20/3/24

பாலியல்

காலையில்  செய்திதாளில்  வாசித்த முதல்  வார்த்தை பாலியல்!

மேலும் தொடர மனம் மறுத்தது ஏனோ விரல் மட்டும் - அந்த

வரியில் இருந்து விலகவில்லை கண்ணும் விரலும் ஆலோசித்து

மனதை அமைதிப்படுத்தின. உதடுகள் எழுத்துகளை முனு முணுக்க

அந்த குழந்தையின் பெயர் குறிப்பிடவில்லை. ஆனால் வயது 

பன்னிரண்டு என்றிருந்தது எனது குட்டி தங்கை கண்முன்

வந்து போனால் - அந்த பச்சிளம் தன்னை மாய்த்துக் கொண்டால் 

ஏன் மாதவம் புரிந்திட வேண்டும். இப்படி மாய்த்துக்கொள்வா?

மேலும் வாசிப்பை ஆரம்பித்தேன் இதற்கெல்லாம் காரணம் கணக்கு வாத்தியாரம்

வேலி பயிரை கூடமேய்யும் ஆனால் -இங்கு விதையை விழுங்கி உள்ளது

கண்ணகி கலங்கி மட்டும் போயிருந்தால். அவளுக்கு வரலாற்றில் இடமில்லை.

கலங்கபடுத்தியவர்களை கலங்க வைத்தாள். கண் கலங்க அல்ல உடல் நடுங்க.


0 Please share your thoughts and suggestions!: