7/1/24

மழையும் போர்தான்

 குண்டுகள் பொழிந்தன... ஆயுதம் இல்லாதவர்கள் சிதறி ஓடினார்கள்....
 
ஆயுதம் உள்ளவர்கள் கையை உயர்த்தினார்கள்.....
.
 துளியாய் சிதறின .... நடுங்கிதான் போனார்கள்.....
 
தாக்குதல் நடந்த‌பின்னரே போர் முரசு ஒலித்தது....
 
கதவுகள் சாத்தப்பட்டன... கூக்குரல்கள் இடப்பட்டன.....
 
மாடிக்கு ஓடினார்கள் காப்பாற்ற.... டீ கடைகள் குடிக்கப்பட்டன....
 
வடைக்கடைகள் நொறுக்கப்பட்டன... ரோட்டுகடைகள் காலி செய்யப்பட்டது...

 நான்கு சக்கரத்தால் இருச்சக்கரம் அடிக்கப்பட்டது..... 

சன்னல் வீடு ரசித்தது.. சனல் வீடு சபித்தது..மழையும் போர்தான்..

0 Please share your thoughts and suggestions!: