21/11/23

கடவுளின் வடிவம் தாயாக

  "பசியோடு தாயிருப்பாள் இருந்தும் தன் பிள்ளைக்கு, தவறாமல் பால் கொடுப்பாள்! 
 
 புத்தாடை உனக்கு தந்து, கந்தலை புத்தாடையாய் உடுத்திடுவாள்!
   
சுடும் தரையில் அவள் நடப்பால் தன் இடுப்பில் உனை சுமப்பால்!
  
 பரீட்சைக்கு நீ படிக்க துணையாக விழித்திருப்பாள்!
 
  கருவிலே சுமந்த உன்னை மட்டுமன்றி, உன் புத்தகப் பையினையும் சுமந்திடுவாள்!
  
 தோல் அளவு வளர்ந்த உன்னை குழந்தை என்றே, குளிப்பாட்டுவாள்!
  
 முன்னாலே நீ நடக்க, பின் நின்று ரசித்திடுவாள்!
 
  பட்டத்தை நீ பெற, தாய் பட்ட கஷ்டத்தை சொன்னதில்லை!
 
  அன்பின் ஆழம் கடலாக, கடவுளின் வடிவம் தாயாக!!!   

0 Please share your thoughts and suggestions!: