியை இணையாக்குவதற்கும்

தீண்டல் வேண்டாப் பொழுதுகளில் தள்ளியிருப்பதற்கும்

உனது அனுமதி தேவையெனில், நீயில்லா

 நேரத்தை கொண்டாடித்தான் தீர்ப்பேன்...

0 Please share your thoughts and suggestions!: