2/5/24

கடவுள் வடிவில்

 கடவுள் வடிவில் கருணை கொடுத்தாய்,

கருப்பையில் சுமந்து பெற்றாய்,

உன் கரம் பிடித்து உலகம் சுற்ற,

வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில்,

நல்லன்பு மட்டும் என்னிடம் கொடுத்தாய்,

பல வலிகள் கொண்டு உழைத்து,

உன்கரமோ காய்த்து போக,

என் பிஞ்சு கரத்தை மெருகூட்டினாய்,

உன் மனம் உடைத்து, என் மனம் படைத்தாய்,

உன் காலடி அடைய நான் என்ன செய்வேன்,

உன் வாழ்வை அடைய,

என் கண கொடிகளும் ஏங்க,

பல வழி உண்டு என்றாலும்,

எவ்வழியும் தொற்றுபோகும்,

உன் அன்பின் முன்னே,

கருணை வடிவ கடவுளின் முன்னே...❣️


0 Please share your thoughts and suggestions!: