உணர்ச்சிகளை உறைய வைத்து அரண் அமைத்தேன் உள்ளுக்குள்
தமிழ் மொழி மட்டுமே என்பதால் கவிதைகள் எழுத களைப்பில்லாமல்
தன்னையே கரைக்கும் கவிஞனின் உயிர் மொழியே!
வெட்கத்தில் தலைகுனிந்தாயாயென நெல்மணியவே
நெகிழவைக்கும் எங்களின் நெடிதுயர்ந்த தமிழ்மொழியே.!
உள்ளுணர்வுகளை உணர வைத்தாய் உம்அருமை செம்மொழியால்!
திகட்டியதுதி கழ்ந்திருக்கும் உன் செந்தமிழை சுவைத்ததால்.!
அன்னை எனஅழைத்தோம் அடிகளால் அரவணைத்துக் கொண்டாய்.!
வாலேந்தியவன் தமிழ்வீரன் சொல்லேந்தியவளே எங்களின் தமிழன்னை!...
தேமதுரத் தமிழோசையே தென்தமிழாக எம்மனதில் தேங்கியது!..
வானமெல்லாம் விரிந்தது வலையோசை வையகம்விரிந்தது எம்தமிழோசை!
மலர்ப்போல் மலர்ந் திருந்ததால் மணம்போல் மனம்வீசுகிறாய்..!
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக