13/3/24

உன்னை தேடி என்னை தொலைத்து

 என்னை உன்னிடம் தொலைத்து உன்னை தேடி என்னை தொலைத்து 

மீண்டும் தேடி உன் கைகளை பிடித்து உயிர் தெளிந்தேனேடி... 

உன் காதலுக்கு மலர் தோட்டம் அமைத்து உன் கண்களுக்குள் 

வண்ணத்துப்பூச்சியை பறக்க வைத்து, உன்னை சிரிக்க வைத்து 

என் காதலை பெற்று கொள்வேனடி வானில் உன் முகத்தை 

முகிலினால் அமைத்து உன் கைகளை கோர்த்து நிலவை ரசித்து 

நட்சத்திரங்களை நம்மை பார்த்து பொறாமை கொள்ளும்படி 

செய்ய வைத்து உன் சந்தோஷத்தால் உயிர் மோச்சம் பெருவேனடி... 

நம் வாழ்க்கையை உன் கைகளுக்குள் அமைத்து என் உயிரை

உன் உயிருக்குள் கலந்து என் உலகை உன்னால் மறந்து 

வரும் காலம் யாவும் நான் உனக்கே சொந்தமடி

நான் உன்னை யாரும் இல்லாத அளவுக்கு காதலிக்கிறேன் 




0 Please share your thoughts and suggestions!: