16/3/24

பிறந்த பிண்டமே வேண்டும்

மருந்தும் வேண்டா அமுதும் வேண்டா

இருந்தும் இருக்கா நிலையும் வேண்டா

விருந்தும் வேண்டா வருந்தும் நிலையும் வேண்டா

நிறைந்த அகமே வேண்டும் பிறந்த பிண்டமே வேண்டும்

திறந்த பார் அதிலே நிறைந்த பிணி அதுவாம்

தோல் போர்த்திய எலும்போ, வலிமை கொண்டு திகழ,

நடை ஓடும் பாரீர் தடை எதுவும் இல்லா

இது போதும் பாரீர் உயிர் மிதக்கும் அழகாய் 

உயிர் புதைக்க மணல் கொண்டு, தோல் உரித்த 

வெண்மை கோடு, தோல் உறுக்க அனல் கொண்டு,

மிஞ்சா வெண்மையே பொடி கொண்டு.
 
யாவருக்கும் இதுவே பாரீர்

நன்மை செய்திட்டு போவீர் பாரீர்!!!!!

0 Please share your thoughts and suggestions!: