8/1/20

புத்தாண்டே கற்றுக்கொடு - (கவிதை போட்டி)

new year kavithai in tamil

அமைதியினை அள்ளிக் கொடு
அன்பாய் இருக்க கற்றுக்கொடு

ஆழ்நெஞ்சில் ஈரம் கொடு
ஆட்சியர் நல்லாட்சிக்கு கற்றுக்கொடு

இல்லாமையை நீக்கிக் கொடு
இல்லறமே நல்லமாக்கிட கற்றுக்கொடு

ஈனர்களின் அழிவைக் கொடு
ஈகையை வளர்க்கக் கற்றுக்கொடு

உன்னத மனிதர்கள் அள்ளிக் கொடு
உண்மையுடன் செயலாற்ற கற்றுக்கொடு

ஊனமற்ற மனதைக் கொடு
ஊக்கம் வளர கற்றுக்கொடு

எல்லாம் எல்லாம் பெருக்கிக் கொடு
எளிமையுடன் வாழ கற்றுக்கொடு

ஏமாற்றங்களை நீக்கிக் கொடு
ஏற்றத்திற்கான முறையைக் கற்றுக்கொடு

ஒற்றுமையின் உன்னதம் கொடு
ஒன்றாய் இனைந்திட கற்றுக்கொடு

ஓலச்சத்தங்கள் அற்றுக் கொடு
ஓர் மனிதமெனக் கற்றுக்கொடு

ஔடதம் ஒழித்துக் கொடு
ஔவை வரிகளின் வாழ்க்கை கற்றுக்கொடு

கொடு புத்தாண்டே கற்றுக்கொடு
- அன்னமுரளி 

0 Please share your thoughts and suggestions!: