9/3/24

உன்னை நினைத்தேன்

          பசி என்று வந்தேன் உன் வறுமையை மறைத்து விருந்தளித்தாய்! 
                 
காலில் முள் குத்திவிட்டது என்றேன் உன் கத்தி காயத்தை
   
மறந்து மருந்திட்டாய்! தனிமையில் தவிக்கையில் 
  
உன்னை நினைத்தேன் தங்கமே என்று கண் முன் வந்து நின்றாய்

எதற்காக இத்தியாகம் என்றேன் என்னை மணமுடித்து அனுப்பிவிட்டாயே!!

0 Please share your thoughts and suggestions!: