தனிமை கொள்கிறேன் யாவரும் நமக்கானவர் இல்லை...
என்று எண்ணும் நொடியில் என்னை தொட்டு செல்லும் தென்றலே!
நீ தொட்டு சென்றது எனக்காய் நீ இருக்கிறாய் என்றா?
என்று கேட்கும் கணத்தில் கன்னத்தில் அழகிய
முத்தாக மழைத்துளி விழுகையில் பேர் ஆனந்தம்...
எந்தன் கண்ணீராய் நீ வருகிறாயா எண்ணும்
தருணத்தில் சட்டென்று ஊணில் சூடானஒளி கண்டிப்பான
தந்தைப் போல் நீவீர் யாவரும் எமக்கான எண்ணும் கணத்தில்
இருள் சூழ மனம் உடைகையில்
மீண்டும் என்னை தொட்டு செல்லும் தென்றல்...
அவளை மேல்நோக்கையில் அழகிய அமுதமான அன்னை நிலா
என்னை கண்டு புன்னகைகிறாள் தாயாக,
கோடிக்கணக்கான நட்சத்திரம் என்னை கண்டு
மிளிர்கையில் கோடிஉறவுகள் கொண்டவளாய் மாறிப்போனேன்!
இயற்கை யாவும் எந்தன் உறவே







