26/11/23

கானல் காதல்

ஒரு பொன் மாலை பொழுதினிலே, ஓவியமாய் பெண்ணொருத்தி
 
அவளை என் ஒற்றைக் கண்களால் ஒருமுறை கண்டேன்...
 
 சேனைகள் ஆறாயிரம் அவளருகில், பாவனைகள் ஒராயிரம்
 
அவள் முகத்தில், நின்றது பெண்ணா பதுமையா என்ற ஐயம் ஓங்க...  

விழுந்தேன் காதலில், பின் அறிந்தேன் அவளை என் 

பகைவனின் மகளென்று! மனம் செய்வதறியாது திகைத்து 

விழித்தேன் தெரிந்தது கனவென்று புரிந்தது கானல் நீரென்று! 

0 Please share your thoughts and suggestions!: