25/10/23

தாய் தமிழ் கவிதை

 அண்டத்தை உனக்கு அறிமுகம் செய்ய குருதியை கொடையளித்து நீ பிறக்கையிலே! 

உன் அழுகுரல் செவித்து பூரிப்பவளும் தாயே ! கண்டங்கள் உன்னை நெருங்கா

 வண்ணம் கண்ணிமையென காத்து  நீ வளரையிலே! உன் கண்ணீரை கண்டு 

துடைப்பவளும் தாயே! புன்னகை மலராய்- நீ பூத்திருக்க கள்ளி முட்களின் மத்தியிலே

 வாழ்ந்து-நீ இளைப்பாற இலைகளின் நிழலென நித்தமும் நிறைவாய்-நீ வாழ

        அன்பென்னும் தொகையை மிகையாய் வழங்குபவளும் தாயே!       

தாய்




0 Please share your thoughts and suggestions!: