21/2/20

வாழ்க்கை என் கைகளில்

tamil super kavithaigal

சிந்தித்துப் பார்த்தேன்
சிறகை விரித்து
சிரிப்பை உரைத்து
சிறந்த சிற்ப்பமாக மாற

செதுக்க செதுக்க
சிதைந்து போகாமல்
சிந்தனை குறையாமல்
செம்மரமாய் நின்றேன்

உளுக்கிய போதெல்லாம்
உதிர்ந்து போகாமல்
உறுதியை விடாமல்
உண்மையாய் நின்றேன்

விழுந்த போதெல்லாம்
எழுந்து நின்று
விடா முயற்ச்சியுடன்
நகர்ந்துச் சென்றேன்

சந்திரக்கோளும் சந்தரப்பத்தால்
மாறுபட்டு நின்றாலும்
என்றும் நான்
ஒன்றில் நின்றேன்

வெட்ட வெட்ட
மரம் வளர்வதுபோல்
தட்டத் தட்டத்
தழைத்து நின்றேன்

சரித்து பார்க்கும்
மனிதர் இடத்தில்
சரியாமல் நானும்
நிலையாக நின்றேன்

இரவும் பகலும்
நினைத்துக் கொண்டேன்
நினைவில் மட்டும்
ஒன்று கொண்டேன்

தோல்விகள் பலநூறு
சந்தித்த போதிலும்
துவண்டு போகாமல்
நானும் நின்றேன்

வறுமையால் வாடினும்
வயிற்றுப்பசியால் பாடினும்
வெற்றியென்ற மலரைப்பெற
விதையாகப் புதைந்தேன்

வழியை அமைத்து
வலியை மறந்து
வாழ்வில் பறந்து
செல்ல வேண்டும்

என் வாழ்க்கை
என் கைகளில்
அல்லவா .....?

- தமிழ்த்தேன் கவிஞன்

Kavithai Competition

 

0 Please share your thoughts and suggestions!: