கருப்பு மீசைக்காரா, என் கவிதையின் ஆசைக்காரா,
முண்டாசு பாரதியே! முக்கடலின் கவிதை நாயகனே,
எட்டயபுரத்தின் எட்டா நாயகனே,
எங்கள் கவிதை கடலின் முத்தானவன் நீ!
கவிதை படைத்து கண்ணம்மாவை ஈர்தவன் நீ!
பாரதி காதலி கண்ணம்மா என்று வாழ்ந்தவனே!
கருநிற கண்ணனே கவிதை வடிவின் நாயகனே!
உன் உடலை விட்டு உயிர் பிரிந்தாலும்,
என்றும் பிரியாதே உன் கவிதைகள்!.......
0 Please share your thoughts and suggestions!:
கருத்துரையிடுக