6/3/24

நிலவின் ஒளியில் நடக்க ஆசை

 உன்னோடு அந்த நிலவின் ஒளியில் நடக்க ஆசை 

யாரும் இல்லாத கடல் மணலில் உன் கை கோர்த்து நடக்க ஆசை 

கூண்டுக்குள் இருந்த நான் உன்னோடு வெட்டவெளியில் பறக்க ஆசை

 உன் மார் சாய்ந்து தூங்க ஆசை என்றும்

 உன் முதல் குழந்தையாக இருக்க ஆசை    

 காதலன் என்றாலே என்னைக் கட்டிப் போட்டு 

அவன் கட்டுக்குள் வைப்பவன் என்று எண்ணினேன்

ஆனால் நீ என்னை கட்டி அணைத்து 

உன் நெஞ்சுக்குள் வைத்துக்கொண்டு இருக்கிறவன் 

இறைவன் நம்மை  இணைத்ததிற்கு ஒரு காரணம் உண்டு

அதை நாம் இணைந்து அறிவோம் (அறிந்து) செயல்படுத்துவோம்.

                                               

0 Please share your thoughts and suggestions!: