28/1/24

மகள் எழுதும் முதல் கவிதை

 அம்மா என்கிற அழைப்பும் , தாய்மை என்கிற தத்துவமும்

 ஒரு பெண்மையை உணர்ந்தவளுக்கு மட்டுமே தெரியும்.  

அம்மா  யாரோ நீ யாரோ நான், ஏனோ என்னை பெத்தெடுத்தாய்,

ஏனோ என்னை உருவாக்கினாய் உன் பாசமோ, 

கண்டிப்போ என்னை வளர்த்தது... உன் அன்போ,

அணைப்போ என்னை மிகைத்தது... உன் பாசத்தில் பாகுபாடு உண்டோ..

 உன் அன்பில் அரவணைப்பு உண்டோ.. உன் முத்தத்தில் காமம் உண்டோ..

 உன் பாதுகாப்பில் பயம் உண்டோ. இவை அனைத்தும் 

உனக்கும் எனக்கும் இடையில் மட்டுமே நிகழும் .. 

என்ன உறவோ இருந்துவிட்டு போகட்டும் . இறுதி வரை இருப்போம்.. 

உனக்காக நானும்,எனக்காக நீயும்.. 

அருகில் இருந்தால் அரவணைத்து சொல்லிருபேன, 

தொலைவில் இருக்கிறாய்.. தூது அனுப்புகிறேன் அம்மா  பிரியமானவளுக்கு 

உன் பிரியமுள்ள மகள் எழுதும் முதல் கவிதை...  

இறுதி சுவாசம் உள்ள வரை உன்னை காபேன் அம்மா ....


0 Please share your thoughts and suggestions!: