13/10/23

உண்டா தமிழ் கவிதை

வாழ்க்கை கவிதைகள்

 "மனதிற்கு அமைதி தரும்
கடல் ஆலைகளை இரசித்தது
உண்டா?...

உடலுக்கு புத்துணர்வு தரும்
நீர்வீழ்ச்சிகளில் குளித்தது
உண்டா?...

உள்ளத்தை கொள்ளைக்கொள்ளும்
மழை நீரில் ஆடியது 
உண்டா?...

முகத்தை மெல்ல வருடிச்செல்லும்
தென்றல் காற்றை உயர்ந்தது  
உண்டா?...

பச்சை பசுமையான 
வயல்வெளிகளை கண்டது
உண்டா?...

நண்பர்களுடன் ஒன்றாக
ஆற்றில் எதிர்நீச்சல் போட்டது
உண்டா?...

நுகர்ந்தவரை மதிமயக்கம்
பூக்களை நுகந்தது 
உண்டா...

அன்னாந்து தண்ணீரை தேடும் 
கருமேகங்களை பார்த்தது
உண்டா?...

கண்களுக்கு விருந்தளிக்கும்
சூரிய உதையத்தை பார்த்தது 
உண்டா?...

சிறுவயதில் மரங்களில் 
மரக்குரங்கு விளையாடியது
உண்டா?...

கடும் தாகத்தில்
மண்பானை நீர் அருந்தியது
உண்டா?...

இத்தனையையும் உணந்தவனுக்கு
தான் இயற்கையின் அருமை புரிவது

உண்டு."

காளையார்கோவில் - ப.பவித்திரன்

Kavithai Competition 2023 & 24

0 Please share your thoughts and suggestions!: