12/2/25

நீரின் ஆழம்

 நீர் மூழ்கி கப்பலுக்கு தெரியும்

               நீர் ஆழமென்று  ஆனால்

போதை நீரிலேயே மூழ்கிக் கிடக்கும்

     ‌ ‌ஆண்களுக்குத் தெரியாது

நீரின் ஆழம் வாழ்க்கையின் ஈரத்தை

        அழித்து  விடும்  என்று

11/2/25

மனத்தில் உதித்திடும் வதனம்

 இரவில் தனித்திடும் தருணம்
 
            மனத்தில் உதித்திடும் வதனம்

அரைநொடி கண்ட முகம் - இருவர்

            ஆயுளை காட்டிய சுகம்

நின்னை நேரில் கண்டால் படபடப்பு

            என்னை ஆண்ட கடமை உன் கைபிடிப்பு.

6/2/25

வரதட்சணை

ஆசையுடன் அன்புகொடுத்து வளர்த்தபிள்ளையை, 

காசுக்கொடுத்து காவுகொடுக்கின்றோம்..... 

தன்பிள்ளை மணம் முடித்துப்போகும் 

இடத்தில் தயக்கம் இன்றி உபயோகிக்கக் 

கொடுக்கப்பட்டப் பொருள் மரபு.......

இன்றோ திருமணம் என்றாலே... 

திருடலாம் என சிலரின் கொள்கையாக மாறிவிட்டது........ 

ஆண்- பெண் இருவரிடமும், 

இருவீட்டாரிடமும் இருக்கிறது எதிர்ப்பார்ப்பு...... 

உன் வாழ்க்கையில் சேரப்போவது உன் பாதியோ, 

மீதியோ அல்ல.. உன் இணை என்பதை நினைவில் கொண்டு.... 

அளவற்றப் பொருளை அல்லாமல்.... 

அளவற்ற அன்பை எதிர்பாருங்கள்..... 


5/2/25

காதலுக்கு மொழியில்லை

மலைமீது வீசும் தென்றலே மலையாக வந்த காதலே

உன் பார்வை பார் போற்றும் கடலே என் பார்வை நீ போற்றும் அலையே

காதலுக்கு மொழியில்லை கண்கள் சொல்லும் வழியிது

எத்தனை எத்தனை காலம் வாழும் மேலும் மேலும் இந்தக் காதல்

சொல்லும் கதைகளைக் கேளு எண்ணில் அடங்காத இலைகளே

கண்ணில் அடங்காத காவியங்களே காற்றில் அடங்காத கற்பனையே

உன்னிலும் என்னிலும் எண்ணிலும் அடங்காத உணர்வுகளே..

காதல் இல்லாத துறைகள் உண்டோ காய்கள் இல்லாத கனிகள் உண்டோ

பிறர் மனம் காயப்படாமல் வாழ்ந்ததுண்டோ அன்புமழை பொழியட்டும்

அதில் காசில்லாமல் குளிக்கட்டும் மனித மானுடம் பூக்கட்டும்

காதல் எனும் கரைபோட்டு அன்பு எனும் மழையை நிரப்பிவிடுங்கள்

அதில் அனைவரும் குளித்துவிடுங்கள் இதைவிடத் தீர்த்தமில்லை

இனி வருத்தமில்லை காதல் கரைவதில்லை அன்பு மழை சுடுவதில்லை

அன்புப் பூக்களைத் தேடி அலைய வேண்டாம் ஆயிரம் பூங்காக்களே
 
உங்களைத் தேடிவரும் அன்பை உள்ளத்திலும் உதட்டிலும் வைத்துக்கொண்டால்

நண்பர்கள் கூட்டத்தைப்பார்த்து அன்புமழை பொழியத்தொடங்கியது..

துளித்துளியாய் தூறலிட்டது மேகக்கூட்டம் அலையலையாய் அள்ளிக்கொண்டது அன்புக்கூட்டம்

வண்ணங்கள் வேறு எண்ணங்கள் ஒன்று இது பூக்களின் பொன்மொழி

எத்தனை வண்னங்களில் பூக்கள் மழையால் மனப்பாடம் செய்யமுடியவில்லை

இறுதியில் வானவில்லை வரைந்து சென்றது எப்போதாவது தோன்றும் வானவில் அதிசயம்!

எப்போதும் தோன்றும் தோழமை அன்பு அவசியம !!
 
கோபம் கனிகள் சூழ்ந்த விதையாக இருக்கட்டும் 

கனியை சுவைத்துவிட்டு விதையை வீசி ஏறி குப்பையில்,

அது ஒருநாள் அன்பு மழையில் துளிர்விடும்.

4/2/25

என்னுயிரே

இன்றே வந்திடு என்னுயிரே!

விழியில் மோதி வாழ்வில் நுழைந்த

விடியலே ஔிவிளக்கே!

எழிலாய்ப் பேசி என்னைக் கவர்ந்த

ஏஞ்சலே என்னுயிரே!

வழியாய் நின்று பயணம் சிறக்க

வந்தஎன் வான்நிலவே!

செழிப்பைத் தரவே சிறப்பாய் சிரித்த

செந்தமிழ் சிறப்பினமே!

கனவில் வந்தே கவியாய் மாறியக்

காதலே கற்கண்டே!

தினமும் என்னை அன்பால் கொல்லும்

தேவியே தேனகமே

மனமும் உணவும் நீயாய் மாறி

மனத்தினை ஆள்பவளே!

தனமே தவிலே உலகே உயிலே

தவிப்பினைத் தந்தவளே!

என்றும் உன்னை நினைத்து நானே

ஏங்கியே வாடுகிறேன்!

சின்ன மலரே செந்நிற தேகமே

சீக்கிரம் வாயேன்டி!

பொன்னே புகழே புகழின் உருவே

பரவசம் தந்திடவே

இன்றே வந்தே என்னுள் இணைந்தே

என்னை வெல்லேன்டி! 

3/2/25

உலகத் தமிழ்

உணர்ச்சிகளை உறைய வைத்து அரண் அமைத்தேன் உள்ளுக்குள்
 
தமிழ் மொழி மட்டுமே என்பதால் கவிதைகள் எழுத களைப்பில்லாமல்
 
தன்னையே கரைக்கும் கவிஞனின் உயிர் மொழியே!

வெட்கத்தில் தலைகுனிந்தாயாயென நெல்மணியவே
 
நெகிழவைக்கும் எங்களின் நெடிதுயர்ந்த தமிழ்மொழியே.!

உள்ளுணர்வுகளை உணர வைத்தாய் உம்அருமை செம்மொழியால்!

திகட்டியதுதி கழ்ந்திருக்கும் உன் செந்தமிழை சுவைத்ததால்.!

அன்னை எனஅழைத்தோம் அடிகளால் அரவணைத்துக் கொண்டாய்.!

வாலேந்தியவன் தமிழ்வீரன் சொல்லேந்தியவளே எங்களின் தமிழன்னை!...

தேமதுரத் தமிழோசையே தென்தமிழாக எம்மனதில் தேங்கியது!..

வானமெல்லாம் விரிந்தது வலையோசை வையகம்விரிந்தது எம்தமிழோசை! 

மலர்ப்போல் மலர்ந் திருந்ததால் மணம்போல் மனம்வீசுகிறாய்..!

31/1/25

காதலிக்க நேரமில்லை

காதலிக்க நேரமில்லை என்னுள் உள்ள காதலையும்..
 
கரையுதடி நெஞ்சமே என்னில் உள்ள காதலை நினைக்கயிலே..!
 
வெல்லமடி உன் நினைவே என் காதலையும் கூறவில்லை..
 
தோன்றுமடி காதலிக்க உன்னை வர்ணிக்கும் வர்ணனைகளும் புலம்பயிலே...!
 
ஏங்குமடி கண்களும் உன்னை காணா உருகும் கண்களுக்கும் புரியவில்லை..
 
நீயே என் வாழ்க்கை நேரமென்று உனக்கும் ஏன் புரியவில்லை? 

28/1/25

இறைவன் செயல்

மனிதன் என்ன செய்தாலும் "இறைவன்" செயல் தான் இறுதி முடிவு..

ஆனால் அவர் முடிவு சுயநலமாக இருக்க வாய்ப்பில்லை..

அது நம் முன்னாள் தவறுகளின் பாடமாக வந்து அமைவதுதான்

இதன் தீவிரம் புரியாமல் மனிதன் கட்டுப்பாடு
 
என்றால் என்னவென்று தெரியாமல் சுற்றி திறிகிறான்
 
அதனால் நாம் நம் எண்ணங்களை மாற்ற முயற்சி செய்வோமா??
 
அதன் பயன் நாம் கொண்டாட காத்திருக்க முயலுவோமா???

25/1/25

நான் விரும்பும் இந்தியா

உண்மை மட்டுமே ஆள வேண்டும்!

பொய்மை மடிந்து வீழ வேண்டும்!!

வேலைவாய்ப்பு பெருக வேண்டும்!
 
நாட்டின் சாபமெல்லாம் கருக வேண்டும்!!
 
விஞ்ஞான உலகம் வளர வேண்டும்!
 
விவசாயி மனமும் குளிர வேண்டும்!!
 
ஊழலெல்லாம் ஒழிய வேண்டும்!
 
சட்டத்தின் ஓட்டைகள் யாவும் களைய வேண்டும்!!
 
தாய்மொழியை சுவாசிக்க வேண்டும்!
 
பிற மொழியையும் நேசிக்க வேண்டும்!!
 
மாநிலச் சண்டைகள் நீங்க வேண்டும்!
 
தேசபக்தி எங்கும் ஓங்க வேண்டும்!!
 
பெண்கள் பாதுகாப்பு நிலைக்க வேண்டும்!
 
குற்றங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்!!
 
இவ்வாறு என்தேசத்தை பார்க்க வேண்டும்!
 
பிற நாட்டினரும் என்தேசம் நோக்க வேண்டும்!!

நிறத்தில் வேறுபாடு

கருங்கல்லாலான கடவுளே! உன் முகத்தைக் கண்டால் வரம்..

கருநிற கண்ணிகையான என் முகத்தைக் கண்டால் சாபமா..!

கருநிற பெண்களின் காதல் கானல் நீராகவும்

கல்யாண ஆசை கனவாகவும் கருப்பு வெள்ளை புகைப்படமாயிற்று!

காகிதப் பூக்களாவும் கண்ணீர் கடலாகவும்

கருங்கல் மனமாகவும் கரைகிறது எங்கள் வாழ்க்கை!

கருப்பி, கருவாச்சியென ஊரார் பெயர்சூட்டி அழைக்க

கருப்பின் அடையாளமாகவே இவள் சித்தரிக்கப்படுகிறாள்!

நிறத்தில் வேறுபாடு காட்டும் நிலை (மக்களின் மனநிலை)
 
என்று மாறுமோ அன்றே என் வாழ்வும் மலரும்!

இறப்பு என்ற நான்கு எழுத்தில்

வாழ்கை "பிறப்பு"என்ற நான்கு எழுத்தில் தொடங்கி 

"படிப்பு"என்ற நான்கு எழுத்தில் கடந்து திருமணத்தினால் வரும்

 "பந்தம்"என்ற நான்கு எழுத்தில் நுழைந்து குழந்தை எனும் 

"துடிப்பு" என்ற நான்கு எழுத்தில் துளிர் விட்டு 

"இறப்பு"என்ற நான்கு எழுத்தில் முடிவடைகிறைது


உன் பார்வையில்

 உன் பார்வையில் என்னை மின்னல் படம்மெடுத்துச்செல்ல,

உன் கை வளையல் சத்தம் எழுப்பி சங்கதி சொல்ல,

உன் விரல்களோ என்திசைப்பார் என  வழிக்காட்டித்தள்ள,

உன் கால்கலோ மெல்ல, நல்ல நடைப்போட்டு என்னைக்கொல்ல,

உன் புன்னகையால் என் செவி கேட்க சந்திப்பிழைகள் பல செய்ய,

ஒருமுறை பாரடா என்னை என்று உடல்மொழியில்,

நீயும்,அருள்மொழி கூற உன் அருமை மொழி அறியாதவன் போல் நானும்,

கண்டும் காணமல், கடக்க புரிந்தும் புரியாதது போல் நடிக்க

காத்திருந்த கண்கள் சிவக்க, உன் கோபம்தனை இரசிக்க..

என்னவளே  உனை பார்த்து வியக்க, எனக்காகவே இவள் என்று நினைக்க!

காதல் தந்த போதையில் தழைக்க! சற்று ஏமாந்தப்பென்னே!

உன் முன்வந்து பின்னே, என் புன்சிரிப்பால் உன்னை திகைக்க,

காதல் கனத்தில் பிறக்க, கவிதை பல படைக்க,

அழகாய் அவள் முகம் சிரிக்க அடி அழகே உன்னை என்று என் கைகளில் இனைக்க?..

மௌனமோ தடுக்க, அதை இன்று உடைக்க, முதல் வார்த்தை விருந்து படைக்க,

சொல்லிவிடு இன்றாவது என் மனமே! அவளிடம், நீ தான் என் "பேகம்"! என்றும்..


அவனை கண்ட நொடி

அவனை கண்ட நொடி,
 
ஏனோ என் மனம் எங்கோ இருக்க,

என் விழி இரண்டும் அவனை நோக்க,

என் மனம் பதபதக்க,

அந்த நொடி நான் உணர்ந்தேன்

அவன் என் அருகில் வருவதை!

என் அப்பாவின் அரவணைப்பை

அவனிடம் உணர்ந்தேன்,

அன்றே தோன்றியது,

அவன் என்னவன் என்று! உன்னை!


மகாகவி பாரதியார்

கருப்பு மீசைக்காரா, என் கவிதையின் ஆசைக்காரா,

முண்டாசு பாரதியே! முக்கடலின் கவிதை நாயகனே,

எட்டயபுரத்தின் எட்டா நாயகனே,

எங்கள் கவிதை கடலின் முத்தானவன் நீ!

கவிதை படைத்து கண்ணம்மாவை ஈர்தவன் நீ!

பாரதி காதலி கண்ணம்மா என்று வாழ்ந்தவனே!

கருநிற கண்ணனே கவிதை வடிவின் நாயகனே!

உன் உடலை விட்டு உயிர் பிரிந்தாலும்,

என்றும் பிரியாதே உன் கவிதைகள்!.......

23/1/25

நம் உலகம்

தெருவோரம் சென்றேன்! கலங்கினேன் ஒன்றை கண்டு!

மனம் வெந்தது சென்றேன் அவரிடம் உணவு கொடுத்தேன் அவருக்கு...

எனக்கு அவர் கொடுத்ததோ ஆசிர்வாதம்!!! அவர் யாரென்று அறிவீரோ?

நம் பாட்டியை போன்ற ஒரு மூதாட்டி நான் பார்த்த மூதாட்டி கூறினால் 

நான் பெற்ற செல்வம் என்னைக்  குப்பையாக்கிவிட்டதே என்று... 

அவரை கண்டதும் என் நினைவுக்கு வந்தது என் பாட்டி கதைகள் சொல்லுவாள்!

கன்னத்தில் முத்தமிடுவாள்! சோறூட்டுவாள் வாழ்க்கைக்கு வழியும் காட்டுவாள்!

வரலாற்றை அறிவும் அவள் வழியில்...விஞ்ஞானம் அவள் காலடியில்...

மருத்துவச்சி என பெயரும் உண்டு அவளுக்கு! அதை அறியாத நாம் மண்டு!

அவள் இல்லையெனில் வரலாறு எங்கே! பணத்தை சேர்த்து என்ன செய்தோம் 

வரலாற்றை தொலைத்தோமே! வாழ்க தமிழ்நாடு! 


சொல்ல மனம் இல்லை

 தினமும் நினைக்கிறேன் உன்னை மறக்க இயலா மனதால்...💕

நீயே உலகமென வாழ்கிறேன் உணர்வால்....💕

உன்னோடு இருக்கும் நொடி சொர்க்கமும் எனக்கு துச்சமாகும்...💕

உனது ஒவ்வொரு செய்திகளும் வரமாகும்...💕

பார்த்த தருணமே பறிகொடுத்தேன் மனதை பார்த்து பார்த்து...💕

பரிதவித்தேன் நிழலாக உடன்வந்தேன் யாரோவாக...💕

கடல் அளவு காதலை மறைக்கிறேன் விதி மறுத்ததால்...💔

உன் செவகியாக வாழநினைக்கிறேன் பிரியத்தால் ...💕

உன் சந்தோஷமே எனக்கு போதும் என்று நினைப்பதால்...💕

மறைத்தேன் என்னையே மலையளவு பொய்களால் ....💕

நீ  ஒருநிமிடம் அழைக்கும் தொலைபேசியின் ஓசை இசையாகும்...💕

காத்துக்கடந்தது பல வருடமாகும் அதற்கு...💕

காலம் கடந்தும் உன் குரல் ஒலிக்கிறது செவியில்...💕

என்னசெய்தாய் என்னை இழந்து நிற்கிறேன்...💕

கனவுகளிலும் அழகு நீ என் நினைவுகளிலும் அழகு- நீ...💕

என்றென்றும் அழியா பேரழகு மனதில்..💕

நினைத்தாலே உன்னை புது புன்னகை புக்கிறது முகத்தில்...💕

அறிவேன் கானல் நீர் என்று...💕

என்றுதான் புரியும் நீ எனக்கு முக்கியம் என்றும்...💕

அன்றுதான் புரியும் என் முக்கியத்துவம்...💕

உன் நினைவுகளும் பொக்கிஷமே உடன் நீயும் என்றும்
 பொக்கிஷமே...💕

அன்றிலாக  துணை அல்லா அறியேன்..💕

நிலவோ நினைத்தேன் நிலவாகவே தோன்றிவிட்டாய் இருளில் இருந்தும்....💕

சொல்ல மனம் இல்லை...💕

22/1/25

உன் நினைவில்

உனை தேடி வருவேனே எனை உனக்கு தருவேனே
 
இமை மூடி இரவெல்லாம் உன் நினைவில் இருப்பேனே...

பகல் எல்லாம் உன் நினைவில் இரவெல்லாம் உன் கனவில்

இணைந்திருப்போம் என்றென்றும் ஏன் இந்த காதல் மட்டும்

கண்ணோடு தோன்றி கவிதையோடு மறைகிறது?

ஏன் என்று தெரியாமல் காதலும் காதலர்களும் கண்ணீரில் மிதக்கிறோம்...

பேராசிரியர்

சாதாரண கற்களாய் இருந்தவர்களை அழகிய
 
சிற்பங்களை செதுக்கிய எங்கள் பேராசிரியர்களே...
 
என்றென்றும் தொடரும் வாழ்க்கை பாதையில்
 
உங்கள் நினைவுகளும் சேர டைரி என்னும் வாழ்க்கை
 
புத்தகத்தில் கல்லூரியின் முதல் பக்கத்தில்
 
உங்கள் உரைகள் என்றும் வாழுமே...
 
துவண்டு போகும் நேரத்தில் கூட தூரல் போன்ற
 
உங்கள் வார்த்தையில் வளர்ந்த செடிகளை நாங்கள்.
 
உங்களோட கழிந்த நாட்களோ எங்கள் வாழ்வில் வந்த வானவில்.
 
வாழ்க்கைக்காக படிக்க வந்த இடத்தில்

வாழ்க்கையே படிக்க வைத்தவர்கள் நீங்கள்.
 
ஒவ்வொரு நாளும் உங்கள் குரல் கேட்டு கடந்த
 
எங்கள் நிமிடங்கள் போல் சுவை வேறொன்றுமில்லை.
 
அதில் கற்றறிந்த பாடமும் கண்மூடி சிரித்த சிரிப்புகளும் ஏராளம்...
 
ஒரு முறை கேட்ட பாடலை கூட மறுமுறை கேட்க

சோம்பல் படும் பொழுது, ஒருமுறை கூட கேட்க சலிப்பில்லாத 

உங்கள் குரலை என்னாலும் மறவாது எங்கள் நெஞ்சம்...
 
எத்தனையோ விடைத்தாள்களை திருத்திய உங்கள்
 
விரல்களும் ஒருபோதும் எங்களை அடித்ததில்லை...
 
கல்லூரி எனும் கூண்டை விட்டு பறக்க மாட்டோமா?
 
என ஏங்கிய எங்களை, இந்தக் கூண்டிலேயே சிறைப்பட மாட்டோமா?

என சிந்திக்க வைத்தவர்களும் நீங்கள்...
 
ஆசிரியர் என்றால் யார் என்று அடையாளம் காணும் நேரத்திலே

விடைபெறும் நேரம் வந்ததே, வருத்தத்துடன்
 
கூறும் வார்த்தை "நன்றி". என்ற ஒரு வார்த்தை மிகையாகாது,
 
இருந்தாலும் கேட்கின்றோம். உங்கள் புன்னகை எனும் பூக்களை தாருங்கள்...
 
மேலும் எங்கள் வாழ்க்கை துளிர்விட வாழ்த்துங்கள்... 

கனவோடு வாழ

உறவோடு தொடங்க உறக்கங்கள் தொலைந்தால்

உயிரோடு வாழும் நடைப்பின நாயகன் ஆவாய்

கனவோடு வாழ நிழலோடு விளையாடாதே

கதையோடு தொடங்க வாழ்க்கை திரைக்கதை ஆகாதே
 
துணையோடு தொடங்கினால்தான் வினை நடக்கும் 

என்றால் இங்கு விரலோடு எந்த மோதிரமும் சேராது

இரவோடு தொடங்கும் கனவுகளை இருலோடு பூட்டாமலல்

குரலோடு மூச்சி விடு தூங்கும் விழியோடு பாடுபடு

செயலோடு சேர்க்கை சரிவர வினையோடு வெற்றி வியர்வை 

துளியோடு விழுவதை பார்த்தால் எழுந்து நடப்பாய் முயற்சியோடு
 
மட்டும் அல்ல வாழ்க்கை‌ தந்த பயிற்சியோடு பயணம் செய்

21/1/25

அன்பு

 உன்னை முதலில் பார்த்த போது என்‌ வாழ்க்கை நீ என நினைக்கவில்லை

உன் அன்பை புரிந்த‌போது என்‌ வாழ்வே நீ என உறுதிகொண்டேன்

பாரதியாருக்கு செந்தமிழ் தேனாக பாய்ந்தது போன்று எனக்கு நீ பேசும் வார்த்தைகள் அப்படி தான்

உன்னுடன் பேசாத நாள் என் ‌வாழ்வில் அந்த நாள் ‌மாயமான நாளாக மாற்றிவிடும்

நீ என்னருகில் வந்து பேசும்‌‌ போது என்னையறியாமல் என்‌ இதழில் சிறு பூ மலரும்

இவை எல்லாம் காதல் அல்ல என்‌ தோழி மீது நான் கொண்ட அன்பின் வெளிப்பாடே!