14/7/24

பெண்மையின் ‌பேரழகு

 அவள் பெண்மையின் ‌பேரழகு

என்னைப் பெற்றெடுத்த ஓர் அழகு

பதுசாய்  என்னை வளர்த்திட,

அவள் நெய்தால் ஒரு பஞ்சு மெத்தை

ஆனால் அவள் உறங்கியதோ ஒரு ஓலைப்பாய் ,

ஈரத்துணி இறுக கட்டி அவள் வயிறு பசியாறி,

ஈச்சம் பழம் இலந்தைப்பழம் என்றெல்லாம் எனக்கு அளித்தாள்,

ராணி என அவளை வைக்க ஆசைப்பட்ட ஏழை குழந்தை,

அவள் போன வழியெல்லாம் மலர் தூவி ஏங்கி நின்றேன்.......


0 Please share your thoughts and suggestions!: