13/3/24

புதிர் நிறைந்த புத்தாண்டே

 புதிர் நிறைந்த புத்தாண்டே உன்னை வா என்று அழைக்கின்றேன்.....

உன்னில் பயணிக்க ஆயத்தமாகிவிட்டேன்....

ஆண்டுதோறும் புதுமை நிறைந்தவனாக வருகின்ற உனக்குந்தான்

எத்தனை....எத்தனை முகங்கள்......வையகத்தில் உன்னை 

வென்றெடுத்தவனும் இருக்கின்றான் பலியானவனும் இருக்கின்றான்...

ஆயினும் நீ.....நீயாகவே இருக்கின்றாய்....மீண்டும் மனிதனுக்கான

ஒரு நம்பிக்கை அது உனது பிறப்பு.....உனக்காகத் தான் இங்கு 

நாளும் மாதமும்கூட நகருகின்றது....மனிதம் பேசுகின்ற ஆண்டாக வா...

மடைமையை கொளுத்துகின்ற ஆண்டாக வா..மனதோடு மனங்கள்

பேசுகின்ற ஆண்டாக வா..வேற்றுமையை வேறறுக்கின்ற ஆண்டாக வா...

உயிர்கள் யாவும் உய்கின்ற ஆண்டாக வா...பஞ்சபூதங்களும்

 சமநிலை கொள்ள நின்னை வா என வரவேற்கின்றேன்.......!

0 Please share your thoughts and suggestions!: