6/11/23

நீ ஓர் வரையாத ஓவியம்

  இயற்கை  இயற்கையே ! நீ ஓர்  வரையாத ஓவியம்
  
பாற்கடலை அருவியாக்கி  வின்மீன்களை மலர்களாக்கி
 
உணர்வுகளை ஊமையாக்குகின்றாய் உன்னை ரசிக்கத்தான்

எத்தனை கண்கள் அட அடடா ! குயில்களின் கூக்குரலும்  

மயிலின் அழகிய நடனமும் கருமேகத்தின் குளிர்ந்த காற்றும் 

இடியின் மேளதாள இசையும்  வண்ண நிலவின் ஒளியும் 

 சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்களும்  உன்னை 

வரவேற்க காத்திருக்கின்றன  வானவில்லின் ஏழு வண்ணங்களும் 

 ஏழு ஸ்வரங்களாக இசைகின்றன   இயற்கையே ! 

நீயும் உயிர்களின் பிறப்பிடம்தான்  மனதின் மனப்போராட்டங்களும் 

 உன் மடியில் இறக்கிவிக்கப்படுகின்றன  உன்னை
                                                             
                                                                வர்ணிக்க வார்த்தைகளின்றி விடைபெறுகிறேன்                                                                                                   


0 Please share your thoughts and suggestions!: